நாள்: 08-12-2022

லூக்கா 19 ம் அதிகாரம்.
சக்கேயு எரிகோவின் தலைமை வரி வசூலிப்பவர். அதாவது ரோமானிய அரசாங்க பணியாளர். வருவாய் துறையில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர். அந்நாளில் மக்கள் அதிகமான வரி விதிக்கப்பட்டனர். மிக அதிக அளவு பணம் வரியாக செலுத்தவேண்டியிருந்தது . அத்துடன் வரிவசூலிப்பவர்கள் தங்களது பங்கையும் அதில் சேர்த்துக் கொண்டனர். வரிசெலுத்துபவர்களை பாதுகாக்க சட்டமும் இல்லை. எனவே இயேசுகிறிஸ்துவின் காலத்தில் வரி வசூலிப்பவர்கள் பாராட்டப்படவோ, விரும்பப்படவோ இல்லை. சக்கேயு நவீன உலகத்தில் வாழ்ந்திருந்தால் , இயேசு எரிகோவை கடந்து போவதை சமூக வலைதளங்கள் செய்திகள் , சுவரொட்டிகள் மூலமாகவோ தெரிந்திருக்க முடியும். ஆனால் அவர் இந்த இயேசுவைப் பார்க்க இருதயத்தில் நோக்கமாக இருந்தார். ஆனால் அங்கே மகத்தான கூட்டமாக இருந்தது. அவரது உயரமே அவருக்கு எதிராக இருந்தது. அவர் இயல்பிலே குள்ளமாக இருந்தார்.
அது அவரைத் தடுக்கவில்லை. அந்த கூட்டத்திற்கு முன்பாக ஓடி ஒரு மரத்தின் மீது ஏறி இயேசுவைக் காண்பதற்கு காத்திருந்தார். அதற்கு அவர் சமூக விதிமுறைகளை மீற வேண்டியிருந்தது. ஓடுவதற்கு தனது நீண்ட ஆடையை சிறிது தூக்க வேண்டும். யூத கலாச்சாரத்தில் ஆண்கள் ஓடமாட்டார்கள். கூட்டத்தினருக்கு அவரை பிடிக்காததால் அவரை பார்த்து சிரித்திருக்க வேண்டும் அல்லது அவரை வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் அது ஒன்றுமே அவரைத் தடுக்கவில்லை. சக்கேயு இயேசுவின் முன்னிலையில் இருக்க எந்த காரணத்தையும் கூறவில்லை. கூட்டத்தினருக்கு சாதகமான எதிர்ப்பின் மத்தியில் , இயேசு அவர் மரத்தின் மேல் இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக கீழே வரும்படி கூறினார்.
லூக்கா 19 : 5 – 6 ” இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது , அண்ணாந்து பார்த்து , அவனைக் கண்டு சகேயுவே , நீ சீக்கிரமாய் இறங்கி வா , இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான். “
இயேசு சகேயுவை அழைத்தது கூட்டத்தினருக்கு ஒரு கலாச்சார அதிர்வை கொடுத்திருக்க வேண்டும். இயேசு எப்படி ஒரு பாவியோடு பேச முடியும்? இயேசுவோ சக்கேயுவின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கவுன்சிலர் வீட்டிலோ,அல்லது மேயர் வீட்டிலோ அல்லது எம்எல்ஏ வீட்டிலோ அல்லது போதகர் வீட்டிலோ அல்ல. ஆனால் மக்களால் மிகவும் வெறுக்கக்கூடிய சக்கேயுவின் வீட்டில். இயேசுவின் பிரசன்னம் அவரை தன் குற்றத்தை உணர வைத்தது, செய்த தவறுக்காக மனம் வருந்தினார். அவரது வாழ்க்கை முற்றிலுமாக திரும்பியது.
மாற்கு 5 : 25 – 34. இப்போது நாம் உதிரப்போக்குடைய பெண்ணைப் சந்திக்கலாம். அவள் சுவிசேஷத்தில் 3 இடங்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறாள். லேவியராகமம் 15 : 25 – 27 ல் அவள் அசுத்தமானவளாக கருதப்பட்டாள். இதன்காரணமாக அவள் தனிமைப்படுத்தப்பட்டு தனியே வாழ்ந்தாள். அவள் தொட்டதெல்லாம் அசுத்தமானது. 12 வருடங்களாக மக்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாமல் மக்களால் தனிமைபடுத்தப்பட்டாள். அவள் சபிக்கப்பட்டாள் ,தூற்றப்பட்டாள். அவளது செல்வத்தின் பெரும்பகுதி சிகிச்சையை தேடுவதற்கும் மருத்துவரிடம் கட்டணம் செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டது. ஆனாலும் மருத்துவத் துறையால் அவளது பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. இன்னும் மோசமான நிலையையே கொடுத்தது. அவள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டாள். அநேகமாக தன்னை புத்திசாலியாக வைத்திருப்பது கடினம் என்று கண்டுபிடித்தாள். அவள் இயேசுவைப்பற்றி கேட்டறிந்தாள் . இந்த பிரச்சனையிலிருந்து குணமடைய விரும்பினாள். அவள் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படவில்லை. இந்த இயேசுவால் தன்னை குணப்படுத்த முடியும் என்று நம்பினாள். சட்டம் அவளை இயேசுவை சந்திக்க அனுமதிக்காததால் , ஒரு வியூகத்துடன் மக்கள் கூட்டத்திற்குள் நெருக்கியடித்து நுழைந்து, அவளை குணமாக்கும் சக்தி உடையது என்று நம்பிய அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள். இயேசு உடனடியாக திரும்பி, மிகுதியான விசுவாசமுடைய அந்தப் பெண்ணை பார்த்தார். மேலும் அவள் குணமடைந்தது மட்டுமல்லாமல் இரட்சிக்கப்பட்டாள் ( முழுமையடைந்தாள் ) என்று எண்ணினார்.
நாம் இயேசுவை சந்திக்காமல் இருப்பதற்கு நம்மிடம் நிறைய காரணங்கள் இருக்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணலாம். நாம் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்க்கலாம். இயேசுவை சந்திக்க ஒவ்வொரு விதியையும் மீறுவதற்கு நாம் தயங்காவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு முழுவதுமாக மாறும்.
இயேசு மக்களை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளங்களுக்கு, அவர்களுடைய பாவங்களுக்கு அப்பாற்பட்டு பார்த்தார். மக்களைப் பார்க்கும்போது இயேசுவின் கண்களோடு அவரது இருதயத்தோடு பார்க்க வேண்டும் என்று ஜெபிப்போம். எந்த நேரத்திலும் இயேசுவை நோக்கி ஓட தயங்காமலிருக்க ஜெபிப்போம். ஆமென்.
Sol. லலிதா மேனன்.
