தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-05-2023

கவனத்துடன்  வார்த்தைகளைப்  பயன்படுத்துதல்

மத்தேயு 22 :15, 22″ அப்பொழுது பரிசேயர்  போய் , பேச்சிலே அவரை  அகப்படுத்தும்படி  யோசனை பண்ணினார்கள்.

அவர்கள் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை  விட்டுப் போய்விட்டார்கள்.”

இந்த அத்தியாயத்தில், பரிசேயர்கள் இயேசுவை சட்டப்பூர்வமாக பொறி வைத்து , அவரைக் கைது செய்து , கொல்ல பார்க்கிறார்கள்.  எனவே, அவர்கள் நல்ல மனிதர்களைப் போல நடித்துகொண்டு, கோவிலுக்கும் ரோமானிய அரசாங்கத்திற்கும் வரி அதாவது தசமபாகம் செலுத்துவதைப் பற்றி இயேசுவிடம் கேட்டார்கள். அவர்களுடைய நாணயமான ஒரு தெனாரியத்தைக் காட்டுங்கள் என்று சொல்லி இயேசு ஒரு பெரிய பதிலைக் கொடுத்தார்.  அதில் சீசரின் முத்திரை  உள்ளது.  எனவே, அவர் அவர்களுக்கு, சீசருக்குரியதை சீசருக்குச் செலுத்துங்கள், கர்த்தருடையதைக் கர்த்தருக்குச் செலுத்துங்கள், என்று பதிலளித்தார்.

இயேசுவின் வார்த்தைகள் மிகவும் பொருத்தமானதாகவும்    மிகவும் அறிவார்ந்ததாகவும் இருந்தது.

நாம் நெகேமியா புத்தகத்தை வாசிக்கும் போது , எருசலேமை மீண்டும் கட்டியெழுப்ப ராஜா, அவருடைய சக சகோதரர்கள், போதகர்கள், அவர்களை எதிர்க்கும் உள்ளூர் மதத் தலைவர்கள், அவர்களுடைய ராஜ்யத்தை அழிக்க நினைக்கும்  பிற ராஜ்யங்கள் என பலரை நம்பவைக்க அவர் எப்படி வார்த்தைகளை மிகவும் கவனமாகவும் நேர்த்தியுடனும்  பயன்படுத்தத் தொடங்கினார் என்பதையும் காண்கிறோம்.  அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் குறித்த தன் திட்டங்களை யாரிடமும் நேரடியாகச் சொல்லவில்லை.

நெகேமியா 2 :12 “நான் சில  மனுஷரைக் கூட்டிக் கொண்டு  ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்.  ஆனாலும்  எருசலேமுக்காக செய்யும்படி  என் தேவன் என் மனதிலே  வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. நான்  ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

நாம்  சில காரியங்களை செய்து முடிக்க , மிகவும் கவனமாகவும்  நேர்த்தியுடனும் சில வார்த்தைகளை  பயன்படுத்த  அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றி அல்லது தோல்வி ,  வாழ்வு அல்லது இறப்பை நம் வாழ்வில் அல்லது பிறர் வாழ்வில் கொண்டு வர நம்முடைய நாவினால்  வார்த்தைகளை  எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றி வேதாகமத்தில் இருந்து சில வசனங்களைப் பார்ப்போம்.

 நீதிமொழிகள் 18:21: “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். “

யாக்கோபு 3 : 5 – 6″அப்படியே நாவானதும்   சிறிய அவயமாயிருந்தும் ,  பெருமையானவைகளைப்  பேசும். பாருங்கள்  சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டை கொளுத்தி விடுகிறது. நாவும் நெருப்புதான்,அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயங்களில் நாவானது முழுச் சரீரத்தையும் கறைப்படுத்தி , ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும் , நரக அக்கினியினால் கொளுத்தப்படுபகிறதாயும் இருக்கிறது. “

 நீதிமொழிகள் 21 : 23″ தன் வாயையும் நாவையும் காக்கிறவன்  தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு  விலக்கிக் காக்கிறான்.”

 நீதிமொழிகள் 17.28″ பேசாதிருந்தால்  மூடனும்  ஞானவான் என்று எண்ணப்படுவான், தன்  உதடுகளை மூடுகிறவன்    புத்திமான் என்று  எண்ணப்படுவான்.

 நமது வார்த்தைகள் மற்றும் உதடுகள் மூலம் ஆவிக்குரிய பலன்களை உருவாக்க முடியும்.

எபிரெயர் 13:15″ ஆகையால் அவருடைய நாமத்தை துதிக்கும்  உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை  அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்கு  நன்றி செலுத்தக் கடவோம்.

ஜெபம்:

பரலோகத்திலுள்ள எங்கள் தந்தையே , எங்கள் வார்த்தைகளை  கவனத்தோடும் ஊக்கத்தோடும்  பயன்படுத்த எங்களுக்கு ஞானத்தைத் தந்தருளும். இதனால் நாங்கள் , எங்கள் ஆவிக்குரிய வாழ்வைக்  கட்டியெழுப்புவோம்.  இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம்.  ஆமென்.

 Sol.தியோடர் மொஹந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *