நாள்: 16-05-2023
வலிமையாகவும் தைரியமாகவும் இருங்கள்.
யோசுவா புத்தகம் முதல் அத்தியாயத்தில் மேற்கூறியது ஒருமுறை அல்ல நான்கு முறை எழுதப்பட்டுள்ளது.
யோசுவா 1 : 6
” பலங்கொண்டு திடனதாயிரு “
வசனம் 7,
” மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு” .
வசனம் 9
“நான் உங்களுக்கு கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு “
வசனம் 18
“எனவே பலங்கொண்டு திடமனதாய் மாத்திரம் இரு .”
கர்த்தர் , யோசுவா தைரியமாகவும் திடமனதுடனும் இருக்கும்படியாக அவரை ஆயத்தப்படுத்தினார்.
கர்த்தர் யோசுவாவைக் குறித்து ஒரு திட்டம் வைத்திருந்தார் , மேலும் நான் உன்னுடனே இருப்பேன் என்ற உறுதிமொழியையும் அளித்திருந்தார். அவர் ஒருபோதும் யோசுவாவை விட்டு விலகவோ அல்லது , கைவிடவோ இல்லை.
கர்த்தர் யோசுவாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவனுடைய விசுவாசம் உயர்ந்துகொண்டே இருந்தது, கர்த்தர் தம்முடனே இருக்கிறார், அவர் தம்மை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டார் என்ற முழு நிச்சயமும் அவனுக்கு இருந்தது.
கர்த்தரின் குரலுக்கு செவிசாய்ப்பதும் அவருக்குக் கீழ்ப்படிவதும்தான் கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவர்களிடமிருந்து விரும்புகிறார்.
கர்த்தர் ஏன் யோசுவாவை வலிமையாகவும் தைரியமாகவும் இருக்கச் சொன்னார்?
யோசுவா இஸ்ரவேலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, யோசுவா இஸ்ரவேலர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. கர்த்தர் யோசுவாவின் தோள்களில் ஒரு பெரிய பொறுப்பை சுமத்தினார்; அதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கான விளிம்பில் இருந்தனர், ஆனால் அவர்களின் விசுவாசமின்மையின் காரணமாக அந்த தலைமுறை வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் கழித்தது. பாலும் தேனும் ஓடும் தேசத்தில் அவர்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே கர்த்தரின் இதய ஆசை.
உபாகமம் 6 : 10 – 11
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டு கொடுத்த தேசத்தில் உன்னை பிரவேசிக்கப் பண்ணும்போது நீ
கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும் நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும் நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ தோப்புகளையும் அவர் உனக்கு கொடுப்பதினால்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தேவன் தம்முடைய பிள்ளைகள் வளமான வாழ்க்கை வாழ்வதைக் காண விரும்பினார் .
அவர்கள் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டதில்லை, அவர்கள் பசியாய் இருந்ததில்லை, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.
பிறரின் பலனையும் உழைப்பையும் அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராட்சதர்கள் செய்த வேலைகளை அவர்களுக்கு எளிதாகச் கொடுக்க அவர் தயாராக இருந்தார்.
தேசத்தை உளவு பார்க்க மோசே அனுப்பிய 12 உளவாளிகளில்
(எண்ணாகமம் 14 :7 – 9 ) 10 உளவாளிகள், பெரும் ராட்சதர்களைக் கண்டதால் பயம் அவர்களைப் பற்றிக் கொண்டது. , யோசுவா மற்றும் காலேப்
இந்த இருவரும் கர்த்தரின் வாக்குறுதிகள் மற்றும் நன்மையின் மீது கவனம் செலுத்தினர்.
உண்மையில், இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்தபோது கர்த்தரின் வலிமையான கரத்தைக் கண்டார்கள். பார்வோன் கர்த்தருக்கு எதிராகக் கலகம் செய்தபோது கர்த்தர் தம் மக்களுக்குக் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்டார்கள். தண்ணீர் இரத்தமாக மாறுவதைக் கண்டார்கள். தவளைகள், கொசுக்கள், ஈக்களால் ஏற்பட்ட கொள்ளைநோய்கள், கால்நடைகளுக்கு எதிராக ஆலங்கட்டி மழை, எகிப்தின் முதல் குழந்தை இறப்பு போன்ற செய்கைகளைக் கண்டார்கள்.
அந்த 10 பேருக்கும் தைரியம் இல்லை மேலும் பயம் அவர்களை முடக்கியது, ஏனெனில் இந்த தலைவர்கள் பயந்ததால், முழு தலைமுறையும் கர்த்தரின் வாக்குறுதிகளை தங்கள் வாழ்க்கையில் இழந்துவிட்டார்கள்.
நமக்கும் பல சமயங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் நம் வாழ்வில் உண்டு , இயேசுவின் மேல் கண்களை வைப்பதற்கு பதிலாக , நமது பிரச்சனைகளை பார்த்து நாம் தோல்வியடைகிறோம் , எதிர்மறை உணர்வுகள் மனதில் நுழைகிறது , பயம் நம்மை வாட்டி வதைக்கிறது , நாம் சந்தேகப்படுகிறோம் , எதுவும் சரியாக நடப்பதில்லை .
யோசுவா மற்றும் காலேப் போல நாம் கர்த்தரின் மீது கவனம் செலுத்துவோம்.
தந்தையே, நீர் அன்பான தேவன், உமது பிள்ளைகள் கிறிஸ்துவில் நிறைவான வாழ்க்கையை அனுபவிப்பதைக் காண வேண்டும் என்பதே உமது விருப்பம். ஆவியிலும் உண்மையிலும் உம்மை ஆராதிப்பதன் மூலம் உமது நன்மையில் கவனம் செலுத்த எங்களுக்குக் கற்றுக் கொடும்.
உமது உயிருள்ள வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து , விசுவாசத்தில் உயர்ந்தவருமான இயேசுவின் மீது எங்கள் கண்களை நிலைநிறுத்த உம்மிடம் வேண்டுகிறோம். .
அவரே பாலும் தேனும் ஓடுகின்ற வாக்களிக்கப்பட்ட தேசம். எங்களுக்கு என்ன வந்தாலும், சவால்கள். பிரச்சனைகள், பதற்றம், நோய் எது வந்தாலும் கிறிஸ்து நமக்கான விலையை முழுவதுமாக எவ்வாறு செலுத்தினார் என்பதைப் பார்ப்பதையே நாங்கள் தேர்வு செய்கிறோம். இதனால் அவருடைய நிபந்தனையற்ற அன்பு, அமைதி பாதுகாப்பு போன்றவை நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு அளவில்லாமல் வழங்கப்படுகிறது. நன்றி ஆண்டவரே, எங்கள் வாழ்க்கையின் மூலம் நீர் மகிமைப்படுவீராக.
Sol.ஹெலன் பெரேரா
