நாள்: 2,ஜூலை 2022.
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசா 53:5
அன்பான, இரக்கம் நிறைந்த தேவன் ஒருவர் நமக்கு உண்டு. நாம் அவரை கேட்பதற்கு முன் நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீது நம்பிக்கை வைத்து, நம்முடைய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், நீதி 3:5,6.
உலகத்தின் சிந்தைகள் சில வேளைகளில் கர்த்தரிடம் நமக்கு இருக்கும் உறவை துண்டிக்கிறது. அதனால் நாம் சுயத்தின் மீது சாய்ந்திருக்கிறோம், மேலும் உலக பிரகாரமான பொருட்கள் நம் வாழ்வை கட்டுப்படுத்த துவங்குகின்றன. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதி 10:22.
ஒரு நாள் திடீரென மிகவும் மோசமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டேன். அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது ஆனால் பலன் ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுவதும் நான் அலர்ஜிக்கான மருந்துகளை எடுக்க வேண்டி வரும் என எனது மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் புதிய மருந்துகளை, ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறித்தினர். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எந்து தாயாரும் சகோதரியும் நம்பிக்கை இழக்கவில்லை. விடாமல் தொடர்ந்து எனக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பலனாக ஒரு நாள் நான் அதிசயமான முறையில் சுகமானேன், தினமும் மருந்து எடுக்க தேவை ஏற்பட வில்லை. அந்த வியாதி மீண்டும் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றும் ஆனால் ஓரிரு நாட்கள் மருந்து உட்கொண்டால் போதும்.
ஆனாலும் இயேசு கிறிஸ்து என் வாழ்வில் நிகழ்த்திய இந்த அற்புதத்தை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அதன்பின் என்னுடைய சகோதரியின் உந்துதலால் நான் WB நடத்தப்படும் காலை ஆராதனையில் பங்கு கொண்டேன். இது ஒரு புது அனுபவமாக இருந்தது, என்னை முற்றிலும் மாற்றிவிட்டது.
கர்த்தர் என்னை சுகமாக்கிவிட்டார் ஆனால் நான் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் காத்திருந்தார். அதை நான் ஏற்றுக்கொண்டு முழுமையாக சுகமாக அவரை கேட்க வேண்ட்டும் என அவர் விரும்பினார்.
என்னுடைய முழுமையான விசுவாசம் மற்றும் கர்த்தருக்கு என்னை ஒப்புகொடுத்தன் மூலம் நான் சுகமானேன். இயேசு கிறிஸ்து மீண்டும் என் வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தினார், என்னை முழுவதும் சுகமாக்கினார். திடீரென தோன்றும் அலர்ஜிகான அறிகுறிகள் முற்றிலும் நின்றுவிட்டது. இது முழுவதுமாக என்னை தாழ்த்திய ஒரு அனுபவமாக இருந்தாலும் தேவனால் நான் உயர்த்தப்பட்டேன். இன்றைய அறிவியலின் வரம்புகளை அது எனக்கு உணர்த்தியதால் நான் தாழ்த்தப்பட்டேன், என் நம்பிக்கை உயர்ந்தது.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசா 41:10.
அவர் நம்மிடம் கேட்ப்பது ஒன்று மட்டும்தான் அது அவர் மீது நாம் வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கை மற்றும் நம்மை அவரிடம் ஒப்புகொடுப்பதுதான்.
ஜெபம்
தேவனே, உம்முடைய சித்தத்திற்கு முழுமையாக எங்களை ஒப்புகொடுக்கவும் எங்களுடைய வாழ்க்கையை முழுவதும் உம்மிடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் எங்களை திடப்படுத்தும், மற்றும் உதவி செய்யும். ஆமேன்.
SOL.RUMNA GOMES, AOJ
