தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21-10-2022

இயேசு அவனுக்குப் பிரதியுத்ரமாக, நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

யோவான் 13:7

நம்முடைய வாழ்க்கையில் என்ன தவறு இருக்கிறது, நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை நாம் இப்பொழுது  அறியோம்.ஆனால் இந்த வசனம் ஆண்டவரை  நம்பும்படி நமக்கு நினைப்பூட்டுகிறது. இப்பொழுது நாம் கடந்து போகிற காரியங்களை அறியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் அதை அறிவோம். நம் ஆண்டவரே எல்லாவற்றையும் அறிந்தவர்  

அவர் நம்முடைய நித்திய தேவனும், நம்முடைய இரட்சகரும், நம்முடைய பிதாவுமாயிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் நம் ஆண்டவர்  மீது நாம் வைத்துள்ள  நம்பிக்கையும் விசுவாசமும்தான்.

நாம் அவரையும் அவரது திட்டத்தையும் நம்பினால், நமது வாழ்க்கைக்காக,  நாம் கனவு கண்ட அனைத்தையும் அதற்கு மேலாகவும் நமக்குத் தருவார்.அதற்கு நம்பிக்கையும், பொறுமையும் தேவை.காத்திருக்கும் நேரத்தில் அவரை ஆராதித்து வரப்போகும் ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மனத்தாழ்மையுள்ள ஊழியக்காரன் போல் மற்றவர்களின் பாதங்களைக் கழுவும் வேலையை இயேசு செய்தார்.இந்த வேலை பின்னால் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று இயேசு எல்லாருக்கும் உறுதியளிக்கிறார்.

சீடர்கள் அதிகாரத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் லூக்கா 9:54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது , ஆண்டவரே , எலியா செய்ததுபோல , வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 

மாற்கு 9 :34 ல் அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆண்டவர் எருசலேமுக்கு ராஜாவாக வருவதை கண்டு உற்சாகப்பட்டார்கள் யோவான் 12 : 12, 13ல்

ஆனால் இயேசு தன்னை அவர்களுடைய பாதங்களை கழுவி எவ்வளவாய் தாழ்த்தினார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்

என்னுடைய முப்பது முதல் ஐம்பது வயதில் என்னுடைய வாழ்க்கையில், எனக்கு ஐந்து அறுவை சிகிச்சைகள், என்னுடைய கணவருக்கு ஒரு இதய அறுவை சிகிச்சை என்று ஒன்றன் பின் ஒன்றாக ஏன் இவ்வளவு துன்பங்கள் வந்தன என்று நான் அடிக்கடி யோசித்தேன். ஆனால், சகித்து நிலைத்திருப்பதற்கும் நம்பிக்கையோடு  இருப்பதற்கும் கடவுள் எனக்கு பொறுமையைக் கொடுத்தார்.

 கடவுள் என்னை தெரிந்தெடுத்து (எரேமியா 30:21) அவரிடம் நெருங்கிவர என்னை செதுக்கினார் என்பதை என் அறுபதுகளின் பிற்பகுதியில் நான் அறிந்து கொண்டேன்.

ஆம் ,ஆண்டவருடைய பிரசன்னம் எல்லாவற்றையும் கனியுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது அவருடைய பிரசன்னம் இல்லாதது எல்லாவற்றையும்- நமது அறிவு, சந்தோஷம்,  பொருள், வலிமை போன்றவற்றை பயனற்றதாக மாற்றிவிடுகிறது-,

அவருடைய பிரசன்னத்தில் நாம் நேரத்தை செலவிடும் போது அதனுடைய முக்கியத்துவத்தை இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு கால அளவில் நாம் அதை புரிந்து கொள்வோம் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் அவர் நம் வாழ்வில் ஆறுதல், அர்த்தம், முக்கியத்துவம் மற்றும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக மாற்றுவார்.

தினமும் ஜெபம் செய்வதிலும், அவருடைய வார்த்தையை தியானிப்பதிலும் உள்ள நேரம் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தை நாம் மிகவும் பொக்கிஷமாகக் கருத வேண்டும், ஏனெனில்  அது நம் வாழ்வில் பெரும் பலத்தையும் ஆறுதலையும் தருகிறது.

ஜெபம்

எங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்க அனுமதித்ததற்காக அப்பா உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம், எப்போதும் எல்லாவற்றிலும் உம்மீது நம்பிக்கை வைக்க உதவி செய்யும். என் விருப்பம் அல்ல உம விருப்பம் நிறைவேற என ஜெபிக்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்

Sol. Gigi Jacob.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-10-2022

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

மத்தேயு 28:6

இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதலின் மிக அற்புதமான நிகழ்வு. கல்லறைக்கு வெளியே உள்ள நாடகத்தில்தான் என் கவனம். இயேசுவின் உடல் கிடத்தப்பட்டது, கல் மீண்டும் உருட்டப்பட்டு ரோமானிய ஆளுநரின் அதிகாரப்பூர்வ முத்திரையால் மூடப்பட்டுள்ளது. பிரதான ஆசாரியருடைய காவலர் ஆயுதம் ஏந்திய, நன்கு பயிற்சி பெற்ற, நவீன கால கமாண்டோ பூனைகள் 24 மணி நேரமும் கல்லறையை யாரும் கிட்ட வரமுடியாத படி நன்கு

பாதுகாத்து வந்தார்கள்.ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் சுற்றி இருந்தனர். விடியற்காலையில் இருட்டாக இருந்தபோது மகதலேனா மரியாள் கல்லறை காலியாக இருப்பதைக் கண்டாள். சேனைகளின் கர்த்தர் உள்ளே இருப்பதை இராணுவம் அறிந்திருக்கவில்லை.

வானத்தையும் பூமியையும் படைத்த அவரை மரணமோ, கல்லறையோ அல்லது பிராதன ஆசாராயரின் காவலரோ பிடிக்க முடியவில்லை ஏனென்றால், அவர் உயிர்த்தெழுவார் என்று சொன்னார், அவர் செய்தார், உயர்ந்த பிதாவின் வலது பாரிசத்தில் அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் (எபிரெயர் 7:25.)

நான் கல்லறைக்குச் சென்றேன், கடவுளுக்கும் எனது முதல் மகன் பிரகாஷுக்கும் நன்றி, என் வாழ்க்கையின் சிறந்த பரிசாக இஸ்ரவேலுக்கு சென்றேன். அது உண்மையில் காலியாக இருந்தது. நான் உங்களை 1 சாமுவேல் 4 க்கு அழைத்துச் செல்கிறேன், சாமுவேலின் தலைமையில், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுக்கு எதிராக பேரழிவுகரமான முடிவுகளுடன் போரிட்டனர், ஓப்னியும்  மற்றும் பினெகாசும்  உட்பட முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். போர்க்களத்தில் இருந்த கடவுளின் பேழையை பெலிஸ்தியர்கள் கைப்பற்றி அஸ்தோதிற்கு எடுத்துச் சென்றனர், இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்த இஸ்ரவேலின் கடவுளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள், ஆனால் இப்போது தாகோனைப் போன்ற கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பினர். பேழை தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள் அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது

தாகோன், ஒரு கல் ஒரு பயங்கரமான இரவைக் கழித்திருக்க வேண்டும் என்றாலும், இரண்டு காலை வேளைகளிலும் அது பேழைக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தது. பெலிஸ்தியர்கள் இப்போது பயந்தார்கள், கடவுளின் பேழைக்கு மனித உதவி தேவையில்லை, அந்த 7 மாதங்களில் பேழை நகர்த்தப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடவுளின் பேழையை இஸ்ரவேலரிடம் திருப்பிக் கொடுக்க அவர்கள் தீவிரமாக விரும்பினர். அதை ஒரு புத்தம் புதிய வண்டியில் திருப்பி அனுப்பப்பட்டது, இதுவரை நுகம் கட்டப்படாத சிறந்த கறவை மாடுகளுடன், வண்டியில் அடைத்து, இழப்பீடு அல்லது அத்துமீறல் காணிக்கையாக தங்கம் ஏற்றப்பட்டது. பசுக்கள் கர்த்தருடைய பெட்டியுடன் நேராக இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான பாதையில் சென்றன

உயிருள்ள கடவுளின் தெய்வீக பிரசன்னம் அதில் இருந்ததால் பெலிஸ்தியர்களால் கர்த்தருடைய பேழையைத் திரும்பப் பிடிக்க முடியவில்லை. அப்போஸ்தலர் 16:25-28 குறிசொல்ல ஏவுகிற ஆவியை

 வெளியேற்றியதற்காக பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஆடைகளை கழற்றி, அடித்து உதைத்து, கால்களைக் கட்டியவாறு உள் அறைக்குள் வைத்தனர். அவர்கள் ஆண்டவரை சிறைச்சாலையில் ஆராதித்துக்கொண்டு இருந்தார்கள். ஏன் என்றால் ஆண்டவரை எழுப்பினவருடைய உயிர்தெழுததலின் வல்லமை தங்கள் மேல் வீற்றிருந்ததை அறிந்தார்கள். நள்ளிரவில் ஒரு நிலநடுக்கம் சிறைக் கதவுகளை உடைத்து அவர்களை விடுவித்தது.

ரிசுத்த ஆவியின் வல்லமை உங்களில் இருந்தால், நீங்கள் கர்த்தராகிய இயேசுவைச் சேர்ந்தவராக இருந்தால், பாதாளத்தின் எந்த பிசாசும் உங்களைத் தடுக்க முடியாது, எந்த தடையும் உங்களைத் தடுக்க முடியாது, எந்த சூழ்நிலையும் உங்களை பாதிக்காது, நம் கடவுள் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரை ஆராதிக்க வேண்டும்

ஜெபம்

அன்புள்ள பரலோகத் தகப்பனே, நாங்கள் உம்மை எங்களுக்கு முன்பாகவும் எங்கள் வலது பாரிசத்திலும் நிறுத்தி, நீர் ஒருவரே அற்புதங்களைச் செய்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருப்பதால் அசைக்கப்படாமல் இருப்போம்,

ஆமென்!    

Sol.Lalitha Menon

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-10-2022

நீங்கள் உலகத்திக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.”

மத்தேயு 5 : 14

இயேசு கிறிஸ்து நம்மை உலகிற்கு ஒளியாய் இருக்க  அழைக்கிறார். எவ்வாறு நாம் ஒளியாக மாற முடியும்? அதற்கான உன்னதமான வழி இயேசு ஒருவரே. அவர் இந்த உலகிற்கு வந்தபோது , அவரிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு அதை நாம் பிரதிபலித்தோம்.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை

1 யோவான் 4 : 5

தன் வாயின் வார்த்தைகளினால் ஒளியை உண்டாக்குவதற்கு முன்பாகவே தேவன் ஒளியாக இருந்தார். இந்த உலகத்திற்கு  வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் வெளிச்சத்தை தரக்கூடிய உண்மையான ஒளி இயேசுகிறிஸ்துவே.

மிகச் சிறந்த ஒளியாகிய இயேசுவை நாம் பிரதிபலிக்கும் விதமாக , நாம் இந்த உலகத்திற்கு ஒளியாக மாறவேண்டும். இயேசு , மாற்கு 4 : 21, 22 ல் விளக்கை தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி , மரக்காலின் கீழாகிலும் வைக்கிறதற்கு கொண்டு வருவார்களா? வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை” என்று சொல்கிறார்.

இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? யாரெல்லாம் இருளில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பது நமது கடமை. நாம் சிறந்த திட்டத்தோடு மக்களுடைய வாழ்வை வெளிச்சத்துக்குள் நடத்த வேண்டும்.

இயேசு விளக்கின் உவமையை சொல்லி  மக்களை உற்சாகப்படுத்தி அவருடைய சீடர்களை, பிரகாசிக்கிற ஒளியாக ஒளிந்துகொள்ளாமல் இருக்க சொல்லியிருக்கிறார்.

இந்த பிரசங்கம் இயேசுவின் சீடர்களை,அவரைப் பின்பற்றுவதற்கும் , அவருக்காக பாடுகள் அனுபவிப்பதற்கும் சவாலாகவே இருந்தது. இப்போதும் கூட, இந்த மதசார்பற்ற உலகத்தில் தேவனுடைய வார்த்தைகளை பொதுவிடத்தில் கொண்டு செல்வது  கடினமாகவே உள்ளது.தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ள நாடுகளில் கூட  நம்முடைய கருத்துக்களை அழுத்தமாக சொல்ல முடியாது. எங்கெல்லாம் முடியுமோ , நாம் இந்த வெளிச்சத்தை, இரட்சிப்பின் சுவிசேஷத்தை, நியாயத்தை , மீட்பை மக்களிடம் பரப்ப வேண்டும். தேவன் சொல்லித்தந்த உதாரணங்களையும் ,படிப்பினைகளையும் ,நம் வாழ்க்கையில் கடைபிடித்து நாமே மக்களுக்கு ஒளியாக மாற வேண்டும். பரிசுத்த ஆவியானவர் என்ற எண்ணையினாலும் பரலோகவாசிகளின் அனுதின உணவான வேத வசனங்களை அடிக்கடி  உட்கொண்டும்  நம் விளக்கை எரியச் செய்ய வேண்டும்.

1பேதுரு 2 : 9  ” நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு  வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் , அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள். ஆவியின்கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்  கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.

எபேசியர் 5 : 8 -12

அப்போஸ்தலராகிய பவுல் மேலும் சொல்லும்போது , தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து, சீர்கேடான விஷயங்களால் அல்ல , இயேசுவின் விலைமதிப்பற்ற  இரத்தத்தாலே நாம் மீட்கப்பட்டோம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்கிறார்.

” நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு , ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள் கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் ,தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு , எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிபில்லாமலும் செய்யுங்கள்.”

பிலிப்பியர் 2 : 14 – 16

நாம் எல்லோரும் உலகிற்கு ஒளியாயிருந்து , தேவனுடைய மகிமையால் நமது விளக்கு எப்போதும்  எரியும்படி காத்துக் கொள்வோம் .

ஆமென்.

Sol.Salomi kurian

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 18-10-2022

  ” பின்பு அவர் ஒரு மலையின்மேல்  ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார். அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.” மாற்கு 3 : 13

இந்த ஒரு நிகழ்வில் , இயேசு மலையின் மேல் ஏறி உட்கார்ந்து, தமக்கு விருப்பமானவர்களை அழைத்தார் என்று அறிகிறோம். ஆனால் நமக்குத் தெரியும் நம் ஒவ்வொருவரையும் இயேசு நேசிக்கிறார் என்பது. அவர் பாரபட்சமற்றவர். நம் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்தது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். மேலும் அந்த வசனத்தில் மக்கள் அவரிடத்தில் வந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று நம் தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நம்முன்னே இப்போது இருப்பது, நாம் அவரை நேசிக்கிறோமா அல்லது அவரை விட்டு விலகி இருக்கிறோமா?

நாம் வேதாகமத்தின் மூலம்,  இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு பெரிய மக்கள் கூட்டம்  அவரை பின்தொடர்ந்தார்கள் என்று அறிகிறோம். இயேசு அடிக்கடி மலையின் மேல் ஏறி, அங்கு உட்கார்ந்து தேவனுடைய வார்த்தைகளை போதித்தார். இயேசுவை பின்பற்றியவர்கள் எல்லோரும் அவருடனே மலைமேல் ஏறி அமர்ந்தார்கள். அவருடன் செல்ல சில மக்கள் தயங்கினார்கள். ஆனால் நிறைய மக்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, தன் கவலைகளின் பொருட்டு சில அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நினைத்து காத்திருந்து திரும்பினார்கள். ஆனால் சில மக்கள் அவருடன் நடந்து ,அவருடன் உட்கார்ந்து ,அவர் செல்லும் இடங்களில் அவருடைய பிரசங்கத்தை கேட்டார்கள் . மேலும் அவருடைய அற்புதங்களையும் கண்டார்கள். இவர்கள்தான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட சீடர்கள்.

நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், வெளிப்பாடுகளையும்  பெற வேண்டுமென்றால் அவருடனே இருந்து அவரை பின்பற்றி , களைப்படையாமல் அவர்மீதுள்ள விசுவாசத்தையும் இழக்காமல்  இருக்க வேண்டும். நாம் அவருடன் அமர்ந்து அவர் பேசுவதை கேட்பது அவசியம். நாம் தேவனின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து, எந்தவித சோம்பலும் களைப்பும் இல்லாமல், அவருக்கு கீழ்படிந்து  அவரைச் சார்ந்து அவருடனே வாழும்போது, அவருடைய வேலையை நம் வழியாக நிறைவேற்றுவார்.நாம் பிரசங்கிக்க தொடங்கி, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணரும்போது தேவன் வாக்குரைத்தபடியே அற்புதங்கள் நடக்கும்.

 மாற்கு 16 : 20 ல்  ” அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள் . கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து , அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.”

  மேலும் மாற்கு 3 : 15 ல் ” வியாதிகளை குணமாக்கி பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும் , அவர்களை ஏற்படுத்தினார்”. என்ற வசனத்தின்மூலம் அறிய முடியும். தேவன், பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைத் தந்தார். நாம் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தேவனின் வார்த்தைகளை பிரசங்கிக்கும்போது, இயல்பாகவே அற்புதங்கள் நடக்கும், சாத்தானை துரத்தலாம்.

எனவே நாம் இயேசுவின் சீடராக மாற விரும்பினால் , பிரசங்கிக்கவும், அற்புதங்கள் நடக்கவும், சாத்தானை துரத்தவும் , தேவனோடு நாம் அதிகநேரம் செலவளிப்பது அவசியமாகிறது.

மாற்கு 3 : 14 ல் “அப்பொழுது அவர் பன்னிரெண்டு பேரைத் தெரிந்து கொண்டு , அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் ,பிரசங்கம் பண்ணும்படியாத் தாம் அவர்களை அனுப்பவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 அப்பா பிதாவே, இந்த உலகத்திற்காக மரித்து, உமக்காகவே வாழ நீர் எங்களுக்கு உதவியதற்காக நன்றி. கிறிஸ்துவின் ஆவிக்குள் நிலைத்திருக்கவும்  , எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் சீடருக்குரிய தகுதியோடு வாழ கிருபை புரியும்.

ஆமென்.

Sol.Richa Jain

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 17-10-2022

குடும்ப ஜெபம்

 ” நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.”  யோசுவா 24 : 15

நான் திருமணம் செய்தபோது போதகர் முன்னிலையில் என்னுடைய திருமணத்தை பதிவு செய்த வேளையில், நீங்கள் கண்டிப்பாக தினம்தோறும் குடும்ப ஜெபம் செய்யவேண்டும் என்று கூறினார். இன்றைய கிறிஸ்த்துவர்கள் மத்தியில் நான் ஏன் குடும்ப ஜெபம் பண்ண வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. ஆண்டவர் வேதாகமம் மூலமாக நான் ஏன் குடும்பமாக கூடி அவரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் வேண்டும் என்று நமக்கு கற்றுத்தருகிறார்

” கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்பின்வரும் தன் வீட்டாருக்கும் : நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து , கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான். ” ஆதியாகமம் 18 : 19.

கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தை கொடுத்து விட்டு நிச்சயமாக ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கு கர்த்தர் முன்பாக நீதியாய் நடப்பதை அந்த வாக்குத்தம் நிறைவேற சொல்லிக்கொடுப்பான்  என்று நிச்சயித்து இருந்தார்.ஆபிரகாம் இதை எப்படி செய்ந்திருப்பார். குடுமபமாக அமர்ந்து கர்த்தரை பற்றி கற்றுக்கொடுத்து இருப்பார்

ஆதியாகமம் 25 : 22 ல்  ஈசாக்  ரெபேக்காளை திருமண செய்த போது அவளுக்கு கர்த்தரை குறித்த தெளிவு இல்லை. ஆனால் அவள் பிரசவத்தின் போது ஈசாக்கின்னிடத்தில் அல்ல ஆண்டவரிடத்தில் விசாரிக்கிறாள். ஈசாக் கர்த்தரை பற்றி சொல்லி கொடுத்ததும் அவர்கள் கர்த்தருடைய சமூகத்தில் செலவிட்ட நேரம் ரெபேக்காக்களுக்கு பிரசவத்தை குறித்த பயத்தை கர்த்தரிடத்தில் கொண்டு போக வைத்தது.

உபாகமம் 6 : 8

” நான் உனக்கு கட்டளையிடுகிற வார்த்தைகளை, உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும் வழியில் நடக்கிறபோதும் , படுத்துக்கொள்ளுகிறபோதும்,எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்து பேசி , அவைகளை உன்கையின்மேல் அடையாளமாகக் கட்டிக் கொள்வாயாக, அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாய் இருக்கக்கடவது. “

மோசேயும்கூட தன்மக்களுக்கு கட்டளையிடும்போது , உங்கள் குழந்தைகள் வீட்டிலிருக்கும் போதும், நடக்கும்போதும் எழுந்திருக்கும் போதும் ,படுக்கும்போதும் கர்த்தரின் கற்பனைகளை கற்றுக் கொடுங்கள் என்று சொன்னார். நாமும் நமது குழந்தைகள் சிறுவயதிலிருந்தே , கர்த்தரின் வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்படியாக சொல்லவேண்டும். அதற்கு சிறந்தவழி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குடும்பமாக ஜெபிப்பதுதான்.

லேவியராகமம் 23 ம் அதிகாரத்தில் , ஏழு பண்டிகைகளை குடும்பமாக சபையாக ஆசாரிக்க சொல்கிறார் என்பதை பார்க்கிறோம்.. குழந்தைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இறைவார்த்தையைக் கற்றுக் கொடுப்பதே இவ்விழாக்களுக்கு முக்கியக் காரணம். பாஸ்கா பண்டிகையை கொண்டாடும் போது, ​​ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தை புளிப்பில்லாத அப்பத்தை உண்ணும் போது, ​​ அப்பாவிடம் இந்த புளிப்பில்லாத அப்பம் சுவையற்றது. இதை  ஏன் சாப்பிடுகிறோம் என்று கேட்கும் போது நம் முன்னோர்கள் அடிமைகளாக இருந்தபோது எகிப்தில், ஒரே இரவில் கர்த்தர் அடிமை நாட்டிலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வந்தார்  , .அதைக் கொண்டாடவும் அதை நினைவுகூரவும் நாம்  புளிப்பில்லாத அப்பம்  சாப்பிடுகிறோம், ஏனென்றால் நம் முன்னோர்கள் அன்று இந்த புளிப்பில்லாத அப்பம் சாப்பிட்டார்கள். கூடார பண்டிகையில் குழந்தை கொண்டாடும் போது குழந்தை அப்பாவிடம் நாம் ஏன் இந்த கூடாரங்களில் வசிக்க வேண்டும் என்று கேட்கும்போது, நம் வீட்டில் வாழாமல், ஒரு காலத்தில் நாம் வீடில்லாமல் வனாந்தரத்தில் இருந்தோம், கர்த்தர் நமக்கு காட்டாத வீட்டையும் நடாத விருட்சத்தையும் கொடுத்தார் அதை நினைவு கூர்ந்து இந்த கூடாரங்களில் இருந்து நாம் கர்த்தரை மகிமை படுத்துகிறோம். நம் குடும்ப ஜெபத்தில் கர்த்தர் செய்த அதிசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.

அப்போஸ்தலர் 18 ம் அதிகாரத்தில் அக்வில்லா, பிரிசில்லா என்ற தம்பதியர் , தேவனிடம் விசுவாசம் கொண்டு அப்போஸ்தலராகிய பவுலின் ஊழியத்திற்கு குடும்பமாக ஜெபத்தோடு துணைநின்றார்கள்.

2 திமோத்தேயு 2 : 5 ல் அப்போஸ்தலராகிய பவுல் திமோத்தேயுவின் தாய் மற்றும் அவரது பாட்டியினுடைய விசுவாசத்தை பரிசோதித்து அவர்கள் அதில் உறுதியாயிருந்து திமோத்தேயுவையும் தங்களுடைய குடும்ப ஜெபத்தின் வழியாகவே  விசுவாசத்திலே வளர்த்தார்கள் என்பதை அறிந்தார்.

எனக்கு திருமணம் முடிந்தபோது என் மனைவியினுடைய ஆவிக்குரிய வாழ்வைப்பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் குடும்பமாக ஜெபிக்க ஆரம்பித்தபோது, ஒருநாள் தேவன் ஒரு தரிசனத்தை காண்பித்ததாக என் மனைவி என்னிடம் கூறினார். முதலில் அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு அந்த வெளிப்பாடு என்னைக் குறித்தும் என்னுடைய பயத்தைக் குறித்தும்தான் என்பதை தேவன் வெளிப்படுத்தினார். இப்போது நிறைய விஷயங்களை என் மனைவியின் வழியாக தரிசனத்தின் மூலம் தேவன் வெளிப்படுத்துகிறார். நாம் குடும்பமாக ஜெபிக்கும் போது நம்முடைய அன்றாட போராட்டங்கள் மாறுகிறது, குடும்பத்தில் வருகிற வாக்குவாதங்கள் தீர்கிறது, நம்முடைய குழைந்தைகள் ஆண்டவருடைய வார்த்தையை கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கர்த்தர் எப்படி குடும்பத்தை வழிநடத்தி ஆசீர்வதிக்கிறார் என்பதை பார்க்கிறார்கள்

எனவே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். குடும்ப ஜெபத்தை தவறாது கடைபிடிப்போம்

Sol. Leo