தானியேல் – II 21-01-2022 – தேவ செய்தி

என்பிரியமானசகோதரரே, கேளுங்கள்; தேவன்இவ்வுலகத்தின்தரித்திரரைவிசுவாசத்தில்ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில்அன்புகூருகிறவர்களுக்குத்தாம்வாக்குத்தத்தம்பண்ணினராஜ்யத்தைச்சுதந்தரிக்கிறவர்களாகவும்தெரிந்துகொள்ளவில்லையா?

யாக்கோபு 2:5

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. – மத் 5:3

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. (2கொரி 8:9).

இயேசு கிறிஸ்து அனைவரையும் சமமாக அன்பு செய்கிறார் மேலும் அவரிடம் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை என்பதை இந்த வசனங்களின் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.  தன்னுடைய பிள்ளைகள் ஏழை பணக்காரர்கள் இடையில் பாகுபாடு அல்லது பாரபட்ச்சம் காட்டுவதை அவர் விரும்பவில்லை. ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பரலோக சிங்காசனத்தை விட்டு இந்த பூமிக்கு வந்து அவருடைய வறுமையிலிருந்து நாம் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்பதற்காக அவர் ஏழைஆனார்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று அவர் மலைபிரசங்கத்தில் சொல்லியிருக்கிறார்.

 நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் மேலும் தன்னைத் தாழ்த்துபவர்களை அவர் முன் உயர்த்த விரும்புகிறார்.

நம்முடைய இருதயங்கள் மீது அவர் விருப்பமாய் இருக்கிறார். நம்முடைய இதயத்தின் மூலமாக அவர் பார்கிறார், நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர் நன்கறிவார். எப்போதெல்லாம் பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் வேத வல்லுனர்களும்  தங்களுடைய தந்திரமான வழிகளால் அவரில் குறைகாண வந்தபோது அவர்களது இருதயங்கள் மூலமாக அவர்கள் என்ன நினைத்தார்களோ அதையும் அவரால் பார்க்க முடிந்தது.

தேவன் அவர்களை நம்பவில்லை, ஆனால் அவர்கள் ஆச்சரியபடும்படி அவர்களுக்கு பதில் தந்தார்.

இன்றும் கூட தேவன் மனிதர்களின் இருதயங்களை நன்கறிவார் மேலும் அவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

இயேசுவைப் பற்றி தெரிந்த பின்பும் அவரை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்கள் எப்பொழுதுமே ஏழையாகவே இருப்பர் மேலும் இந்த ஆன்மீக ஏழ்மையில் யாரும் அவருக்கு உதவ இயலாது.

தேவன் ஆர்வமாக இருப்பது நமது நம்பிக்கையே. விசுவாசத்திலும் அவருடைய வார்த்தையிலும் நாம் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் விசுவாசத்தில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஒருபோது ஏழையாக இருக்க மாட்டார்கள், ஏனென்றால் மிகப்பெரிய பொக்கீஷமாகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் கண்டுகொண்டார்கள்.

ஆனால் கர்த்தருடைய வார்த்தையில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், எல்லா காலத்திலும் மேலான செல்வத்தை பெறுவார்கள்.

கோவாவில் உள்ள எங்களது அணிசபையில் ஒரு விசுவாசி இருந்தார். கர்த்தருடைய வசனத்தை கேட்பதிலும், விசுவாசத்திலும் உண்மையாக அவர் இருந்தார். அவர் கர்த்தருடைய வார்த்தையை விசுவசித்து ஏற்றுக்கொண்டார். அவருடைய நிலத்தை பயிர்ச்செய்ய அவரிடம் போதுமான பணம் இல்லை. சென்ற வருடம் அவரிம் இருந்த நெல்லை விற்கும்படியாக இன்னொறு அணிசபையின் உறுப்பினர் மூலமாக தேவன் பேசினார்.  அவர் அவ்வாறு செய்தபோது இரண்டுமடங்கு விலை கிடைத்தது. தன்னுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இருந்தது. நம்முடைய தேவனும் இரடசகருமான இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.

Sol. Luiza Kudchadkar AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *