நாள்: 02-05-2023
பாவம்
நமது இரட்சிப்பின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள , நாம் ஏன் பாவிகளாக இருக்கிறோம்? ஏன் பாவம் செய்கிறோம் என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். எனவே முக்கியமான சில கேள்விகள் கீழே….
அ : நாம் பாவம் செய்வதால் பாவிகளா?
அல்லது
ஆ : நாம் பாவிகள் என்பதால் பாவம் செய்கிறோமா?
இது ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கப்படுகிறது. யாருக்காவது எய்ட்ஸ் நோய் இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்வதை நிறுத்தி, அவர் இறந்துவிடுகிறார், ஆனால் மிக மோசமான விஷயம் என்னவென்றால், உங்கள் பெற்றோருக்கு அது இருந்தால், நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அது உங்களைத் தொற்றிக் கொள்ளும். மட்டுமல்ல நீங்கள் எய்ட்ஸுடன் பிறப்பீர்கள். விரைவில் இறந்துவிடுவீர்கள்.
பாவமும் இப்படித்தான், முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்து தன் இனம் முழுவதையும் பாவம் தொற்றிக் கொள்ளச் செய்தான். எனவே நாம் இரட்சிக்கப்படாவிட்டால் , மாமிச வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் இறந்துவிடுவோம். ஏனெனில் ஆதாமினால் எல்லாரும் பாவம் செய்தார்கள், அனைவரும் மரித்தார்கள். தனிப்பட்ட முறையில் நாம் பாவம் செய்யாவிட்டாலும், அவருடைய பாவச் சுபாவத்தினால் நாம் மரித்துவிடுவோம். எனவே உண்மை என்னவென்றால்,நாம் அனைவரும் பாவிகளே .
ரோமர் 5:18
” ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கும் ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. “
பாவத்தின் தோற்றம் :
ஆதாமினால் நாம் அனைவரும் பாவம் செய்து இறந்தோம். ஆதாமுக்குள் இருப்பது ஒரு முக்கியமான உண்மை . எடுத்துக்காட்டு : சில தானிய விதைகள் அதிக கதிர்வீச்சுக்கு ஆளானால், அவற்றின் மரபணுக்கள் மாற்றப்பட்டு, அதன்பிறகு வரும் அறுவடையானது ,அதிக கதிர்வீச்சுக்கு ஆளாகிய தாய் விதையின் தரத்தின் மிகவும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஆதாமின் விதைகள். பாவம் , ஆதாம் என்ற ஒரு மனிதனின் மூலம் உலகம் முழுவதுமே நுழைந்து மரணம் மற்றும் அழிவுக்கு ஆளாகி அது எல்லா மனிதர்களுக்கும் பரவியது. அதனால் அவர்கள் ஆதாமின் பாவத்தினால் பாதிக்கப்பட்டு பாவமுள்ளவர்களாக மாறினார்கள். ஆனால் மோசே வரை யாரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படவில்ல.
ஏனென்றால் சட்டம் அப்போது வரை அவர்களுக்கு இன்னும் . கொடுக்கப்படவில்லை.
ரோமர் 4 : 15 ” மேலும் நியாயப் பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது , நியாயப் பிரமாணம் இல்லாவிட்டால் மீறுதல் இல்லை.”
சங்கீதம் 51 : 5 ல் தாவீது கூறுகிறார், ” இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” ஆகவே, பரிசுத்த கர்த்தரின் பிரகாசமான ஒளியில், நாம் அனைவரும் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருந்தாலும் பாவம் செய்கிறோம். ” ஆனால் அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார், நம்மை காப்பாற்ற இறந்தார்.
ரோமர் 4 : 25 ” அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.”
ரோமர் 5 : 9 ” இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க , கோபாக்கினைக்கு நீங்கலாகி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. “
ரோமர் 6:14 :- “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் , பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. “
சாட்சி :
யாத்திராகமம் 33 : 19 ” எவன் மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன் மேல் கிருபையாயிருப்பேன். எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ , அவன்மேல் இரக்கமாயிருப்பேன் ” என்று சொல்கிறார்.
கர்த்தர் இப்போது மோசேயிடம் நேருக்கு நேர் பேசி, அவன் சாகாதபடிக்குத் தம் கையின் நிழலில் மறைத்து வைத்தார்.
ஜெபம்
பாவம் நிறைந்த மனித குலத்தின் மீதுள்ள உமது அன்புக்கும் இரக்கத்துக்கும் நன்றி. நீர் மனிதனாக மாறி, இந்த உலகத்தில் வலிமிகுந்த சிலுவை மரணம் அடைந்து, தீயவர்களின் கைகளில் இருந்து உமது விலைமதிப்பற்ற இரத்தத்தால் எங்களை மீட்டுக்கொண்டதற்கு நன்றி. ஆமென்
Sol. நோரீன்
