நாள்:23-03-2022 – தேவ செய்தி
எசே 11:19 - அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தருவேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். ஏக இருதயம் என்றால் என்ன?
மனிதனிடம் மூன்று வகையான திறன்கள் உள்ளன. ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம். இந்த மூன்று துறைகளையும் ஒன்றிணைத்து முடிவெடுப்பது மனிதனக்கு கடினமான வேலையாகும்.
பவுல் சொல்லுகிறார்,
கலா 5:17 - மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
இந்த மூன்று திறன்களையும் ஒன்றிணைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நிறைவேற்றப்படும். ஆனால் இந்த முன்றையும் ஒன்றிணைப்பது ஒரு யுத்தம் போலாகும். எனவே அனைத்து எண்ணங்களையும் கிறிஸ்துவுக்கு கீழ்படிய சிறைபடுத்துபவர்களாய் இருப்பதுதான் வெற்றி.
இந்த வெற்றியை பெருவதற்கு ஒரு புதிய ஆவி நமக்கு தேவைப் படுகிறது. கர்த்தரால் மட்டுமே இந்த ஆவியை நமக்கு கொடுக்க முடியும். கர்த்தர் இந்த ஆவியை நமக்கு கொடுப்பதற்கு வாக்களித்திருக்கிறார்.
இந்த புதிய ஆவியை பெறும்வரை நாம் இருகிய மனமுடையவரகளாகத்தான் இருப்போம், கர்த்தருகும், மனிதர்களுக்கும் உணர்வற்றவர்களாகத்தான் நாம் இருப்போம்.
எசே 36:26 - உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
உணர்வற்ற இருதயம் கர்த்தர் மற்றும் மனிதருக்கு முன்பாக தன்னை தாழ்த்தாது. மமிசாமான, உணர்வுள்ள இருதயத்தை பெற்றால்தான் நம்மால் அதை செய்ய முடியும். ஒருவர் கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்திக் கொள்ளாவிட்டால், அந்த நபரை ஆசீர்வதிக்கவோ, கர்த்தருடைய குரலை கேட்கவைக்கவோ கர்த்தரால் முடியாது.
2நாளா 34:27 - இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்.
உழியத்தின் ஆரம்ப நாட்களில், வீடுகளிலே ஜெபிக்க நாங்கள் அழைக்கப்பட்டோம். ஒரு வீட்டில் என்ன பிரச்சனை என்று சொல்லாமல் அவர்கள் எங்களை ஜெபிக்கச் சொன்னார்கள். நாங்களும் அவர்களோடு ஜெபித்தோம். அப்போது கர்த்தர் அவர்களுடைய பிரச்சனையை ஒரு வசனத்தின் மூலம் வெளிப்படுத்தினார். எசே 11:18.
நாங்கள் ஜெபித்து முடித்தபின் மனைவி வந்து எங்களிடம் சொன்னார், நாங்கள் சினிமா தியோட்டர் வைத்திருக்கிறோம். அங்கு அதிகமாக நீலப் படங்கள் காட்டப்படுகின்றன. இந்த திரையரங்கு எங்களுடைய குடும்ப சொத்து. மாமனாரும் மற்ற மகன்களும் இதன் மூலமாக வரும் வருவாயை பங்குபோட்டுக்கொள்கின்றனர்.
அந்த வருவாயை விட்டுவிடவும், அப்படிப்பட்ட தொழிலைவிட்டு வெளியே வருமாறும் அவர்களை கர்த்தர் எச்சரித்தார்.
சில மாதங்களுக்கு பின் அதே குடும்பம் மீண்டும் எங்களை ஜெபிக்க அழைத்தார்கள். இதற்கு இடையில் ஒரு சோகமான நிகழ்வு அந்த குடும்பத்தில் நடந்துவிட்டது. அவருடைய சகோதரரின் மனைவி தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகப்பனும் 2 இரண்டு குழந்தைகள்தான் இருந்தனர். கர்த்தருடைய வழிகளையும், கற்பனைகளையும் கற்றுக்கொள்ள அந்த குடும்பத்தின் மூத்த மகனும் அவரது மனைவியும் எங்களுடைய ஒரு பயிற்சியில் கலந்து கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள், பின்னர் தைரியமாக அவர்களுடைய தகப்பனிடம் அந்த தவறை செய்ய வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார்கள்.
நாங்கள் போகிறோம், இந்த வருவாயிலிருந்து எங்களுக்க எந்த பங்கும் தேவையில்லை. அவர்களுக்காக தந்தை கட்டிய வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அந்த திரையரங்கிலிருந்து வரும் வருமானத்தையும் அவர்கள் முற்றிலும் கைவிட்டனர்.
கர்த்தர் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். தங்கள் வாழ்வில் இருந்த அருவருப்பான பழக்கவழக்கங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தபோது கர்த்தர் அவர்களுக்கு ஒரு ‘ஏக மனதை’ கொடுத்தார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Sr. Anitta, AOJ.
