தானியேல் – II
நாள் 18-04-2022 – தேவ செய்தி

இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக:

மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

லூக் 10:41.

இயேசுவும் அவருடைய சீடர்களும் பிரயாணமாய் போகையில் அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார், அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.

அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள் அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து அவரிடத்தில் வந்து ஆண்டவரே நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்கு கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்ன்றாள்.

இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

தேவையானது ஒன்றே மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

இயேசுவுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த போது மார்த்தாள் உலகபிரகாரமான காரியங்களால் அலைகழிக்கப்பட்டாள். நாமும் இயேசுவுக்கு அப்படித்தான் ஊழியம் செய்கிறோம். மார்த்தளுடைய வீட்டில்தான் இயேசு இருந்தார் ஆனாலும் அவள் அவருடைய பாதத்தண்டையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்கவில்லை. அதேபோல நாமும் கட்டிட சபைக்கு செல்கிறோம் ஏன்? மற்றவர்களுக்கு நம்முடைய ஆன்மீகத்தைப் பற்றி காட்டுவதற்கு. எவ்வளவு கவலையான செய்தி?

மத் 15:8 – இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

இயேசுவுக்கு சேவை செய்ய மார்த்தாளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பெரிய பாக்கியம். ஆனால் மகிழ்ச்சியே இல்லாமல் அவள் செய்கிறாள். நீங்கள் சபைக்குச் சென்று இயேசுவை ஆராதிக்கிறீர்கள் ஆனால் மகிழ்ச்சி இல்லாமல் செய்தால் எப்படி இருக்கும். மார்த்தாள் இங்கு அவளுடைய குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறாள். நாம் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டு, மகிழ்ச்சியின்றி இயேசுவுக்கு ஊழியம் செய்வதை பற்றி யோசித்துப் பார்ப்போம்.

மத் 7:1 – நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.குறை சொல்வது மற்றும் முணுமுணுப்பது போன்ற காரணத்தால் கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியை கொன்றுபோட்டாள். இப்பொழுது “இதை குறித்து உங்களுக்கு கவலை இல்லையா” என்று இயேசுவை கேட்டு சூழ்ச்சிதிறமையுடன் கையாளுகிறாள். தன்னுடைய கவலையை எல்லார்மேலும் திணிக்கிறாள்.

மற்றவர்கள் கவலைப்படவில்லை என்று அல்ல,

அவர்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்று கற்றுக்கொண்டார்கள்.

மரியாளைப்போல நாமும் அவருடைய பதத்தண்டையில் அமர்ந்து அவர் சொல்லுவதை கேட்டால் அவர் நம் அருகில் இருப்பார். கர்த்தரை மகிழ்ச்சிப் படுத்துவது எதுவெனில், அவருக்கு கீழ்படிவது, அவரை நம்புவது, அவர் அருகில் இருப்பதுதான்.

மத் 11:30 – என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். இயேசுவோடு நடப்பது, மகிழ்ச்சியோடு அவருக்கு ஊழியம் செய்வது – இதை சாத்தானால் ஒருகாலும் எடுக்க முடியாது.

நம்முடைய எதிர்காலம், ஆரோக்கியம், குழந்தைகள் என நாம் பலவற்றை குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

பவுல் சொல்லுகிறார்,

பிலி 4:6-7 - நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

இயேசுவின் காலடையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்கும் நல்ல பங்கை மரியாள் தெரிந்துகொண்டாள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவருடைய பாதத்தில் அமரவேண்டும். எதிரியால் இந்த நல்ல பங்கை எடுக்க முடியாது. இயேசுவோடு இருக்கும் நம்முடைய நெருங்கிய உறவு, மற்றும் நட்பை, எதிரியால் எடுக்க முடியாது. சாத்தானால் எடுத்துக்கொள்ள முடியாத நல்ல பங்கை நாமும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஜெபம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்முடைய காலடியில் அமர்ந்து நீர் சொல்வதை கேட்க எங்களுக்கு சக்தியையும், தைரியத்தையும் தாரும். சாத்தானால் எடுத்துக்கொள்ள முடியாத நல்ல பங்கை தேர்ந்தெடுக்க எங்களுக்கு ஞானத்தை தாரும். உம்மோடு நெருக்கத்தையும், அன்பையும் அதிகமாக்கும், ஆமேன்.

Sol.ArokiaMari, AOJ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *