தானியேல் – II

நாள் 25-03-2022 – தேவ செய்தி

யோவா 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

இந்த வசனம் நம் அனைவருக்கும் அன்னை தெரேசாவை நினைவூட்டுகிறது. அவருடைய உள்ளத்திலிருந்து கைவிடப்பட்ட மக்களுக்காக வழிந்தோடிய அன்பு மற்றும் கருணையை நாம் கண்டிருக்கிறோம். அது முற்றிலும் பரிசுத்தமான, கலப்படமில்லாத அன்பு, அதில் எந்தவிதமான சுயநலமும் கலக்க வில்லை. அது இயேசுவின் உண்மையான அன்பைப் போன்றது.

ஒரு நதி கோடையில் வறண்டு போகுமா, நிலைத்து நிற்குமா அல்லது சில காலங்களில் காணாமல் போகுமா என்பதை நதியின் ஆதாரம்தான் தீர்மானிக்கும்.

சக 14:8 - அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள்…., மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். அது வறண்டு போகாது.

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் நம் ஆண்டவராகிய இயேசுவே.

யோவா 4:14-நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

நம்மை தாங்கும் நம்து ஜீவ நதிகள் இயேசுவில் தொடங்கி, முடிகிறது.

இயேசுவை விசுவசிக்கிறவரின் இருதயத்திலிருந்து ஓடும் ஆறுகள் அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, பொறுமை, இரக்கம், நன்மை, விசுவாசம், பணிவு, மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்றவைகளாகும். நம்முடைய ஆத்துமாவிலும், இருதயத்திலும் ஓடுகின்ற இந்த ஆறுகளைப்பற்றித்தான் இயேசு சொன்னார்.

கலா 5:22, 23-ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;

இந்த ஆறுகள் தங்களுடைய ஓட்டத்தை நிறுத்தாது, பாறைகள், மலைகள் போன்ற கஷ்டங்கள், சவால்கள்  நம் வாழ்வில் வரும்போது இந்த ஆறுகள் அதன் ஓட்டத்தை நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ மாட்டாது. இவைகள் இயேசுவின் கிருபையை நம்முடைய வாழ்வில் உருவாக்குகிறது. இந்த மென்மையான தண்ணீரை எந்த பாறையும் தடுத்து நிறுத்தாது. அதேபோல் நம்முடைய வாழ்வில் வரும்  பாறையைப் போல கடினமான துன்பத்தை சுற்றியும் இந்த நதி ஓட வேண்டும்.

இந்த ஜீவ தண்ணீரில் ஒரு கலப்படம் இல்லை. சுய நலம் கொண்ட அன்பு அல்ல இயேசுவைப்போல தன்னலமற்ற அன்பு. மகிழ்ச்சியாக இருந்தால் அது கர்த்தரின் மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே நித்தியமானது மேலும் நிலையானது. அதுவே நம்பிக்கை என்றால், நாம் எப்பொழுதும்  வாழ்வதற்கான நித்திய வாக்குறுதியாகும், மேலும் இந்த உலகில் உள்ள அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலைதர கூடியதாகும். அதுவே பொறுமையாக இருந்தால், அது கர்த்தரில், அதன் சொந்த நேரத்தில் நடக்கும் என்று நாம் காத்திருக்கும். அது இரக்கம் என்றால், அது அனைத்து மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் என எல்லோர் மீதும் இரக்கம் காட்டும். பிறருக்கு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய சொந்த பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லாமல்  பரலோக பிதாவின் மகிமைக்காக இருக்கும். தாழ்ச்சியாக இருந்தால் அது இயேசு பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புகொடுத்ததுபோல இருக்கும். நம்முடைய நாவு, திறமை, நேரம், குணம் ஆகியவற்றை  நாம் எவ்வாறு பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுக்கு சமர்பிக்கிறோம் என்பது நம்முடைய சுய கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும்.

நம்முடைய வாழ்வு தொடர்ந்து கனிகளை தர வேண்டும், நதியைப்போல ஓட வேண்டும். ஒரு ஆறு வாழ்க்கை கொடுக்கும் மேலும் வாழ்வை மேம்படுத்தும். நாம்முடைய செயல்களும், எதிர்வினைகளும் கூட வாழ்வு தருவதாகவும் வாழ்வை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஒன்பது நதிகளின் ஜீவ நீரைச் சுமந்து நம்பிக்கையற்றவர்களுக்கும் சக்தியற்றவர்களுக்கும் நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்க வேண்டும். ஒரு நதி  வரண்ட நிலத்திற்கு ஈரப்பதத்தையும், குணப்படுத்துதலையும் தருகிறது.

ஏசா 44:3 - தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;
                 Sol. Gigi  Jacob AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *