உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்,
அவர் அப்படியே செய்வார்.
1 தெச 5:24
அப்போஸ்தலர் பவுல் 5:23 இல், சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. இதுதான் பரிசுத்தமாக்கப்படுதல். பூரணமான, முழுமையான, தூய்மையான, பரிசுத்தமான மேலும் குற்றமில்லாமல் ஆக்குதல்தான் பரிசுத்தம் ஆக்கப்படுவது. சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தினால் விசுவாசத்தின் மூலம் அவர் நம்மை பரிசுத்தமாக்கினார். அதன்பின் பரிசுத்த ஆவியை அனுப்பி பரிசுத்தமாக்குதலின் வேலையை தொடர்ந்தார். வார்த்தை என்னும் தண்ணீரில் நாம் மூழ்கவேண்டும், தண்ணீர் நம்மை உள்புறமாக சுத்தம் செய்யும். பின் அமைதி மற்றும் கிருபையை நம்மால் உணர முடியும்.
வேதத்தில் நாம் கற்ப்பதை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். நம்முடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக்கப்பட வேண்டும், இச்சையிலிருந்து கண்கள் காக்கப்பட வேண்டும், நம்முடைய வாய் மற்றும் நாவு பரிசுத்தமாக்கப் பட்டால் நம்முடைய பேச்சு மற்றவர்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.பொய், புறம் பேசுதல், அசுத்தமான வார்த்தைகளை பயன்படுத்தல் போன்றவற்றை கேட்பதிலிருந்து நம்முடைய காதுகள் தடைசெய்யப்பட வேண்டும்..எது நல்லது, உன்னதமானது, தூய்மையானது, ஆரோக்கியமானது, கர்த்தருக்கு பிரியமானது என்பவைகளின் மூலமாக நம்முடைய மனம் தூய்மையாக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு பிரியமானதை மட்டுமே கரங்கள் செய்ய வேண்டும், கர்த்தர் அனுமதிக்கும் இடங்களுக்கு மட்டுமே கால்கள் செல்ல வேண்டும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு என்ன சொல்லி கொடுகிறதோ அதற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.
நம்முடைய எண்ணங்கள், இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் கர்த்தருக்கு பிரியமாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலரான பவுல் நான்கு வார்த்தைகள் மூலமாக கர்த்தரில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
- நாம் கவலைப் பட தேவையில்லை
- அவர் அதைச் செய்வார்
- அவர் நம்மை காப்பாற்றுவார்
- அவருடைய வாக்குறுதிகளில் தியானம் செய்து சந்தேகம் இல்லாத மனமாக மாற்ற வேண்டும்.
நம்முடைய ஜெபங்கள் வீண்போவதில்லை, அவருடைய நேரத்தில் அதற்கு பதில் அளிப்பார்.
ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன்,
என்னுடைய மகனுடைய திருமணத்திற்குபின் குழந்தை பெறுவதற்கு 10 ஆண்டுகள் காத்திருந்தார்கள். கர்த்தர் நிச்சயம் நமக்குகொடுப்பார் என்ற நம்பிக்கையில் பிறக்கும் அமைதியும் விசுவாசமும் என்னில் இருந்தது. ஒன்பதாவது வருடம் கர்த்தர் எனக்கு ஒரு வாக்குதத்ததைகொடுத்தார், சங் 128:6 – நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்’. அதற்கு பின் விசுவாசத்தோடு நான் அனைவருக்கும் சொன்னேன், கர்த்தரின் வாக்குறுதிபடி நமக்கு ஒரு பிள்ளையை கொடுப்பார் என்று. அதை கர்த்தர் நிறைவேற்றவும் செய்தார். “அவர் செய்து முடிப்பார்” என்னும் கர்த்தருடைய வார்த்தையில் விசுவாசம் வையுங்கள், அவருடைய நேரத்தில் அதை நிறைவேற்றுவார். அவருடைய வாக்குறுதிகளில் முழுமையாக நம்பிக்கை வைத்து கலங்கமற்றவர்களாகவும், விசுவாசத்தோடும் இருக்க வேண்டும். இரண்டு படகுகளில் நாம் பயணம் செய்யக்கூடாது, அலை அடிக்கும்போது படகு விலகும் நாம் மூழ்கிபோவோம். லூக் 16:9-13 – இரண்டு எஜமானகளுக்கு நம்மால் ஊழியம் செய்ய இயலாது, – தேவனுக்கும், உலக பொருட்களுக்கும் நம்மால் ஊழியம் செய்ய முடியாது. நம் கையில் இருப்பதை நம்முடைய தேவைக்கும், ஏழைகளுக்கு கொடுக்கவும் கர்த்தர் பெருகச்செய்வார், நம்முடைய உடலின் தேவைகள் மட்டுமல்லாது நம்முடைய ஆன்மீக தாகத்தையும் அவருடைய வார்த்தையால் அவர் திருப்திப் படுத்துவார்.
பரலோக பிதாவே, எங்களை ஆராய்ந்து பார்க்க உதவி செய்யும், வாழ்வின் எல்லா பகுதிகளையும் ஒவ்வொரு நாளும் பரிசுத்தமாக்கும். எங்களுடைய ஜெபத்தை கேட்டு அதற்கு பதில் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமேன்.
Sol.Gigi Jacob, AOJ
