நாள்: 05-04-2023
முதல் இடத்தில்
மத்தேயு 6 : 33 – 34″ முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடு போதும்.”
மேற்கூறிய வசனங்கள், முதலில் இலக்கைக் கொண்டு, பின் அவை சரியானவைகளாக இருக்க வழிமுறையைத் தேடி பிறகு அதற்காக பாடுபட வேண்டும் என்று சொல்கிறது.
நம் வாழ்வில் மிக முக்கியமான விஷயம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவைகளை நமது முன் வரிசையில் வைத்திருக்க வேண்டும். வணிகம் மற்றும் பொருள் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் பொதுவாக காண்கிறோம். ஆனால் இந்த விஷயங்கள் கர்த்தருக்கு முக்கியமானவை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நல்ல விஷயங்களைப் பெற்று அனுபவிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆனால் அவருக்கு நம் வாழ்வில் முதல் இடத்தைக் கோருகிறார். நாம் வேறு எதையும் தேடுவதற்கு முன்பு , கர்த்தரின் ராஜ்யத்தையும் அவருடைய வழிகளையும் தேட வேண்டும் என்று நினைக்க வேண்டும்.
தேடுதல் என்ற வார்த்தை மிகவும் வலுவான வார்த்தையாகும். இதன் பொருள் ” பின்பற்றுவது “, ” வேண்டுவது ” மற்றும் உங்கள் முழு பலத்துடன் தொடர்வது.” என்பதாகும்.
நாம் எதையாவது தேடும்போது, அதைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறோம் , அதைப் பற்றி பேசுகிறோம் , அதை பெறுவதற்கு ஒரு விலை கொடுக்க ஆர்வமாக இருக்கிறோம். சிலர் கர்த்தரைத் தேடும் வலையில் விழுந்துவிடுவார்கள், அதனால் அவர் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.அவர்கள் அதைச் செய்யும்போது, அவர்களின் நோக்கங்கள் தவறாக இருந்தால் கர்த்தர் அவர்கள் விரும்புவதைத் தடுக்கிறார்.
நாம் கர்த்தரின் கையை அல்ல, அவரின் முகத்தைத் தேடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் அவருடைய ” பிரசன்னத்தைத் ” தேட வேண்டும், அவருடைய “பரிசுகளை” அல்ல. அவர் யாருக்காக இருக்கிறார் என்பது மட்டுமல்ல , நமக்காக அவர் என்ன செய்ய முடியும் என்பதையும் முனைப்போடு தேட வேண்டும்.
நாம் அவரை நேசிப்பதால் அவருடன் நேரத்தை செலவிட விரும்பும்போது கர்த்தர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். நாம் அவரைப் துதிக்கும்போதும் ஆராதிக்கும் போதும் அவர் மகிழ்ச்சியடைகிறார். ஏனென்றால், ஒவ்வொருவரும் அவர்களது செயல்களினால் அல்ல , தாங்கள் கொண்டாடப்படுவதனால் மகிழ்ச்சி அடைகிறார்கள். நம் மீது மட்டும் ஆர்வம் இல்லாமல் நாம் அவர்களுக்காக என்ன செய்யோம் எண்டு எதிர் பார்க்கிற நண்பர்களை நாம் விரும்புவதில்லை. நாம் யார் என்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்க வேண்டும் என்றும் , அவர்கள் நம்மை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாமும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். கர்த்தருக்கு
நாம் முதலிடம் கொடுக்கும்போது, அவரை அங்கேயே வைத்து, அவருடைய வழியில் விஷயங்களைச் செய்ய முற்படும்போது, நாம் அவரில் மகிழ்ச்சியடைகிறோம் என்பதைக் காண்பிக்கிறோம். பின்னர் அவர் நம் இதயத்தின் ஆசைகளை நமக்கு நிறைவேற்றித் தருகிறார்.
சங்கீதம் 37 : 4
” கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு , அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். “
கர்த்தர், நமக்கு ஒரு நாளைக்கு போதுமான கிருபையை வழங்குகிறார், மேலும் நம் மனதில் சோர்வு , உதவியின்மை, களைப்பு , மனப்பிறழ்வு எல்லாற்றையும் நீக்குகிறார். நாம் ஒரு நாளை, அந்த நேரத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான், ஒவ்வொரு நாளும் வரும் சவால்களை அவைகள் வந்தபடியே சந்திக்கவும், நம்மனதில் அந்தப் பிரச்சனையை புதைக்காமல் இருக்கவும் இயேசு இந்த வசனத்தில் நமக்குக் கற்பிக்கிறார். நாம் அப்படிச் செய்தால், நியமித்த நேரத்தில் கர்த்தருடைய போதுமான அளவு கிருபை , நம் வாழ்வில் என்ன நடந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிப்பதற்குக் கிடைக்கும்.
ஜெபிப்போம்,
உமது பிள்ளைகள்மீது நீர் வைத்திருக்கும் அற்புதமான அன்பிற்கு நன்றி அப்பா. பரிசுத்த ஆவியானவரே, எங்கள் இருதயங்களைத் ஆராய்ந்து , உமது ராஜ்யத்திற்கு தேவையில்லாத எண்ணங்களை நீக்கும் , ஏனென்றால் நாங்கள் உமது ராஜ்யத்தில் இருந்தால், எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம் .ஆமென்.
Sol. கமல்
