தானியேல் – II 10-01-2022 – தேவ செய்தி

பந்தயத்திற்குப்போராடுகிறயாவரும்எல்லாவற்றிலேயும்இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள்அழிவுள்ளகிரீடத்தைப்பெறும்படிக்குஅப்படிச்செய்கிறார்கள், நாமோஅழிவில்லாதகிரீடத்தைப்பெறும்படிக்குஅப்படிச்செய்கிறோம்.

1கொரி 9:25

எபி 12:1

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் பாவங்கள் மற்றும் சோதனைகளாலும் நிறம்பியுள்ளது.  எனவே ஒவ்வொருநாளும் கர்த்தருடைய  பிரசன்னத்திற்குச் சென்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உங்கள் இருதயங்களை பரிசுத்தமாக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்– லூக் 21:34

நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்த நிறைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை தேவை.  உலகத்தின் மேல் உள்ள இச்சைகளை கட்டுப்படுத்துங்கள்.

லூக் 21:34 – உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த அனுமதியுங்கள், அதனால் உங்கள் மனம் புதிதாகும். உங்கள் எண்ணங்களையும், ஆசைகளையும் திருத்த அவருக்கு இடம் கொடுங்கள்.

கர்த்தருடைய கரங்களின் கீழ் உங்களை ஒப்புகொடுத்து அவரை முழுமையாக நம்புங்கள், அவர் உங்களை திருத்துவார்.

உங்களை தாழ்த்திகொண்டு உங்களை திருத்துவதற்கு கர்த்தரை அனுமதிக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ளும் போது கர்த்தர் உங்களை அவருடைய சொந்த மகனாக/மகளாக கருதுவார், அவரே உங்களை வழிநடத்துவார்.

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எபி 12:11

ஒரு நாள், எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்கவில்லை, அதற்காக நான் கண்டிக்கப்பட்டேன். நான் மிகவும் வேதனைப்பட்டேன் மேலும் அதை குறித்து ஜெபித்தேன், அப்போது கர்த்தர் என்னோடு பேசினார்; “நீ உன் தவறை உணர வேண்டும், நீ உ ன்னுடைய வேலையில் விடாமுயற்சியுடன் வேலை செய்யாதப்போது மற்றவரகள் உன்மீது கருணை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.” பின்னர் என்னுடைய தவறை நான் உணர்ந்தேன் மேலும் மனம் கசந்து மன்னிப்பு கேட்டேன். பதவி உயர்வின் மூலம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். அதேபோல நான் செய்த தவறுக்காக ஒரு தேவ பிள்ளையால் கண்டிக்கப்பட்டேன். நான் என்னை தாழ்த்தி திருத்தங்களை ஏற்றுக்கொண்டபோது கர்த்தர் எனக்கு தலைமைப் பண்புகளை கற்றுக்கொடுத்தார். இயேசுவே உமக்கௌ நன்றி.

Sol. Benjamin Philip

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *