தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-03-2023

” உன்னை இந்த  ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக ஆக்குவேன், அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும்  உன்னை மேற்கொள்ள மாட்டார்கள் ,  உன்னை இரட்சிப்பதற்காகவும் உன்னைத்  தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 15 : 20

எரேமியா , தன்னுடைய எதிரிகளிடமிருந்தும் தம்மை துன்புறுத்துபவர்களிடமிருந்தும்  மற்றும் அவதூறு பேசுபவர்களிடமிருந்தும்  தம்மை விடுவிப்பதற்காக இரக்கத்தை வேண்டி   கர்த்தரிடம் மன்றாடினார்.  காரணமே இல்லாமல் மக்கள் தன்னை வெறுப்பதாகவும், சபித்ததாகவும் புகார் கூறினார்.  கர்த்தர் எரேமியா  தீர்க்கதரிசியை அழைத்து, அவருடைய அவநம்பிக்கையை நிறுத்திவிட்டு, கர்த்தருடைய  தூதராக அவருடைய பணிக்குத் திரும்பும்படி கேட்டார்.

 எரேமியா 15:19 “நீ  திரும்பினால், நான் உன்னைத் திரும்ப சீர்படுத்துவேன். என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய். நீ தீழ்ப்பானதிலிருந்து விலையேறப் பெற்றதை பிரித்தெடுத்தால் என் வாய் போலிருப்பாய், நீ அவர்களிடத்தில் திரும்பாமல் அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்கிறார். “

 நாம் கர்த்தருடன் இருந்தால், அவருக்கு உண்மையாக இருந்தால், அவர் நம்மை எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுவிப்பார் அல்லது  அவற்றைக் கடந்து செல்ல வைப்பார் .  பல விஷயங்கள் பயமுறுத்துவதாகத் தோன்றினாலும் அது கிறிஸ்துவின் உண்மையான விசுவாசியை காயப்படுத்தாது.  அரணான வெண்கலச் சுவரைப்போல் அவர் நம்மைப் பாதுகாப்பார்.  “வெண்கலச் சுவர்” என்பது, அவர் தம்முடைய பலத்தினாலும், வல்லமையினாலும், கிருபையினாலும் நம்மை நிரப்புவார் என்பதைக் குறிக்கிறது. மிகப் பெரிய மற்றும் அதிக வல்வமை மிக்க சக்திகளை முன்னெடுக்க அவர் நமக்கு அதிகாரமளிக்கிறார்.

எரேமியா 1:19 ” அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள் , உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். “

நாம் அவருடைய வார்த்தையில் மகிழ்ச்சியடைந்து, அதை தொடர்ந்து தியானிக்கும்போது இவை அனைத்தும் நிகழ்கின்றன. வெண்கலமானது செம்பு மற்றும் தகரம் ஆகியவற்றின் வலுவான கலவையாகும்.  அவர் நெருப்புச் சுவராக மட்டுமல்ல, வெண்கலச் சுவரைப் போல நம்மை அரணாகவும் ஆக்குவார் என்று கர்த்தர் இந்த வசனத்தில் வாக்களிக்கிறார்.  “ஏனெனில், நான் அவர்களுக்குச் சுற்றிலும் அக்கினிச் சுவராகவும், அவர்கள் நடுவில் மகிமையாகவும் இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

 எப்பொழுது   பரிசுத்த ஆவியின் கனி நம்மில் தரமுள்ளவைகளாக  இருக்கிறதோ , அப்போது நாம் வெண்கலத்தைப் போல மிகவும் பலமாகிறோம்.

கலாத்தியர் 5 : 22 – 23 “ஆவியின் கனியோ  அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு  நற்குணம் , விசுவாசம், சாந்தம் , இச்சையடக்கம் “

 இந்த எல்லா பண்புகளிலிருந்தும் நாம் வலிமையைப் பெறுகிறோம். கர்த்தர் அவருடைய வசனங்களினால்  நம்மை செங்கல்  செங்கலாகக் கட்டுவார். அவருடைய வார்த்தைகளை நாம் உள்வாங்கி, ஒருங்கிணைத்து வெண்கலச் சுவராக நம்மை  மாற்ற வேண்டும்.

 அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் அநேகர், பல  சக்திகளாலும்  தீமையின் முகவர்களாலும் குறி வைக்கப்படுகின்றனர். நாம் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.  இத்தகைய தீய சக்திகளோ , நபர்களோ நமக்கு எதிராக வெற்றிபெற முடியாது என்பதை இந்த வசனம் நமக்கு உறுதியளிக்கிறது.ஒரு வலிமைமிக்க வீரனாக கர்த்தர் நம்முடன் இருக்கும் வரை கர்ஜிக்கும் சிங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக நமக்கு வெளிப்புற பாதுகாப்பு உண்டு.

 1பேதுரு 5:8 ” தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் , விழித்திருங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றித் திரிகிறான். “

 இந்த வசனங்கள் நமக்கு மனநிறைவை தரும்.  இது காமம், பெருமை, அதிகாரம், புகழ் மற்றும் வாழ்க்கையின் இன்பங்களுக்கு எதிரான உள் பாதுகாப்பு. கர்த்தர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார், பாதுகாக்கிறார், காப்பாற்றுகிறார் என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.  இது நம்மை அமைதியடையச் செய்கிறது . மேலும் வெண்கலச் சுவரின் இருபுறமும் உள்ள ,  எதிரிகள் அதாவது வெளிப்புற எதிரிகள் மற்றும் உள் எதிரிகளுக்கு பயப்படாத ஒரு தன்மையை உருவாக்குகிறது.  உள் எதிரிகள் நம் அமைதியைப் பறிக்கிறார்கள்.  வெளிப்புற எதிரிகள் நம் இருப்பையே அச்சுறுத்துகிறார்கள். கர்த்தரே நம்மை  உள் மற்றும் வெளிப்புற எதிரிகளுக்கு எதிராக ஒரு வெண்கல வேலியால் சூழப்பட்ட சுவராக உருவாக்குகிறார்.  அதனால் நாம்  வெற்றி, அமைதி, மகிழ்ச்சி, பலன் மற்றும் பாதுகாப்பானவர்கள்.

 ஜெபம்.

பரலோகத் தந்தையே,  எங்களது எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மை முழுமையாகச் சார்ந்திருக்க எங்களுக்கு கிருபையைத் தந்தருளும். எங்களைக் கோட்டையான வெண்கலச் சுவராக ஆக்கி எப்பொழுதும் வெற்றியுடன் இருக்க எங்களுக்கு உதவுமாறு  இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன்.ஆமென்.

Sol .  ஜிஜி ஜேக்கப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *