நாள்: 30-03-2023
பரிசேயர் மற்றும் ஏரோதியர்களின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
” அவர் அவர்களை நோக்கி, நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார். “
மாற்கு 8 : 15
புளிப்பு என்பது ( ஈஸ்டைப் போல ) மாவை அல்லது திரவத்தை நொதிக்க வைத்து புளிக்க பயன்படுத்தப்படும் பொருள் என்பது நமக்குத் தெரியும். புத்தக உரையின்படி சரியான ஒத்த பொருள் – தேர்ந்தெடுப்பது , பாதிக்கப்படுவது , உட்செலுத்துவது , வேரூன்றுவது, தடுப்பது அல்லது புளித்தல். இது ஒன்றை உருவாக்கி மற்றொன்றில் புகுத்துவது, அதனால் முழுவதும் பாதிக்கப்படுதலாகும். இந்த பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்று ஏரோதியர்கள் எல்லோரும் இயேசு வாழ்ந்த காலத்தில் படித்தவர்களாக , உலக ரீதியில் நல்ல பதவியில் உள்ளவர்களாக இருந்தார்கள். எல்லா நேரங்களிலும் இயேசுவையும் அவருடைய சீடர்களையும் கேள்விகேட்பதே அவர்களுடைய வேலையாக இருந்தது.
மாற்கு 8:11 கூறுகிறது: “அப்பொழுது பரிசேயர் வந்து, அவரைத் தர்க்கிக்கத் தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். “
அவர்களின் இந்த மனப்பான்மை அல்லது நோக்கங்களுக்குப் பின்னால் உள்ள காரணம், கர்த்தருடைய விஷயங்களைப் பற்றிய பரிசுத்த ஆவிக்குரிய அறிவு இல்லாத , உலக அறிவால் கொணரப்பட்ட நம்பிக்கையின்மை. வசனம் 17ல், இயேசு இதை அறிந்து, அவர்களிடம், “உங்களிடம் அப்பம் இல்லையென்று ஏன் யோசிக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் பார்க்கவில்லையா அல்லது புரியவில்லையா? உங்கள் இதயம் இன்னும் கடினமாக இருக்கிறதா? என்று கேட்டார்.
இயேசு அதை ஏற்கனவே அறிந்திருந்தார், எனவே பரிசேயர்களின் புளிப்பு மற்றும் ஏரோதியர்களின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் தம் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.
அவருடைய சொந்த சீடர்களால் புரிந்துகொள்ள முடியாதபோது, பரிசுத்த ஆவியின் மூலமாக அறிவின் ஆழமான விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளும்படி அவர் அவர்களை வலியுறுத்தினார். இயேசு அவர்களுடைய எண்ணங்கள் வெளித்தோற்றத்தில் ரொட்டித் தட்டுப்பாடு மற்றும் பொருளாசை சார்ந்த விஷயங்களைப் பற்றியது என்பதையும் அவர்களுக்குப் புரிய வைத்தார்.
மேலும் கர்த்தர் சம்பந்தப்பட்ட ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டினார்.
இயேசு கூறுகிறார்: அவிசுவாசம் இதயத்தை கடினப்படுத்துவதால் தோன்றுகிறது. ஆத்துமாவை கர்த்தரின் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ள தடை செய்கிறது. இந்த அவநம்பிக்கையின் காரணமாக அவர்கள் இயேசுவை மெசியாவாகவும், ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகவும், கடைசியாக தேவனுடைய கிரியைகளைக்கூட அதாவது அவரது அற்புதங்கள், குணப்படுத்துதல் மற்றும் விடுதலை போன்றவைகளையும் கூட ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டனர்.
எல்லா இடங்களிலும் இயேசு தம்மை அவநம்பிக்கையுடன் கேள்வி கேட்பவர்களுக்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்று அறிந்திருந்தார். சில சமயங்களில் அவர் பதிலளித்தார் . சில சமயங்களில் அவர்களைக் கண்டித்தார். அது பிடிவாதமான அவநம்பிக்கையாக இருந்தபோதிலும், கிறிஸ்து இங்கே இவை ஏன் அடிக்கடி நடக்கிறது என்று தம் சீடர்களைக் கண்டித்தார். அவரது அர்த்தத்தைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். அவருடைய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தார்கள் . மற்றும் அவருடைய பாதுகாப்பின்மீது அவநம்பிக்கை கொண்டார்கள் .
பரிசேயர்களின் புளிப்பானது பாசாங்குத்தனம் .
லூக்கா 12:1 “அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாக கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். சதுசேயர்களின் மற்றும் அவிசுவாசிகளின் புளப்பு ,ஏரோதியர்களின் உலகரீதியிலான ஈடுபாடு ,இந்த மூன்று குழுக்களும் வெளிப்புற சடங்குகளை மட்டுமே கருத்தில் வைத்தனர் . மேலும் ஆவியின் உள்ளான பரிசுத்தமாக்குதலை புறக்கணித்தனர்.
ஜெபம் .
வேதாகமத்தில் உள்ள சத்தியங்களை எங்களுக்குக் கற்பித்ததற்கு நன்றி. ஆண்டவரே, கர்த்தரின் அனைத்து புனிதர்களும் மனிதர்களின் உள்ளார்ந்த வாழ்க்கையின் ஆழமான ஆவிக்குரிய அம்சங்களைப் புரிந்துகொண்டு, கர்த்தரை அறிந்து வாழ்ந்ததைப் போல நாங்களும் அவருடன் வாழும் நெருங்கிய ஐக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்.
Sol. செலின் போர்டியா
