தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-02-2023

” உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன், பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன், அதினால் நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.”

எசேக்கியல் 36 : 11

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு. நம் விசுவாசம் விரிவடையும் போது கர்த்தர் நமது வளர்ச்சி, செழிப்பு , மற்றும் அமைதிக்கான விதையைப் பெருக்குவார். மேலே உள்ள வசனம் ஒரு அற்புதமான வாக்குறுதி. இங்கே கர்த்தர் , நாம் பெருகுவோம், நீடித்திருப்போம்,  பலனடைவோம் என்பதற்கு உறுதியளிக்கிறார். அவர் நம் எண்ணிக்கையையும் பலத்தையும் பெருக்குவார். அவர் நம் உதடுகளின் பலனையும் , நம் கர்ப்பத்தின் கனியையும் நமது ஆவியின் கனிகளையும் உழைப்பின்  பலனையும் பெருக்குவார்.

சங்கீதம் 115 : 14 ” கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவார்.”

 மேற் கூறிய வசனம் , நம்முடைய விசுவாசத்தின்  ஆரம்பத்தில் கர்த்தருடன் நடப்பதைவிட , இப்போது கர்த்தர் நமக்குச் சிறப்பாக செய்வார் என்று உறுதியளிக்கிறது. கர்த்தர் நாம்  எதிர்பார்த்ததைவிட எதிர்காலத்திலும் நித்தியத்திலும் நமக்காக சிறந்த ஒன்றை ஒதுக்கி வைத்திருக்கிறார் . அவர் நமக்கு பிந்தைய மழையையும்  அவருடைய இரக்கத்தையும் அன்பையும் காலைப்பனிபோலவும் அனுப்புவார்.

யோவேல் 2 : 23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுங்கள், அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து , உங்களுக்கு முன்மாரியையும் பின்பாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப் பண்ணுவார். “

கர்த்தரை நாம் மிக நெருக்கமாக அறிவோம் ,  அவரைச் சார்ந்திருக்கும் போது  அவரை அன்பு செய்வதும் அதிகரிக்கும்.

மகிழ்ச்சி, அமைதி, வளம், ஆரோக்கியம், ஞானம், செல்வாக்கு, பலம் மற்றும் இரக்கம் எல்லாமே மற்றவர்களிடமிருந்து அல்ல கர்த்தரிடமிருந்து மட்டுமே வரும். இவை எல்லாமே அதிகரிக்கும்.

நம்முடைய சவால்களை எதிர்கொள்ள நம்மை பலப்படுத்தி நம்முடைய வேலைகளை ஸ்தாபிக்கிறார். அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்ட நாம் , கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்த வேண்டும்.

யாக்கோபு 4 : 10

” கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுத்துங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”

பெருமையைத் தவிர்ப்பதற்கும் , நமக்கு  ஏற்படுகின்ற  சலனங்களைத் தோற்கடித்து நம்மை மகிமைக்கு நேராக உயர்த்தவும்  , இது மட்டுமே நமக்கு வழியாகும்.

யோவான் 3 : 30 ” அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். “

நாம் பிரமிக்கத்தக்க வகையிலும் , அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறோம்.

சங்கீதம் 139 : 14 ” நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் , உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள் , அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். “

கலாத்தியர் 5 : 22

” ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம் , சமாதானம், நீடிய பொறுமை, தயவு , நற்குணம், விசுவாசம், ” இந்த ஆவியின் ஏழு குணங்களும் நம்முடைய தார்மீக, சமூக, தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய மேன்மையின் அடிப்படையாகும். அத்தகைய பலனைத் தருவதற்கும் அதை அதிகரிப்பதற்கும் நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். அவருடைய வசனங்கள் நிறைய பலன்களைத் தருவதற்கும் சாத்தானிடமிருந்து பாதுகாப்பை தருவதற்கும் நம்மை உத்வேகப்படுத்துகிறது.

வாக்குறுதிகள் நிறைவேறும்  வரை நாம் காத்திருக்காமல்,  நன்றியறிதல்களாலும்,   அவருடைய மகிமையைக் குறித்த துதித்தல்களாலும்  ஆராதித்தல்களாலும் நம் இருதயத்தை நிரப்ப வேண்டும் . இரண்டாவது முறை நமக்கு  இன்னல்கள் வருவதை கர்த்தர் அனுமதிக்க மாட்டார்.

” அவர் சர்வசங்காரம் பண்ணுவார், இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. ”  நாம் சகிப்பதற்கு பல சிரமங்கள் இருக்கலாம். பல சவால்களை சமாளிக்கலாம். ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் நமக்கு வாக்களித்ததை செய்ய வல்லவர் என்பதில் நாம் எப்போதும்  நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாகூம் 1 : 9

கர்த்தர்தாமே நம்மில் குடியிருக்கும்போது , அவர் நம்முடைய தனிப்பட்ட நேரத்தில் நம்முடன் பேசிய வார்த்தைகள் நம்மை நிரப்பும் என்பதை உறுதியுடன் நம்ப வேண்டும் . அவரே நம்முடைய வெற்றிக்கும் பாதுகாப்பிற்கும் ஆதாரம்.

எங்கள் பரலோகத் தந்தையே, எங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிளையும் உயர்த்தப் போகிறீர் என்ற  உம்முடைய வாக்குறுதியைப் பெறுகிறோம் என்று விசுவசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றி கூறுகிறோம் . ஆமென்

Sol. ஜிஜி ஜேக்கப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *