நாள்: 27-08-2023
ஆவி மற்றும் ஆத்துமா
1கொரிந்தியர் 2 :14:” ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்கு பைத்தியமாக தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப் படுகிறவைகளானதால் அவைகளை அறியவும் மாட்டான். “
மனிதனுடைய ஆவி, பாவத்தின் காரணமாக கர்த்தருடைய ஆவியுடன் இணக்கமாக முழுமையாக செயல்படுவதில்லை. ஆனால் அவன் மனந்திரும்பி இறைவனிடம் வந்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பிறகு, அவரது ஆவி கர்த்தருடன் தொடர்பு கொள்ளத் தொடங்குகிறது.

அவன் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறும்போது, கிறிஸ்துவில் புதிய வாழ்க்கையை வாழ்வதற்காக, அவன் ஆவியைப் பெறுகிறான். மனிதனின் ஆத்துமா பரிசுத்த ஆவியானவரின் கீழ் வர வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம், ஏனென்றால் அவர் மனிதன் வளரவும், அவனை கர்த்தருக்குக் கீழ்ப்படியவும் செயல்படுத்துகிறார். இல்லையெனில் கர்த்தருடைய ஆவி நம் வழியாக பாயாது . பிறகு நாம் மாம்சத்தின் இச்சையில் விழுந்துவிடுவோம், அதாவது,நமது பழைய வாழ்க்கையில் விழுந்து விடுவோம். இதை
” சிற்றின்பம் ” அதாவது இயற்கையான மனிதனுக்குரியது என்று கூறப்படுகிறது. கர்த்தருடைய வசனம் கூறுகிறது, “சரீர சிந்தனையுடன் இருப்பது மரணம்.” நாம் சாதாரண மனிதனாக நித்திய மரணத்திற்குத் தள்ளப்பட்டோம். ஆகவே, பிதாவின் குமாரனாகிய இயேசு, மனித சாயலில் நம்முடைய இடத்திற்கு மரிப்பதற்காக வந்தார்.அநீதியுள்ளவர்களுக்கு நீதிமானாக இருந்தார். அவர் சிலுவையில் நம் இடத்தைப் பிடித்து, நம்முடைய இரட்சிப்பிற்கான பணியை முடித்தார். “முடிந்தது” என்று அவர் வேதனையோடு கூறியபோது , ஒவ்வொரு விசுவாசியின் ஆவி , ஆத்துமா மற்றும் சரீரத்தின் இரட்சிப்பு நடந்தது. நமது இரட்சிப்புக்காக அவர் செலுத்திய விலை இதுதான்.
நீதிமானாக்கப்படுதல்:ஒரு மனிதன் மனந்திரும்பி, கர்த்தரிடம் வந்து விசுவாசிக்கிற நிமிடமே, அவன் நீதிமானாக்கப்படுகிறான். அதாவது நம்முடைய ஆத்துமா தேவனுக்கு ஏற்புடையதாக்கப்படுகின்றது
பரிசுத்தமாக்கப்படுதல்:நமது ஆத்துமா கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாக்கப்படுகின்றன.
மகிமைப்படுத்தப்படுதல்:பரிசுத்த ஆவியானவரால் நமது உடல்கள் நித்தியத்திற்கு மகிமைப்படுத்தப்படுகிறது. இது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் மொத்த வாழ்க்கை அனுபவத்தை உள்ளடக்கியது.
பாவத்துடனான உறவு:பாவத்தின் தண்டனையிலிருந்தும் பாவத்தின் முன்னிலையிலிருந்தும் நாம் இரட்சிக்கப்பட்டோம்.
கர்த்தர் சொன்னது “எல்லோரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்தோம்.” இதற்கு முழு உலகமும் பாவத்தின் சக்தியில் தத்தளிக்கிறது என்று அர்த்தம் . எனவே மனிதனுக்கு இயேசு இல்லாமல் நம்பிக்கை இல்லை .அனைத்தும் நித்திய அழிவுக்கும் மரணத்திற்கும் ஆளாக்கப்பட்டன. எனவே உன்னதமானவருடைய மகன் இயேசு கிறிஸ்து நம் இடத்தில் மரிக்க மனித உருவில் வந்தார். அநீதியானவர்களுக்காக நீதிமான் இறந்தார். மேலும் அவர் நமக்கு எதிராக எழுதப்பட்ட சட்டங்களையும் அதன் அனைத்து விதிமுறைகளையும் நீக்கினார். அல்லேலூயா. எல்லா புகழும் நம் ஆண்டவர் இயேசுவுக்கே. ஆமென்.
ஜெபம்:
கிருபையுள்ள ஆண்டவரே, எங்கள் இடத்தில் நீர் மரித்ததற்கும் , சிலுவையில் நீர் எங்களுக்காக செலுத்திய விலைக்கும் நன்றி.
ஆமென்.
Sol. நோரீன்.
