தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-05-2023

ஆபகூக் 3 : 4 “அவருடைய பிரகாசம் சூரியனைப்  போலிருந்தது ,அவருடைய  கரத்திலிருந்து கிரணங்கள்  வீசின.அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது. “

சமீபத்தில் இந்த வசனத்தின் மீது என் கண்கள் விழுந்தன, கர்த்தரின் கையிலிருந்து பிரகாசிக்கும் கதிர்களில் அவருடைய சக்தி மறைந்திருக்கிறது , அவருடைய செயல்பாடு வலிமை வாய்ந்தது என்பதைக் குறித்து நான் பிரமித்தேன். மேலும் இஸ்ரவேலருக்கும், இந்த உலகத்திற்கும் என்னுடைய வாழ்விற்கும்  தெய்வீக வல்லமையை  அடிக்கடி வெளிப்படுத்திய கரம் அது  என்பதைக் குறித்தும் பிரமித்தேன். அவருடைய கையால் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வோம்.

 யாத்திராகமம் 13 : 3

” அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்நாளை நினையுங்கள். கர்த்தர்  பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து  வெளியே புறப்படப் பண்ணினார். ஆகையால் நீங்கள்  புளித்த அப்பம் புசிக்க வேண்டாம். “

 கர்த்தர்  எப்படி பத்து வாதைகளை அனுப்பி, பார்வோனையும் அவனுடைய படையையும்   மிகவும் சக்திவாய்ந்த அவனுடைய  வம்சத்தையும்  அழித்து  இஸ்ரவேலர்களை விடுவித்தாரோ , அது நமக்கும் அவ்வாறே செய்யும்  அவருடைய வலதுகரமாக இருந்தது.   சங்கீதம் 110 :1

” கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி நான் உம்முடைய சத்ருக்களை உமக்குப் பாதபடியாக்கி போடும் வரைக்கும் , நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்றார். ”                    

 நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை, நாம் அவருடைய வலது கரத்தில் அமர்ந்தால் போதும் என்று கர்த்தர் நமக்கு உறுதியளிக்கிறார். நமது எதிரிகள், சவால்கள் மற்றும் பிரச்சனைகளை அவர் கவனித்துக்கொள்வார். அவர் பாதபடியாக்கி , நமக்குச்  சொந்தமான  நம் காலடியில் அது இருக்கும் என்று நம் கர்த்தர்  நமக்கு உறுதியளிக்கிறார்.

 நாம் அவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருந்தால் நன்மைகள் உண்டு, சங்கீதம் 16 : 11 

” ஜீவ மார்க்கத்தை    எனக்குத் தெரியப்படுத்துவீர்.   உம்முடைய சமூகத்தில்  பரிபூரண ஆனந்தமும் உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” நாம் வாழ்க்கையின் பாதையை அறிவோம், இலக்கின்றி அலையாமல், மகிழ்ச்சியால் நிரப்பப்படுவோம், ஏனென்றால் அவருடைய தொடர்ச்சியான பிரசன்னம் நம்முடன் இருக்கும்,  நாமும் நித்திய மகிழ்ச்சியைப்  பெறுவோம்.

நீதிமொழிகள் 21 : 1 “ராஜாவின் இருதயம் கர்த்தரின்  கையில்  நீர்க்கால்களைப் போலிருக்கிறது. அதைத் தமது சித்தத்தின் படி திருப்புகிறார்.  “

ஒரு ராஜாவின் இதயம் அவர் கைகளில் உள்ளது, அதை சாதகமாக மாற்ற முடியும், அது அவருக்கு பெரிய விஷயமில்லை என்று அது சொல்கிறது.

சங்கீதம் 98:1 “கர்த்தருக்குப் புதுப் பாட்டைப் பாடுங்கள், அவர் அதிசயங்களைச்  செய்திருக்கிறார், அவருடைய வலதுகரமும் அவருடைய பரிசுத்த புயமும்  இரட்சிப்பை உண்டாக்கினது. “

நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டால், இயேசு தம்முடைய வலது கரத்தால் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்வார், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், மேலும் அவர் உங்கள் வாயில் ஒரு புதிய பாடலை வைப்பார்.  பழைய பாடல்களை மறக்கலாம்;  நீங்கள் புதிய சாட்சியங்களைப் பெறுவீர்கள். 

ஏசாயா 62 : 3″நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜ முடியுமாயிருப்பாய்” அவரது கையில், நாம் அழகின் கிரீடமாக இருப்போம்,  மட்டுமல்ல நம் வாழ்க்கை அழகின் கிரீடமாக, நம்  குடும்பம் அழகின் கிரீடமாக இருக்கும் என்று கர்த்தர்  கூறுகிறார். நாம் நம்மை, நம் குடும்பம், குழந்தைகள், நிதி, வேலை, ஊழியம்,  வீடு எல்லாவற்றையும் அவரது  கைகளில்   ஒப்படைக்க வேண்டும். 

அவரது கை நம்மை காப்பாற்றுகிறது, பாதுகாக்கிறது, குணப்படுத்துகிறது, மீட்டெடுக்கிறது, விடுதலையாக்குகிறது, கட்டுகிறது,  மற்றும் நிலைநிறுத்துகிறது.   எனவே சங்கீதக்காரன் சொல்வது போல், கர்த்தர் இரக்கமுள்ள அன்பான தேவன் என்பதால், அவர் இரக்கம் காண்பிக்கும் வரை, அவருடைய கரத்தை நோக்கிப் பார்ப்போம். 

சங்கீதம் 123 : 2 "இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப் போலவும்  வேலைக்காரியின் கண்கள் தன் எஜமானியின் கையை நோக்கியிருக்குமாப்  போலவும் , எங்கள்   தேவனாகிய கர்த்தர்  இரக்கம் செய்யும்வரைக்கும் எங்கள் கண்கள்  அவரையே நோக்கியிருக்கிறது. " ஆமென்.

Sol. லலிதா மேனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *