தானியேல் – II 24-01-2022 – தேவ செய்தி

மரணத்தின் போது ஆத்துமாவை எடுத்துச்செல்ல தேவதூதர்கள் வருவார்கள்.
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்..

(லூக் 16:22).


ஆம் நாம் இறக்கும் போது தனியாக இருக்க மாட்டோம் என்று பைபிள் குறிப்பிடுகிறது. நாம் தகுதியுடையவராக இருந்தால் தேவதூதர்கள் நம்முடன் பரலோகத்திற்கு செல்லும் பயணத்தில் வருவார்கள். இந்த உவமையில் இயேசு மிகவும் துன்பப்பட்ட தரித்திரனைப் பற்றி சொல்லுகிறார். அவன் மரித்தப்பின் தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் நிறைந்த ஒரு நிலை, அங்கு அவன் தேற்றப்பட்டான்.
இதுதான் தேவதூதர்களின் சேவை, ஒரு விசுவாசி மரிக்கும் போது இவ்வாறுதான் செய்வார்கள்.
யோவான் 11:25-26 – இயேசு சொன்னார், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
அவர் நம்முடைய மரணதருவாய் வரை நம்மோடு இருக்கிறார்.


நம்முடைய பாவத்தின் காரணமாக நரகத்திற்கு செல்ல தகுதியுடையவர்கள் ஆனால் இயேசு நம்முடைய நீதிதீர்ப்பையும், நாம் அனுபவிக்க வேண்டிய நரகதண்டனையையும் தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் நமக்கு நித்திய வாழ்வை பரிசாக அளிக்கிறார, நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான் அதை பெற்றுக்கொள்ள வேண்டும்.


யோவா 5:29 – அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.


லூக் 16:22 இல் இரண்டுவகையான அனுபவங்களை பார்க்கிறோம், ஒரு நேரத்தில் தரித்திரனாகிய லாசர் செல்வந்தரின் கதவுக்கு அறுகில் மயக்கம் போட்டு விழுகிறான், அடுத்த நிமிடமே தேவ தூதர்கள் அவனை ஏந்திக் கொண்டு பரலோகத்திர்கு செல்கிறார்கள். இவ்வுலக வாழ்வில் அவனுடைய புண்ணை நக்கிய நாய்கள் மட்டுமே அவனுடைய நண்பர்களாக இருந்தன, ஆனால் அவன் மரித்தவுடன் தூதர்கள் அவனை வாரி அணைத்துக்கொண்டு பரலோகத்தில் அபிரகாமினிடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்
செல்வந்தனும் மரித்தான் ஆனால் தேவ தூதர்கள் அல்ல, கெட்ட தூதர்கள் அபிரகாமின் பக்கத்தில் அல்ல மாறாக நரகத்திற்கு அவனை கொண்டு சென்றார்கள்.
தேவதூதர்கள் நமக்கு உதவி செய்ய நமக்குகொடுக்கப்பட்ட பணிவிடை ஆவிகள். சில மாதங்களுக்கு முன் மோசே எனக்கூடிய ஒரு வாலிப விசுவாசி விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் உயிர்பிழைப்பது என்பது முடியாத ஒன்றாக இருந்தது ஆனால் ஒரு அற்புதம் நடந்தது. இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிர்ப்பின் வல்லமையை மோசேவின் மீது ஊற்றினார், 10 நாட்களுக்குள் அவனுக்கு புது வாழ்வு கிடைத்தது. இது பரத்திலிருந்து அவனுக்காக கொடுக்கப்பட்ட வார்த்தையாகும், அதே நாளில் அநேக நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். கர்த்தர்தான் மனித உருவில் தம்முடைய தூதர்களை அனுப்பி மோசேவை மருத்துவமனையில் சேர்த்தது, மருத்துவம் பார்த்தது, பணம் செலுத்தியது எல்லாம் என்று நம்புகிறேன். மோசேவோடு இருந்த இரண்டு விசுவாசிகளும் அவனை அட்மிட் செய்த மருத்துவமனையில் விடாமல் கர்த்தருடைய வார்த்தையை (வெளி 2:10) வெளியிட்டனர்.


மத் 25:46 -அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
நம்முடைய வாழ்க்கை ஒரு ரோஜக்களின் படுக்கை அல்ல, ஆனால் நமக்கு முன்னால் பரலோகம் உள்ளது, அங்கு நாம் எப்போதும் கர்த்தரின் முன்னிலையில் பாதுகாப்பாக இருப்போம் என்கிற இந்த பெரிய உண்மை நம்மை ஒவ்வொருநாளும் ஊக்கப்படுத்தி, திடப்படுத்துவதாக.


Sol. Poonam Batra, AOJ

தானியேல் – II 23-01-2022 – தேவ செய்தி

எல்லாவற்றையும்அநுபவிக்கஎனக்குஅதிகாரமுண்டு, ஆகிலும்எல்லாம்தகுதியாயிராது; எல்லாவற்றையும்அநுபவிக்கஎனக்குஅதிகாரமுண்டு, ஆகிலும்நான்ஒன்றிற்கும்அடிமைப்படமாட்டேன்

1 கொரி 6:12

சிலர் சொல்லுகின்றனர் – எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாயிராது.

எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு ஆனால் என்னை அடிமையாக்கும் எதையும் நான் அனுமதிக்க போவதில்லை. நான் வெற்றியாளராக இருக்க வேண்டும்.

கர்த்தரின் கிருபையைப் பற்றிய கிறிஸ்தவ போதனைகள் விசுவாசிகளுக்கு எதை ஏற்றுக்கொள்ளலாம் எதை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற நிச்சயமற்ற தன்மை இருக்கலாம்.

ஒருபுறம் கிறிஸ்துவில் இருப்பவர்கள் மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று வேதம் வலியுறுத்துகிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கையில் தடைசெய்யப்பட்ட விலங்குகளை உண்ணலாம் ஆனால் யுதர்களுக்கென இருக்கும் சிறப்பான விடுமுறைகளில் பங்கேற்க கூடாது.

மேலும்   1கொரி 6:11 இல் –  ஆயினும்கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

அந்த பரிவர்த்தனை முடிந்துவிட்டது. நாம் இரட்சிக்கப்பட்டோம். அப்படியெனில் நாம் விரும்புவதை ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது?

நாம் வேசிதனத்தில் ஏன் பங்குகொள்ளக் கூடாது? இயற்கையாக வரும் அனைத்தையும் ஏன் செய்யக்கூடாது? நம்முடைய சரீரம் விரும்புவதை ஏன் செய்யக்கூடாது?

இந்த கேள்விக்குத்தான் பவுல் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரமுண்டு என்று சொல்லுகிறார். ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாய் இராது என்கிறார். எல்லாம் நமக்கு உதவிசெய்யக்கூடியவை அல்ல. கொரிந்து சபை விசுவாசிகள் ‘சுதந்திரத்தை’ பாவம் செய்வதற்கு உரிமமாக பயன்படுத்தினர்.

1கொரிந்தியர் 6:15 இல் வேசியை பற்றிய குறிப்பை காணமுடிகிறது. “உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. நிச்சயமாக முடியாது.

கொரிந்து சபை கிறிஸ்தவர்கள் விபச்சார சேவையை பயன்படுத்த தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்தார்கள். இது கொரிந்து நகரில் கலாச்சார ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது உண்மைதான், பாவமோ மற்ற எதுவுமே  இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமுடியாது.

ரோமர் 8:38,39 – மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

எனவே இது நம்முடைய பாவ செயல்களை நியாயபடுத்துகிறதா?

இது விசுவாசிகளுக்கு ஒரு தவறான தரநிலை என்று பவுல் எழுதுகிறார்.

கிறிஸ்தவ சுதந்திரம் என்பது எந்தவொரு நடத்தைக்கும் அல்லது அணுகுமுறைக்கும் ஒரு சாக்கு போக்கு அல்ல.

கிறிஸ்துவில் நாம் இப்பொழுது என்னவாக இருக்கிறோமோ அதற்கு தகுந்தபடி வாழ, பவுல் நம்மிடம் கேட்கிறார். கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இதை ஏற்றுக்கொள்வார்களாக.

கிறிஸ்தவ வாழ்வின் தரத்தை நிர்ணயிக்க நாம் பார்க்க வேண்டியது – ஒரு பழக்கம் நமக்கு உதவிகரமாக உள்ளதா அல்லது அது நம்மை அடிமைப்படுத்துகிறதா என்பதைதான் என்று பவுல் வலியுறுத்துகிறார்.

செக்ஸ் என்பது உடலின் ஒரு செயல் மாத்திரம் அல்ல அதற்கும் மேலானது. திருமணத்தில் இரு நபர்களை ஒரே உடலாக இணைக்க கர்த்தர் இதை வடிவமைத்தார். மற்றொரு நபருடனான அந்த ஐக்கியம் கிறிஸ்துவை உள்ளடக்கியது. நாமும் அவருடைய ஐக்கியத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய சரீரம் உயிர்த்தெழ செய்யப்படும், நம்முடைய சரீரத்தின் மூலமாக நாம் கர்த்தருக்கு மகிமை சேர்க்க வேண்டும்.

“நான் ஒன்றுக்கும் அடிமைப்பட மாட்டேன்” – என்ற இந்த வசனத்தில்  பவுல் சொல்லுகிறார் நான் யாருடைய அதிகாரத்திற்கு கீழும் இருக்க மாட்டேன். (விபச்சாரியின் சரீரத்தில் நடப்பது போல).

எனவே, கிறிஸ்தவர்களிடையே, உணவுக்கான ஒரு சட்டத்தை பாலியல் தூய்மைக்காக பயன்படுத்த முடியாது.  

சிலர் கேட்கலாம், என்னுடைய சரீரத்திற்கு உணவு வேண்டும், நான் சாப்பிடுகிறேன், அதேபோல என்னுடைய சரீரத்திற்கு செக்ஸ் வேண்டும் எனவே நான் விபச்சாரியிடம் செல்கிறேன்.  இதில் என்ன தவறு இருக்கிறது?

சரீரமானது விபச்சாரத்திற்கு அல்ல . கர்த்தருக்காக, கர்த்தர் சரீரத்திற்காக.

பொருத்தமற்ற உணவுக் கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தும் அந்த சட்டத்தை பாலியல் ஒழுக்க கேட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்று பவுல் எச்சரிக்கிறார்.

நம்முடைய அதிகமான காம பசியின் காரணமாக நம் உடலை பாலியியல் ஒழுக்கக் கேட்டிற்காகத்தான் கர்த்தர் படைத்திருக்கிறார் என்று நாம் எண்ணலாம், ஆனால் கர்த்தர் நமது உடலை பாவம் செய்வதற்காக உருவாக்கவில்லை, ஆதாம்தான் பாவம் செய்தான். நம்முடைய உடல் விபச்சாரபாவத்திற்காக கர்த்தர் படைக்க வில்லை.

உயிர்த்தெழுதலின் போது நம்முடைய உடல் உயிர்த்தெழுப்பப்படும். எனவே உணவிற்காக  உடலோடு நாம் என்ன செய்கிறோமோ அதுவல்ல மாறாக பாலியல் சம்பந்தமாக நம் உடலோடு நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மை பாதிக்கும்.

வீரர். கீதா, தில்லி

தானியேல் – II 22-01-2022 – தேவ செய்தி

அதற்குஅவன்: அவர்கள்மோசேக்கும்தீர்க்கதரிசிகளுக்கும்செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்துஒருவன்எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்றுசொன்னான்என்றார்.

(லூக் 16:31)

லாசர் மற்றும் ஐசுவரியவான் உவமை மூலம் நியாயபிரமாணம், தீர்க்கதரிசிகள் மற்றும் பரலோக ராஜ்யத்தைப் பற்றி பேசுகையில் இந்த வார்த்தைகளை இயேசு பரிசேயர்களிடமும் அவருடைய சீடர்களிடமும் கூறுகிறார். இந்த வசனங்களின் மூலமாக ஏழை மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று அநேகர் நம்மிடம் சொல்ல நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் இயேசு இன்னொறு முக்கியமான ஒரு கருத்தை முன்வைக்கிறார், ஒருவன், நியாயபிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் மூலமாக கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் நம்ப வில்லை என்றால் மேன்மையான அற்புதங்கள், அடையாளங்கள்  மற்றும் சாட்சிகள் வீணாக போகும்.

அற்புதங்களை கண்டு மக்கள் அவர் மீது விசுவாசம் வைத்தார்கள், (யோவா 2:23). ஆனால் அவரை குறித்து தீர்க்கதரிசிகள் சொன்ன வாக்கைப்பற்றி அவர் பேசுகையில் அவருடைய அற்புதங்களை கண்டு அவரை பின்பற்றிய சீடர்களில் பலர் அவரை விட்டு பின்வாங்கி போனார்கள் (யோவா 6:60,66). நோயிலிருந்து குணமாக வேண்டும், விடுதலை பெற வேண்டும், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம், குடும்பம், தேசம் இவைகளைக்கு விடைதேடி அலைபவர்களுக்கு வெளிப்படையான அடையாளங்கள் கிடைக்காவிட்டாலோ அல்லது அவர்கள் நினைத்ததற்கு எதிராக நடந்தாலோ அவர்கள் விசுவாசத்தில் பின்வாங்கி போகிறார்கள்.  இன்னும் சிலர் அநேக அற்புதங்கள் அடையாளங்களை கண்டாலும் நம்பிக்கையில்லாமலும், கர்த்தருடைய வசனத்தை விசுவசிக்காமலும் இருக்கிறார்கள். ரோமர் 10:17 இல் கர்த்தருடைய வார்த்தையை கேட்பது இரட்சிப்புக்கான சத்தியத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்குகிறது என்றும் மேலும் இதில் ஒரு அடையாளத்தின் பங்கு இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என்றும் பார்கிறோம்.

என்னுடைய மாமாவின் மறைவுக்குப் பிறகு  என் அத்தை மிகவும் தனிமையாக இருந்தார்.  அவருடைய மகனும் மருமகளும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தது அவருக்கு இன்னும் வேதனையையும் சுமையையும் சேர்த்தது. அந்த வேளையில் அவருடைய இரண்டாவது பேரக்குழந்தை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என கேள்விபட்டு மிகவும் துடித்துப்போனாள். இயேசுவின் படை அணியின் மூலம் நடத்தப்படும் “பவுல் விடுதலைப் பள்ளி” இல் பயின்றபடி கர்த்தருடைய வார்த்தையின் மூலம் அவர் உதவி தேடினார். அதன் பலனாக அவருடைய மகனும் மருமகளும் ஒன்று சேர்ந்தனர் மேலும் பேரக்குழந்தை புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணம் பெற்றது. இந்த அடையாளங்கள் அவருடைய விசுவாசத்தை ஊக்குவித்தது ஆனால் வேத வார்த்தைதான் அவரை நம்பவைத்தது. இப்போது அவரது நோயிலும் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை என்றாலும் அறிகுறிகளை தேடுவதற்கு பதிலாக, விடுதலைதரக்கூடிய சத்தியத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.

ஒரு அனுபவத்தின் விளைவாகவோ, ஒரு தேவதூதர் தோன்றியதன் விளைவாகவோ, மரித்தோரிலிருந்து யாராவது திரும்பிவந்ததன் விளைவாகவோ அல்லாமல் கர்த்தருடைய வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். லூக் 16:17 – வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும் வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாய் இருக்கும். கர்த்தருடைய சேனையின் வீரர்களாகிய நாம் அவருடைய வார்த்தையில் கவனம் செலுத்துவோம், மேலும் நாம் யாரோடு வேதத்தை பகிர்ந்து கொள்கிறோமோ அவர்களிடம் அக்கறையாக இருப்போம், தரிசித்து நடவாமல் விசுவசித்து நடக்க நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.

Sol. Aphirancy

தானியேல் – II 21-01-2022 – தேவ செய்தி

என்பிரியமானசகோதரரே, கேளுங்கள்; தேவன்இவ்வுலகத்தின்தரித்திரரைவிசுவாசத்தில்ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில்அன்புகூருகிறவர்களுக்குத்தாம்வாக்குத்தத்தம்பண்ணினராஜ்யத்தைச்சுதந்தரிக்கிறவர்களாகவும்தெரிந்துகொள்ளவில்லையா?

யாக்கோபு 2:5

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. – மத் 5:3

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. (2கொரி 8:9).

இயேசு கிறிஸ்து அனைவரையும் சமமாக அன்பு செய்கிறார் மேலும் அவரிடம் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை என்பதை இந்த வசனங்களின் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.  தன்னுடைய பிள்ளைகள் ஏழை பணக்காரர்கள் இடையில் பாகுபாடு அல்லது பாரபட்ச்சம் காட்டுவதை அவர் விரும்பவில்லை. ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பரலோக சிங்காசனத்தை விட்டு இந்த பூமிக்கு வந்து அவருடைய வறுமையிலிருந்து நாம் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்பதற்காக அவர் ஏழைஆனார்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று அவர் மலைபிரசங்கத்தில் சொல்லியிருக்கிறார்.

 நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் மேலும் தன்னைத் தாழ்த்துபவர்களை அவர் முன் உயர்த்த விரும்புகிறார்.

நம்முடைய இருதயங்கள் மீது அவர் விருப்பமாய் இருக்கிறார். நம்முடைய இதயத்தின் மூலமாக அவர் பார்கிறார், நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர் நன்கறிவார். எப்போதெல்லாம் பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் வேத வல்லுனர்களும்  தங்களுடைய தந்திரமான வழிகளால் அவரில் குறைகாண வந்தபோது அவர்களது இருதயங்கள் மூலமாக அவர்கள் என்ன நினைத்தார்களோ அதையும் அவரால் பார்க்க முடிந்தது.

தேவன் அவர்களை நம்பவில்லை, ஆனால் அவர்கள் ஆச்சரியபடும்படி அவர்களுக்கு பதில் தந்தார்.

இன்றும் கூட தேவன் மனிதர்களின் இருதயங்களை நன்கறிவார் மேலும் அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

இயேசுவைப் பற்றி தெரிந்த பின்பும் அவரை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்பொழுதுமே ஏழையாகவே இருப்பர் மேலும் இந்த ஆன்மீக ஏழ்மையில் யாரும் அவருக்கு உதவ இயலாது.

தேவன் ஆர்வமாக இருப்பது நமது நம்பிக்கையே. விசுவாசத்திலும் அவருடைய வார்த்தையிலும் நாம் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் விசுவாசத்தில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஒருபோது ஏழையாக இருக்க மாட்டார்கள், ஏனென்றால் மிகப்பெரிய பொக்கீஷமாகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் கண்டுகொண்டார்கள்.

ஆனால் கர்த்தருடைய வார்த்தையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், எல்லா காலத்திலும் மேலான செல்வத்தை பெறுவார்கள்.

கோவாவில் உள்ள எங்களது அணிசபையில் ஒரு விசுவாசி இருந்தார். கர்த்தருடைய வசனத்தை கேட்பதிலும், விசுவாசத்திலும் உண்மையாக அவர் இருந்தார். அவர் கர்த்தருடைய வார்த்தையை விசுவசித்து ஏற்றுக்கொண்டார். அவருடைய நிலத்தை பயிர்ச்செய்ய அவரிடம் போதுமான பணம் இல்லை. சென்ற வருடம் அவரிம் இருந்த நெல்லை விற்கும்படியாக இன்னொறு அணிசபையின் உறுப்பினர் மூலமாக தேவன் பேசினார்.  அவர் அவ்வாறு செய்தபோது இரண்டுமடங்கு விலை கிடைத்தது. தன்னுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இருந்தது. நம்முடைய தேவனும் இரடசகருமான இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.

Sol. Luiza Kudchadkar AOJ

தானியேல் – II 20-01-2022 – தேவ செய்தி

,அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை;

 (ஏசாயா 9:7)

இவ்வுலகில் ஒரு அரசை நிறுவ இயேசு கிறிஸ்து வந்தார். அவர் காலத்தில் வாழ்ந்த  லூசிஃப்ரை தவிர வேறுயாரும் இதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் தங்களுடைய உண்மை நிலையிலிருந்து விழுந்த பிறகு அதன் மதிப்பையோ, பொருளையோ புரிந்துகொள்ள வில்லை. ஆனால் கர்த்தருடன் இருந்த லூசிபர் கர்த்தரின் மகத்துவத்தையும், குண நலன்களையும் அறிந்திருந்தான், அவனுடைய அபார ஞானத்தில் இயேசுவை சோத்தித்து, இயேசுதான் தன் தலையை நசுக்கி பூமியில் தன் ராஜ்யத்தை நிறுவ வந்த ராஜா என்று கண்டுபிடித்தான். இயேசு அதை நிறைவேற்றினார். அவர் பூமியில் ஆதாம் மற்றும் அவரது சந்ததியினரின் ஆதிக்கத்தை மீடெடுத்தார், மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆள்வதற்கான தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவினார்.

தன்னுடைய ராஜ்ஜியத்தை இந்த பூமியில் நிறுவ விரும்பும் எந்த அரசனும் முதலில் செல்வம், சொத்துக்கள், பொன், அரண்மனைகள் , இராணுவப் படைகள் போன்றவற்றைக் குவித்து தன்னை வலிமையாக்குவான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்த துவங்குவான்.

ஆனால் இயேசுவின் இராஜ்யம் முற்றிலும் மாறானது.

அது மனிதர்களுடைய இருதயங்களில் நிறுவப்படுகிறது.  அவர் மனிதனை சாத்தானின் பொய், வஞ்சகத்திலிருந்து காப்பாற்றுகிறார், அவர்களுடைய மனதில் சாத்தானால் கட்டப்பட்ட அரண்களை உடைத்தெறிந்து அவர்களை இருளிலிருந்து விடுவிக்கிறார். சத்தியத்தை அறிய அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பயம், தடைகள், கவலைகள், ஏமாற்றங்கள், நிராகரிப்புகள் அனைத்தும் மறைந்துபோயிற்று, இப்போது இந்த பூமியை அரசாள்பவர்களாக தங்களை கருதுகிறார்கள். அவர்கள் பூமி, வானம் மற்றும் கடல் ஆகியவற்றை ஆளத்தொடங்குகிறார்கள். (ஆதி 1:28).

இயேசுவினுடைய அரசின் தலைநகர் மக்களின் இருதயமே. ஒரு நபர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படியவும் தனது வாழ்க்கையை ஒழுங்கமைக்க தன்னை ஒப்புகொடுப்பதன் மூலமும் அவருக்கு விடுதலை கிடைக்கும். மனிதனால் உறுவாக்கப்பட்ட பாரம்பரியம், (பாரம்பரிய சபைகள்) மதம், ஜாதி, இனம் அனைத்து நுகத்தடிகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.  அவர்கள் ஒரு புதிய  ஒழுங்கு ஒரு புதிய உலகில் நுழைந்து புதிய இயல்பு மற்றும் பண்புகளுடன் புதிய சிருஷ்டியாக மாறுகிறார்கள்.  இது தொற்றக்கூடியது. இதயத்திலிருந்து இதயத்திற்கு, ஒரு வாழ்வில் இருந்து இன்னொறு வாழ்விற்கு தொற்றுகிறது. இதை அனுபவித்தவர்களால் இதைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கவே முடியாது.

இதுபோல இயேசுவின் அரசை மனித இருதயங்களில் நிறுவுவதற்கான பணி 2022 ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட பெந்தகோஸ்தே நாளன்றே துவங்கிவிட்டது. அது எருசலேமிலிருந்து அந்தியோக்கியா, ரோமாபுரி, கிரிஸு போன்ற பல நாடுகளில் இன்றும் உலகமுழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. லூசிபர் இதை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்தான் ஆனால் எங்கெல்லாம் அவன் முயன்றானோ அங்கெல்லாம் அது இன்னும் அதி வேகமாக பரவியது.  இது நபருக்கு நபர், வீட்டிற்கு வீடு, குடும்பத்திற்கு குடும்பம், நகரத்திற்கு நகரம் நாட்டிற்கு நாடு போன்றவாறு பரவுகிறது. இது எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிற குறைவதில்லை.

இது நிதி, கலாச்சார, மத சமூக மற்றும் அரசியல் தடைகள் அனைத்தையும் கடந்து செல்கிறது.

இயேசுவின் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவர்களில் முதன்மையானவர்கள் ரோமை பேரரசு அன்று இந்த முழு பூமியை உள்ளடக்கிய ஆட்சி அவர்களுடையதாகும்.   கி.பி 3ஆம் நூற்றாண்டில் ரோம பேரரசு பரிதாபமாக வீழ்ச்சி அடைந்து இயேசுவின் அரசுக்கு வழி வகுத்தது. ரோம பேரரசு இயேசுவை தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த அதிகரிப்பின் இரகசியம் என்ன?

இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தின் குடிமகனாக இருப்பவர் இருதயத்தில் அமைதி ஆட்சி செய்கிறது. ஜெயன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஒரு பையனின் வாழ்க்கை மிகவும் கவலைகிடமாய் இருந்தது. தன்னுடைய தாயோடு அவன்  தனியாக வாழ்ந்து வந்தான், அவனுடைய தாயும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனாள்.  தாயைபிரிந்த அவன் மன அழுத்தத்ற்கு  தள்ளப்பட்டான். ஆறு மாதங்கள் கழிந்தபின் ஒரு நாள் காலையில் அவனுக்கு கடுமையான மாரடைப்பு வந்தது மருத்துவர் அவனுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே கொடுத்தார். சிகிச்சை துவங்குவதற்க்கு முன்பாக அவனே அனைத்து கோப்புகளிலும் கையொப்பம் இட்டான். நாங்கள் அவனை சந்தித்த வேளையில் அவனால் தூங்க முடியவில்லை, சத்தமாக பேசமுடியவில்லை, கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்தான், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிக்க இயலவில்லை. நாங்கள் அவன் மீது மிகவும் பரிதாபப் பட்டோம், அவனை எங்களோடு தங்க சம்மதித்தோம். நாங்கள் அவனுக்காக ஜெபித்தோம். எட்டு நாட்களுக்கு பிறகு அவன் பேசினான், “நான் இப்போது நன்றாக இருக்கிறேன், உடல் சுகத்தைவிட  இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன், என்னால் நன்றாக தூங்க முடிகிறது, எனது கவலைகள் எல்லாம் என்னைவிட்டு நீங்கிவிட்டது.”

இது எவ்வாறு நடந்தது என்றால் இயேசு அவனுடைய இருதயத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டார். இயேசுவின் அரசாங்கத்தின் வளர்ச்சிக்கும் அதனுடன் சேர்ந்துவரும் சமாதானத்திற்கும் முடிவே இராது. இந்த அரசு முழு பூமியையும் நிறப்பும்போதும், அனைத்து மக்களையும் (கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்) இந்த இந்த அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும்போது பரலோகமே கீழே பூமிக்கு இறங்கிவரும் மேலும் புதிய வானமும் புதிய பூமியும் நிறுவப்படும். ஆம் அவருடைய அரசுக்கு முடிவே இராது. அது எப்போதுமே பெருகிக்கொண்டே இருக்கும்.

இதுதான் நம்முடைய அழைப்பு. ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் மக்களுடைய இருதயங்களில் இயேசுவின் அரசை கொண்டுவருவது. ஒவ்வொருவரும் சாத்தானின் பொய் மற்றும் வஞ்சகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசு கொடுக்கும் சமாதானத்தை அனுபவிக்க வேண்டும்.

Sr. Angelica AOJ   

தானியேல் – II 19-01-2022 – தேவ செய்தி

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது

லூக் 16:1

கர்த்தர் உலகில் ஒரு சக்திவாய்ந்த உருவம் மட்டுமல்ல, அவர் ஒரு அறிவார்ந்த வடிவமைப்பாளரும் கூட, உலகில் இருக்கும் அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது, உயிருள்ள மற்றும் உயிரற்றப் பொருட்கள், ஒரு சிறிய கூழங்கல் கூட அவருடைய சிருஷ்டிப்பின் வேலைதான். ஆதி அதிகாரம் 1 ஆம் அதிகாரத்தில் உலகின் மீது அதிகாரத்தை பய்னபடுத்தவும், அதை கீழ்படுத்தும்படியாகவும் சொல்லுகிறார். (ஆதி 1:26-28,).

வளங்களை அனுபவிப்பதற்கான கிருபை நமக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அதன் உரிமையானது அவரிடமே உள்ளது. லேவி 25:23-24 இல் நிலங்களை நிரந்தரமாக விற்பதை கர்த்தர் தடை செய்கிறார் ஏனெனில் அது அவருக்கு சொந்தமானது, நாம் சுற்றுச் சூழலின் பொருப்பாளர்கள். மனிதன் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் பூமியை கவனித்துக்கொள்ள தவறினால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி ஏசாயாவும் எரேமியா தீர்க்க தரிசனம் சொல்லுகிறார்கள். (ஏசே 24:4-6, எரே 2:7). லூக்கா 16:1 இல் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், மேலதிகாரி தனது உடைமைகளை வீணடித்ததற்காக செல்வந்தர் அதிருப்தி அடைகிறார். இந்த பூமியின் பொக்கீஷங்களை நாம் புத்திசாலித்தனமாக செலவு செய்திருக்கிறோமா என்று இந்த வசனத்தை மனதில் வைத்துக்கொண்டு நாம் நம்மை ஆராய்ந்து பார்ப்போம், .

இயற்க்கையின் பொக்கீஷங்களின் வகைகள் – சூரியன், காடு, மலை, கனிமங்கள், விலங்குகள், காற்று, எண்ணெய், தண்ணீர் மற்றும் நிலம்.

மேலே கொடுக்கப்பட்ட  – சூரியன், காடு, மலை இவைகள் இயற்கை வளங்களை காட்டுகிறது, அதே நேரத்தில் கனிமங்கள், விலங்குகள் மற்று காற்று, எண்ணெய், நீர் மற்றும் மண் – கழிவுகளை பிரித்தெடுக்கும் சுழற்ச்சியை காட்டுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று இவ்வாறு கூறுகிறது – தாதுக்கள், மரக்கட்டை, உலோகங்கள், புதைபடிவங்கள் மற்றும்  எரிபொருள் போன்ற 62 மில்லியன் டன் வளங்கள் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன என்றும் உலகின் இயற்கை வளங்களில் 1/5, ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 10 டன்கள் வீணாகின்றன. புள்ளி விவரங்கள் நம்மை  திகைக்க வைக்கின்றன. வளங்களை பயன்படுத்துதல் மற்றும் கழிவு உருவாக்கம் சுற்று சூழலை பாதிக்கின்றன. எனவே தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சரியான தேர்வு செய்ய வேண்டும்.

 யோவான் 6:1-15 (ஐந்தாயிரம் பேருக்கு உணவளிப்பது) இதன் மூலம் இயேசு எவ்வாறு மனிதர்களுடைய தேவைகளை அறிந்திருந்தார் என்றும், வளங்களை சரியாகவும் நியாயமாகவும் பகிர்ந்து கொடுத்தார் என்பது தெளிவாகிறது. இந்த கோட்பாடுகள் உலகில் இருக்கும் வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வளங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அவை நிலைத்திருக்கும். மனிதனின் அதிகப்படியான சுரண்டல், அதிக செலவு செய்தல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் வளங்களை வீணாக்கும் பண்பாடு, இவை அனைத்தும் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்த விடவில்லை.  வேதம் முழுவதும், மனித வரலாற்றில் கர்த்தரின் தலையீட்டைப் பார்க்கிறோம், கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வளங்களை  நாம் பராமரிக்க வேண்டும் அதை தவறாக பயன்படுத்தும்போது கர்த்தருடைய தீர்ப்பை கொண்டுவருகிறது. பில்லி கிரஹாம் ஒரு தடவை இப்படியாகச் சொன்னார், “அனைத்து மக்களுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள்தான் சுற்றுப்புறசூழலை குறித்து கவலைப்பட வேண்டும்.” அவர் வேததிலிருந்து விளக்கினார், கர்த்தர் உலகை படைத்து அதை காத்துக்கொள்ளுமாறு மனிதர்கள் கையில் ஒப்படைத்துள்ளார். பேராசையை அல்ல நம்முடைய தேவைகளை நிறைவேற்ற கர்த்தர் நமக்கு கொடுத்த  இந்த வளங்ககளை நாம்  எப்படி கையாளுகிறோம் என்று அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டு மக்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டியது என்னவென்றால், இயற்கை வளங்களை வீணாக்க கூடாது என்பது தான்.

கர்த்தருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் தலை வணங்கி நாம் இந்த பூமியை எவ்வாறு கையாண்டிருக்கிறோமோ அதற்காக மன்னிப்பு கேட்போம், மேலும் நம்மை ஆசீர்வதிக்குமாறு அவரிடம் ஜெபிப்போம்.

Sol. Nirmala Lazar

தானியேல் – II 18-01-2022 – தேவ செய்தி

உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.

லூக் 16:26

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தை  பற்றி தியானித்துக் கொண்டிருக்கையில் இரண்டு காரியங்கள் தெளிவாக தெரிந்தது. முதலாவது “இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும்,” இரண்டாவது,   அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் நரகத்தில் இருப்பவர்கள் பரத்திற்கு வர விரும்புவார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரத்தில் இருப்பவர்கள் நரகதிற்கு செல்ல விரும்புவது ஏன்? இந்த வசனத்தின்படி யாராலும் கடந்துச் செல்ல முடியாது. ஆனால் பரத்திலிருந்து நரகத்திற்குச் செல்ல ஏன் விரும்புவார்கள் என்று சிந்திப்போம். இவ்வுலகில் பல்வேறு சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவித்தப் பிறகு இப்போது சர்வவல்லமையுள்ள தேவனின் முன்னிலையில் பரலோகத்தில் மகிமையான செல்வங்களுடனும் இருப்பவர் ஏன் நரகத்திற்கு செல்ல விரும்ப வேண்டும்? இது உண்மையென்றால் நிச்சயமாக நித்திய வாழ்வை இழந்த தன்னுடைய உறவினர்களை காப்பாற்றுவதற்காகத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறு செய்ய நினைப்பது சாத்தியம் அல்ல.

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, (எபி 9:27).

என்னுடைய குடும்ப ஆல்பங்களைப் பார்ப்பது வழக்கம், இந்த உலகை விட்டுச் சென்ற குடும்ப உறுப்பினர்களை பார்த்து, இவர்களுக்கு இரட்சிப்பு கிடைத்ததா என்றும், அவர்கள் எவ்வாறு கர்த்தரை எதிர்கொண்டிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அநேக நண்பர்களும் நமது குடும்பத்தினரும் இரட்சிப்பை பெறவில்லை ஆனாலும் நமக்கு மத்தியில்தான் சாப்பிட்டுக்கொண்டும், குடித்துக்கொண்டும், பயணம் செய்து கொண்டும் இருக்கிறார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவருடைய கிருபையின் மூலம் இரட்சிக்கப்பட்ட நமக்கு மட்டுமே அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும்.

வேதம் சொல்லுகிறது, “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். (பிரசங்கி 7:2)

என்னுடைய தூரத்து உறவினர்கள், சில நண்பர்களின் மரணத்தை  கடந்த சில நாட்களாக நான் பார்த்தேன். ஆனால் இவர்களில் பெரும்பாலான நபர்கள் ஆண்டவராகிய இயேசுவை எதிர்கொள்ள தயாராகவே இல்லை.

ஆனால்  எபிரேயர் 10:22 இல் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.”

இரட்சிப்பு இல்லாமலும், இயேசுவோடு உடன்படிக்கை ஏற்படுத்தாமலும் அவர்கள் நித்திய வாழ்வை இழந்து விடுவார்கள்.  கர்த்தரை அறியாதவர்களை நாம் சந்திக்கும் போதும், அவர்களோடு உண்ணும்போதும், பயணம் செய்யும் போதும் ஒவ்வொரு ஆத்துமாவின் மீதும் கர்த்தருக்கு இருக்கும் பாரம் நமக்கும் வரவேண்டும். இப்படியாய் கர்த்தர் உங்கள் மூலம் அவர்களை காப்பாற்றுவாராக.

ஜெபம்: பரலோக பிதாவே உமக்கு இருக்கும் ஆத்தும பாரத்தை எங்கள் இருதயத்தில் ஊற்றுவீராக. இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களைப் பற்றி நாங்கள் கவலைபடவும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் படி எப்போதும் செயல்படவும், நீர் கொடுக்கும் இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொள்ளும்படியாயும் நாங்கள் ஜெபிக்கின்றோம். ஆமேன்.

Sol.Leo

தானியேல் – II 15-01-2022 – தேவ செய்தி

அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

லூக் 16:11

சீடர்களுக்கு இயேசு இந்த வசனத்தைச் சொன்னதின் மெய் பொருள் என்னவென்றால், தன்னுடைய சொத்துக்களை இவர்களிடம் ஒப்படைக்கப்போகிறார் என்பதுதான். அவற்றை புத்திசாலிதனமாகப் பயன்படுத்த அவர்கள் பொறுப்பெடுப்பார்கள் எனபதற்காகவே இப்படி சொன்னார். இவ்வாறு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய சொத்தை இயேசு கொடுத்துச் சென்றிருக்கிறார். நம்மிடம் இருப்பதெல்லாம் அவரிடமிருந்து வந்ததே. கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் அவரது பணம், திறமை, அதிகாரம், செல்வம், நிலம், வேலை, பதவி போன்றவைகளை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பு. ஒரு நாள் வரும் அப்போது கர்த்தர் நம்மை அழைத்து நாம் எப்படி இவைகளை பயன்படுத்தியிருக்கிறோம் என்று நம்மிடம் கணக்கு கேட்பார்.

பணம் பரலோகத்தின் நாணயம் அல்ல என்று இயேசு கூறுகிறார். உதாரணத்திற்கு உங்களிடம் இந்திய நாட்டின் பணம் அதிகமாக இருந்தும் வெளிநாட்டில் பட்டினி கிடக்கும் விசித்திரமான அனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். வெளி நாட்டில் பொருட்களை வாங்குவதற்கு வங்கிக்குச் சென்று உங்கள் பணத்தை நீங்கள் இருக்கும் அந்த நாட்டின் பணத்தில் மாற்ற வேண்டும்.

ஆனால் நாம் பரத்திற்கு போகும்போது அங்கு பரிமாற்ற வங்கிகள் எதுவும் இருக்காது.  நம்முடைய பணத்தை பரலோக நாணயமாக மாற்றும் சந்தர்ப்பம் இந்த உலகில்தான் உள்ளது. பரலோக வாசல்வரை நாம் காத்திருந்தோமேயானால், காலம் கடந்து போய்விடும்.

இயேசு கிறிஸ்து ‘உண்மையான செல்வம்’ மற்றும் ‘பொய் செல்வம்’ இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறார்.  பொய்யான செல்வம் இவ்வுலக செல்வமாகும், இதை நம்முடைய வங்கி கணக்கிலும் வங்கியிலும் அளந்து பார்க்கலாம். உண்மையான செல்வம் நித்தியமானது. மத் 6:19-21 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; பொருள்சார்ந்த செல்வம் உண்மையான செல்வம் அல்ல. உண்மையான செல்வம் வங்கிகள் நம்முடைய வங்கி எண்ணில் மதிப்பிடுவது அல்ல, மாறாக பரலோக வங்கியில் நாம் சேர்த்துவைத்திருக்கும் செல்வமே.

லூக் 21:1-4 இல் ஒரு ஏழை விதவை தன் வறுமையிலிருந்து இரண்டு காசுகள் போட்டாள், மற்றவர்களை பார்க்கிலும் இது மிகக் குறைவு ஆனாலும் இயேசு மற்றவர்களை விட இவள் அதிகமாக கொடுத்தாள் என்றும் , மற்றவர்களோ தங்கள் பரிபூரணத்திலிருந்து கொடுத்தார்கள் ஆனால் இவளோ தன்னுடைய ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.  லூக் 12:15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

அவருடைய திராட்ச்சை தோட்டத்தில் வேலை செய்யவும், அவருடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கவும், எல்லைகளை விரிவுபடுத்தவும், அவருடைய ஒளியை அந்தகாரம் நிறைந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லவும், அவருடைய தரிசனம் நிறைவேற  உழைக்கவும் அவர் நம்மை அழைத்துள்ளார் நாம் அவருக்கு இதற்கான கணக்கை கொடுக்க வேண்டும். நம்மிடம் அவர் ஒப்படைத்திருக்கும் அனைத்து தாலந்துகளுக்கும் ஒரு நாள் அவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

Sol. Dr. Mohan Parmar

தானியேல் – II 14-01-2022 – தேவ செய்தி

ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது

(ஏசா 45:1)

கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர் தகுதிபடுத்துகிறார் மேலும் அபிஷேகிக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தமது கிருபையாலும், வல்லமையாலும் நம்மை மேம்படுத்துகிறார். தேசங்களை ஆளவும், அவைகள் மீது அதிகாரம் செய்யவும் அவர் தனது வலது கரத்தை நீட்டி நம்மை பலப்படுத்துகிறார். கர்த்தருடைய அபிஷேகம் அல்லது அதிகாரத்தினால் அந்தகாரத்தின் அரசர்களையும் அனைத்து நாடுகளிலும் உள்ள அவர்களீன் பூமிக்குரிய பிரதிநிதிகளையும் அவர்களின் தற்காப்பு கவசத்தையும் உடைத்தெறிய முடியும்.  அழிவை விளைவிக்க கூடிய் அவர்களின் ஆயுதங்களிலிருந்து நாம் அவர்களை நிராயுதபாணியாக்க முடியும்.

எவராலும் பூட்டமுடியாத கதவுகளை நமக்காக தேவன் திறந்து வைப்பார்.  யாராலும் பறிக்கவோ தடுக்கவோ முடியாத கர்த்தரின் வல்லமையையும் அதிகாரத்தையும் பூமியில் நிரூபிக்க அவர் நமக்கு வாய்ப்புகளை கொடுப்பார். நமக்கு ராஜா கோரேசைப் போல ஒரு மண்புடைய மற்றும் நித்திய இலக்கு உள்ளது. கோரேசு மன்னன் தன்னை ஒரு வேலைகார ராஜாவாக கண்டார் மேலும் உயிருள்ள தேவனை சேவித்தார். அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வழியில் நாம் அனைவரும் ஊழியகார ராஜாக்கள். கோவிலையும் எருசலேமையும் மீண்டும் கட்டுவதற்கு கோரேசு அபிஷேகம் செய்யப்பட்டது போல பூமியில் கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கு நாமும் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய அழைத்தலை முழுமையாக்குவதற்கு பரலோகத்தின் வளங்கள் மற்றும் கர்த்தருடைய சேனை நம்மோடு உள்ளது.

தம் மக்களுக்கு முன்னே செல்வதற்கும் மலைகள் போல பெரியதாக கடக்க முடியாத தைடைகள் வந்தாலும் அவைகளை அகற்றுவதற்கு கர்த்தர் உறுதியளிக்கிறார். எவ்வளவு பலமான கதவுகளாக இருந்தாலும் அவருடைய வல்லமையை தாங்க முடியாது. மறைக்கப்பட்ட பொக்கீஷங்களை நம் கைகளுக்கு கொடுக்க வெண்கல கதவுகள் வழியாககூட அவரால் போக முடியும்.  இஸ்ரவேலின் தேவனைப் பற்றி எதுவும் தெரியாதபோதும் கர்த்தர் கோரேசை அழைத்ததுபோல தனிப்பட்ட முறையில் நம்முடைய முதல் பெயரைச் சொல்லி நம்மை அழைக்கிறார். அவர் யார், எப்படிப்பட்டவர், அவருடைய வல்லமை மற்றும் அதிகாரத்தின் அளவு, அவரை நம்புபவர்கள் மீது அவரின் மிகுந்த அன்பு ஆகியவற்றை மிக விரிவாககூறவும் அவரை அறிந்து கொள்ளவும் கர்த்தருடைய வார்த்தை நமக்கு மிகவும் நன்மையாக உள்ளது.

நமக்கு எதிராக எழும்பக்கூடிய எந்த சாத்தானுடைய தீய சக்தியாக இருந்தாலும் அமைதியின் ராஜகுமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் நம்மால் தோற்கடிக்க முடியும். நம்முடைய உள்ளார்ந்த அரண்களாகிய பயம் மற்றும் சந்தேகத்தால் இந்த சக்திகள் நம்மை கொல்லவும் அழிக்கவும் பலவீனபடுத்தவும் முயற்சிக்கின்றன. சில தீய சக்திகள் நம்மைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது இதனால் நமக்கு உள் காயங்கள் ஏற்படுகின்றன. சில நமக்குத் தெரியாமல் தந்திரமாக நம்மிடம் இருந்து  ஆசீர்வாதங்களை திருட முயல்கின்றன. சாத்தானின் சக்திகளின் வரிசை 666 அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள், நமக்கு எதிரான தீய செயல்கள் என எண்ணிக்கொண்டே போனாலும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இவை ஒன்றுமே இல்லை. கர்த்தரின் பிரசன்னம் ஒரு மேகத்தைப் போல நம்மைச் சூழ்ந்து கொண்டு, நெருப்பைப் போல நம்மை பாதுகாப்பதாலும், அவர் நம் வலகரத்தைப் பிடித்து நம்முடைய வாழ்வின் எல்லா முக்கியமான பகுதிகளிலும், முடிவுகளிலும் நம்மை வழிநடத்துவதால் 666க்கு மேல் நம்முடைய வெற்றியை நாம் உறுதியாக நம்பலாம். ஒரு வருடத்தின் 365 நாட்களில் சராசரியாக ஒன்று முதல் இரண்டு அந்தகார ராஜாக்கள் நம்மை தாக்குகிறார்கள். இவ்வுலகில் நாம் இருக்கும் போதே இந்த தீய சக்திகளின் ஆயுதங்களை உரித்துப் போடலாம், நமக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் அவைகளின் சக்தியை செயலற்றுப் போகச் செய்ய முடியம்  என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

கர்த்தரால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ராஜாக்களின் அதிகாரத்தை நாம் பயன்படுத்தும் போது சாத்தானின் கோட்டைகள் இடிந்து விழும், நம்முடைய மன அல்லது உணர்வுகளின் அமைதியை திருட அருகில் கூட  அதனால் வர முடியாது, நம்முடைய முழு ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தின் ஆரோக்கியதிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.  நம்முடைய வருமானத்தில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது, நம்முடைய நற்பெயர், உள் உணர்வுகள், உறவுகள் நம்முடைய நிகழ்காலத்தையோ, எதிர் காலத்தையோ அல்லது நித்திய காலத்தையோ எந்த பாதிப்பையும் அவைகளால் ஏற்படுத்த முடியாது.

Bro. Prateep Philip IPS, DGP(Rtd) Chennai

தானியேல் – II 11-01-2022 – தேவ செய்தி

மனுஷர்ஒடுக்கப்படும்போதுதிடப்படக்கடவர்கள் என்று நீர்சொல்ல, தாழ்ந்தோர்ரட்சிக்கப்படுவார்கள். –

யோபு 22:29

இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தான் நம்மை வீழ்த்த விரும்பிகிறான். ஆனால் கர்த்தரை ஆராதித்து, அவருக்கு நம்மை ஒப்புகொடுத்து அடிபணியும்போது நம்மை உயர்த்தி நமக்கு உதவும் ஒரே உண்மையான தேவன் அவர் மட்டுமே.

நான் உங்கள் அனைவரோடும் என்னுடைய சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த ஆண்டு பெருந்தொற்றின் காரணத்தால் எங்களுடைய பள்ளியில் முழு ஊதியம் எனக்கு கொடுக்கப்பட வில்லை. அக்டோபர் 25, 2021 இல் பள்ளி மீண்டும் திறந்தது. பல நாட்கள் பள்ளிக்கு வராததன் காரணமாக மாணவர்கள் அனைத்யையும் மறந்து விட்டனர். நன்றாக திட்டமிட்டு மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேலை செய்தேன். ஆசிரியர்களுக்கும் இதற்காக பயிற்சி கொடுத்தேன்.

சம்பள நாள் வந்தது. அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் எனக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. என் இதயம் பாரமாக இருந்தது, நான் மிகவும் மன்முடைந்து போனேன். சம்பளத்திற்காக மட்டும் அல்ல, என்னுடைய கடின உழைப்பையும் அவர்கள் அங்கீகரிக்க வில்லை. நான் மிகவும் கலக்கம் அடைந்தேன். ஆனாலும் கூட ஜெபித்தேன் கர்த்தருக்கு நன்றி சொன்னேன். இது டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடந்தது.

என்னுடைய மகளின் உயர்கலிவிக்காக எனது குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர் திட்டமிட்டனர். டிசம்பர் 18 ஆம் தேதி என்னுடைய தோழி என்னை அழைத்தாள், நேர்முக தேர்வு ஒன்று உள்ளது நீ அதில் கட்டாய்ம் பங்குகொள்ள வேண்டும்,, என்றாள். இது உம்முடைய சித்தமானால் தேவனே என்னை அங்கே அனுப்பும் என்று ஜெபித்தேன். கர்த்தர் ஏசாயா 64:4 மூலமாக என்னோடு பேசினார்,  நீ களிமன்; நான் உங்களை உருவாக்குகிறவர்” நாம் இந்த தேர்வில் பங்குகொண்டேன். தேர்வு 6 சுற்றில் நடந்தது. எல்லா சுற்றையும் கடந்து சென்று வெற்றி அடைய எனக்கு புத்திசாலித்தனம் கொடுத்தது கர்த்தர்தான். ஏற்கனவே நேரடி வகுப்பு துவங்கி விட்டதால், நல்ல சம்பளத்தோடு பெங்களூரில் ஒரு மதிப்புமிக்க கலிவி நிறுவனத்தில் சீனியர் அகாடமிக் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். உடனடியாக வேலையில் சேருமாரு என்னை அழைத்தனர். நானும் ஜனவரி 3 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன்.

HR என்னை வரவேற்றார் மேலும் சிறிது நேரம் காத்திருக்குமாறு சொன்னார். இதற்கிடையில் தலைமை ஆசிரியை  என்னை சந்தித்து நான் சேருவதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டார். அதற்கு பின் மீண்டும் அவரை சந்தித்த வேளையில், கர்த்தருக்கு நன்றி சொல்லுமாறு அவர் என்னிடம் சொன்னார். அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். அதிகாலை 3 மணி அளவில் ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும்,அதில், 3ஆம் தேதி அன்று வருபவர்களுக்கு பணி நியமனம் செய்யுமாறும் மற்றவர்களுக்கு 4 மாதம் கழித்து வரும்படியும் சொல்லவும் என்று எழுதியிருந்ததாம்.

நான் தாழ்வில் இருந்தபோது கர்த்தர்தாமே தன்னுடைய நீதியின் கரத்தினால் என்னை தூக்கினார். எல்லா மகிமையும் அவருக்கே. ஆமேன்.

ஏசா 12:2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

Sol. Preethi Bosco