தானியேல் – II – தேவ செய்தி

நாள் – 11-04-2022

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

எபே 5:1,2.

 

நாம் கர்த்தரை பின்பற்ற முயற்சிக்கும்போது நாம் அவரை ஆராதிக்கிறோம்.  எனவே தங்களுடைய புரிதல் அந்தகாரப்பட்டும்,  தங்கள் வாழ்வு ஆன்மீக அந்தகாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவிசுவாசிகளைப்போல நாம் வாழ முடியாது.

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

2 கொரி 4:4

நாம் அவருடைய வார்த்தையை அறிந்திருக்கிறோம், அவருடைய வழிகளை தெரிந்திருக்கிறோம், எனவே, மற்றவர்களை ஏமாற்றக்கூடிய உலகபிரகாரமான இச்சைகளை நம்மிடமிருந்து அகற்றிப்போட வேண்டும். கர்த்தருடைய ஆவியில் நாம் தொடர்ந்து புதிதாக்கப்பட வேண்டும்.

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி

எபே 4:23

நம்முடைய சொந்த கிரயத்தில் அல்ல மாறாக இயேசு கிறிஸ்து செலுத்திய விலை கிரையத்தின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது. நாம் ஒருவர் மற்றவருடன் உண்மையை பேச வேண்டும், மேலும் தலையாகிய இயேசு சொல்லுவது போல நடக்க வேண்டும். ஒருவர் மீதும் கோபமோ, கசப்போ இருக்க கூடாது மாறாக அனைவரையும் மன்னிக்க வேண்டும். கர்த்தருடைய சாயலாக மாறி வாழ நமக்கு பரிசுத்த ஆவியானவர் துணை செய்வார்.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.  

எபே 4:31

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய முதற்பேரான குமாரனாகிய இயேசுவைப் போல நாம் இருக்க வேண்டும்.  எளிமையாகவும், பணிவாகவும், மென்மையாகவும், மன்னிப்பவராகவும், இரக்கமுள்ளவராகவும், அன்பாகவும், ஞானமாகவும் உண்மையுள்ளவராகவும், இயேசு வாழ்ந்தார் நாமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்பித்தார். கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டார் பதிலுக்கு அவருடைய சாயலை நாமும் ஏற்க வேண்டும். இப்படியாகத்தான் நாம் உண்மையான மற்றும் ஏற்க கூடிய ஆராதனையைச் செய்து கர்ததருக்கு நம்முடைய நன்றியை வெளிப்படுத்த முடியும். நாம் மாற்ற வேண்டிய நமது குணம், அணுகுமுறை மற்றும் பழக்கவழக்கங்களின் பகுதிகளை சுட்டிகாட்ட பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்க வேண்டும்.

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார். 

எபே 5:2

எனவே நாம் கிறிஸ்துவின் அன்பில் தொடர்ந்து நடக்க வேண்டும். நம்முடைய கஷ்ட நேரத்திலும் நல்ல நேரத்திலும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும், மற்றவர்களுக்காக ஜெபிக்க, உதவ, குணப்படுத்த, ஆலோசனை வழங்க, அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும்.

நாம் என்ன யோசித்தாலும்,  சொன்னாலும், செய்தாலும், நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தருடைய சிகந்த வாசனையை எடுத்துச் செல்ல வேண்டும்,  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

2கொரி 2:15

மற்றவர்கள் நம்மை நடைமுறைக்கு மாறானவர்கள், அதிக ஆன்மீகமுள்ளவர் அல்லது கடவுள் என்று கேலி செய்யலாம்.

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். “

1கொரி 13:7

கிறிஸ்து தம் உயிரை தியாகம் செய்தது போல் மற்றவர்களை ஆசீர்வதிக்க தன்னையும், தன் அகங்காரத்தையும் தன் நேரத்தையும், முயற்சிகளையும், வளங்களையும் தியாகம் செய்வதே அன்பு.

பழைய ஏற்பாட்டின் கீழ், சில மக்களுடைய காணிக்கை கர்த்தருக்கு ஏற்ற சுகந்த காணிக்கையாய் இருந்தது. தியாகத்தைவிட தியாகம் செய்தவரின் இதயத்தின் அவர்கள் செய்த தியாகத்தைவிட அவர்களுடைய இதயத்தின் இருதயமே அதிகம் பார்க்கப்பட்டது. இயேசுவை அபிஷேகம் செய்வதற்கு மேரி மக்தலின் விலைஉயர்ந்த வாசனை தைலத்தை பயன்படுத்தியது போல, நமது எண்ணங்கள், செயல்கள், மற்றும் வார்த்தைகளை பரப்ப முயற்சிக்க வேண்டும். நாம் கர்த்தருக்கு உயிருள்ள மற்றும் அன்பான காணிக்கையாக மாற வேண்டும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே நாங்கள் உம்மை பிரதிபலிக்கவும், நீர் அன்பு செய்வது போலவே மற்றவர்களை நாங்களும் அன்பு செய்ய விரும்புகிறோம். அதைச் செய்ய எங்களுக்கு கிருபை தாரும், எங்களோடு இருந்து எங்களை வழி நடத்தும்.  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் கேட்கிறோம் பிதாவே. ஆமேன்.

Sol.Gigi  Jacob

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *