தானியேல் – II
நாள்:22-04-2022 – தேவ செய்தி

ச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்;


நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்..

சங் 52:8.


கர்த்தர் என்னுடைய பலன் என்று விசுவசிக்க கூடிய நீதிமான் மேற்கண்ட வார்த்தைகளை சொல்லுகிறான்,

பச்சையான ஒலிவமரத்திற்கு இரண்டு பொருட்கள் தேவை,

  • சூரிய ஒளி
  • தண்ணீர்

இங்கு பச்சை ஒலிவமரம் கர்த்தருடைய வீட்டில் வளர்கிறது.


தண்ணீர் மற்றும் சூரியஒளியின் ஆதாரம் என்ன?

ஒளியின் ஆதாரம்

வெளி 1:16

அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

தண்ணீரின் ஆதாரம்

யோவா 7:38

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

கர்த்தருடை முகத்தின் வல்லமையான பிரகாசம் ஒலிவமரத்தின் மீது பிரகாசிக்கிறது.


ஒலிவ மரம் பசுமையாக இருப்பதன் காரணம் அது கர்த்தருடைய பிரசன்னத்தில் நடப்பட்டுள்ளது.

அது தண்ணீரையும் சூரிய ஒளியையும் சார்ந்திருக்கும் பூமியில் நடப்படும் மரங்களைப் போல அது இருக்காது.

ஒலிவ மரம் தண்ணீருக்கும் சூரிய வெப்பத்திற்கும்கர்த்தரையே நம்பி இருக்கிறது.

ஓசியா 14:9

சொல்லுவது போல

அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை;

நாங்கள் குதிரைகளின்மேல்

ஏறமாட்டோம்; எங்கள் கைகளின்

கிரியையைப்பார்த்து:

நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்;

திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

கர்த்தருடைய பிரசன்னத்தில் வாழ்வதுதான் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. நம்முடைய ஆதாரம் கர்த்தராகத்தான் இருக்க வேண்டும். அவர் நமக்கு ஒளியாகவும் உயிர்தரும் நீராகவும் இருக்க வேண்டும். இதுதான் நம்மை பச்சை ஒலிவமரமாக வளர உதவுகிறது. மஞ்சள் நிறமுள்ள இலைகள் போதுமான வெளிச்சத்தைப் பெறவில்லை என்பதை காட்டுகிறன. (பெரும்பாலான தாவரங்களுக்கு 6 மணி நேர ஒளி தேவை.
ஜெபம்


தோட்டகாரரான எங்கள் பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் உம்மிடம் வருகிறோம். எங்கள் மீது கிருபையாய் இரும். என் துரோகத்தை குணமாக்கி என் மீது கருணை காட்டும். என் வளர்சிக்கு நீரே என் சக்தியாய் இரும். உம்மையே நம்பி இருக்கிறேன்.

ஆமேன்.


SOL.PINTA EUNICE, AOJ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *