தானியேல் – II
20-02-2022 – தேவ செய்தி

அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.

(லூக் 19:15)


இங்கு சொல்லப்பட்டிருக்கும் ஊழியகாரர்கள் சீடர்களை குறிக்கிறது அவர்கள் கர்த்தருடைய நியாயசனத்திற்கு முன்பாக தோன்றி தங்களைப் பற்றிய கணக்கை கொடுக்க வேண்டும்.
திரவியம் என்பது கர்த்தரால் நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் திறமை அல்லது பரிசு ஆகும். நாம்

1கொரி 12:8-11, கலா 5:22-23

ஐ நாம் வாசிக்கும்போது அவர் விருப்பம்போல நம் அனைவருக்கும் பரிசு/திறமையை கொடுக்கிறார். எல்லா மக்களையும் அவரிடம் ஒன்று சேர்பதற்கு தேவதூதர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஊழியகாரர்களாகிய நம்முடைய வேலையோ நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதகும்.

மத் 28:19

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ,…..


மத் 28:20

அவர் சொன்னது போல அவர் நமக்கு இந்த வேலையில் உதவி செய்வார்.
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்

நான் முழுவது இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவித்து விட்டேன் என்று பவுல் அப்போஸ்தலர் சாட்சி சொல்கிறார். அவர்காலத்தில் இப்பொழுது இருப்பது போல வாகனங்கள் இல்லை. நம்மைப் பற்றி நினைப்போம். நாமோ உலகத்தின் கடைசி நாட்களில் நின்று கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். ஊழியகாரர்களை எஜமானன் ஏன் அழைத்தார்? அவர்கள் எவ்வளவு சம்பாத்திருக்கிறார்கள் என்று பார்க்கத்தானே.


லூக் 19:15

இல் தன்னுடைய பணத்தை வைத்து வியாபாரம் செய்ய மூன்று ஊழிய காரர்களை அவன் நியமித்தான். 19:13 சொல்லுகிறது அதில் இரண்டு ஊழியக்காரர்கள் எஜமானனின் பணத்தை முதலீடு செய்தார்கள். அவர்கள் இருவரும் கனிசமான பணத்தை சம்பாதித்தார்கள். இவர்கள் இருவருக்கும் எஜமானன் பரிசளித்தான். அவர்களுடைய பதவியை உயர்த்தினான்.

அதே போல நம்முடைய தேவனும் உண்மையுள்ள சீடர்களுக்கு பரலோகத்தில் பரிசளிப்பார். மூன்றாவது சேவகன் பயத்தினால் எந்த ரிஸ்க்கும் எடுக்க வில்லை. எனவே பணத்தை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்தான். பணத்தை பத்திரமாக ஆனால் பயனில்லாமல் வைத்திருந்த சேவகனை எஜமானன் தண்டித்தார். அதேபோல பொய்யான சீடர்களையும், பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் ஈடுபடாதவர்களையும் கர்த்தர் நிச்சயம் தண்டிப்பார். பரலோக ராஜ்யத்தைப் பற்றி கவலைப்படாத சீடர்கள்தான் இவர்கள். இவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள திறமை மற்றும் பரிசுகள் இவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு உண்மையான சீடர்களுக்கு கொடுக்கப்படும்.

லூக் 19:24.
நாம் ஒரு மரத்தை நட்டால் தினமும் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் அப்போதுதான் அது கனிகளை கொடுக்கும். அதே போல நீங்களும் இயேசுவுக்காகவும் அவருடைய நற்செய்திக்காகவும் வாழ்ந்தால் நீங்கள் சென்ற பிறகும் உங்கள் குடும்பமும் சமுதாயமும் வளரும். இயேசுவோடு வாழ்வதற்கு நம்முடைய மனம் நல்ல சிந்தனைகளால் நிறைந்திருக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளால் நிறைந்திருக்க வேண்டும். ஜெப ஆவியால் நிறைந்திருக்க வேண்டும்,, எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்திருக்க வேண்டும்.


ஜெபம்


அப்பா பிதாவே எங்களை உம்முடைய நல்ல சேவகர்களாக மாற்றும். உலகபிரகாரமான பொருட்களுக்கு பின்னால் நாங்கள் ஓடக்கூடாது. நித்தியமான பரலோக வாழ்விற்கு பின்னால் மட்டுமே எங்களை ஓடுமாறு செய்யும். எங்களுடைய பரிசுகள்/திறமைகளுக்கான கணக்கை ஒரு நாள் நாங்கள் உமக்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்பொழுதும் எங்களுக்கு நினைவூட்டும்.


Sol. ANU (AOJ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *