நாள்: 16-02-2023
இயேசுவும் அவருடைய இரவுப் பார்வையாளரும்.
கர்த்தர் உலகத்தை மிகவும் நேசித்தார். அவர் தம்முடைய ஒரே குமாரனைப் கொடுத்துஇருக்கிறார். அதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.
யோவான் 3 : 16

“ தேவன் , தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜுவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். “
பரிசேயரும் இஸ்ரவேலின் பெரிய போதகருமான நிக்கோதேமஸ் என்பவர் இரவு நேரத்தில் இயேசுவிடம் வந்து ” ரபி நீர் கடவுளால் அனுப்பப்பட்ட போதகர் என்பதை நாங்கள் அறிவோம் . நீங்கள் செய்யும் அற்புதங்களை கர்த்தர் உங்களுடன் இல்லாவிட்டால் யாராலும் செயாய முடியாது என்று கூறினார்.
அதற்கு இயேசு , ஒருவன் மறுபடி பிறக்காதவரை தேவனுடைய ராஜ்யத்தை பார்க்க முடியாது என்றார். நிக்கோதெமஸ் திகைத்துபோனார். ஒரு வளர்ந்த மனிதன் எப்படி பிறக்க முடியும் ? அவர் நிச்சயமாக தனது தாயின் வயிற்றில் நுழைந்து இரண்டாவது பிறக்க முடியுமா?
இயேசு அவருக்குப் பல இரகசியங்களைப் போதித்தார்.
1 . ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காதவரை ஒருவரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.
2 . ஒரு நபர் மனித பெற்றோரால் உடல் ரீதியாகப் பிறப்பார். ஆனால் அவர் ஆவியால் ஆன்மீக ரீதியில் பிறப்பார்.
3 . நீங்கள் அனைவரும் மீண்டும் பிறக்க வேண்டும் . காறறு வீசும் போது அதன் ஒலி கேட்கிறது. ஆனாலும் அது எங்கிருந்து வருகிறது ? எங்கு செல்கிறது ? என்பது தெரியவில்லை. ஆவியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்படித்தான்.
4 . பரலோகத்திலிருந்து இறங்கி வந்த மனுஷகுமாரனைத் தவிர வேறு யாரும் பரலோகத்திற்கு ஏறியதில்லை.
5 . மோசே வெண்கலப் பாம்பை வனாந்தரத்தில் ஒரு கம்பத்தில் உயர்த்தியது போல மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும். அதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.
6 . தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு வெறுமனே அனுப்பாமல் நமக்கு இரட்சகராக இருக்கவே அனுப்பினார் . குமாரனை விசுவாசிக்கிறவன் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ஆனால் விசுவாசிக்காதவன் தேவனுடைய குமாரனை விசுவாசிக்காதபடியினால் அவன் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப் பட்டிருக்கிறான்.
7 . வெளிச்சம் உலகில் வந்தது. ஆனால் மக்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களின் செயல்கள் தீயவை. ஆனால் எவரொருவர் எப்போதும் உண்மையான செயல்களை செய்கிறாரோ , அவர் கர்த்தருக்கு கீழ்படிவதன் மூலம் வெளிச்சத்திற்கு வருகிறார்.
இயேசு இரவுநேரங்களில் ஜெபித்தார். கர்த்தர் அவரை வழிநடத்தினார் , மற்றும் அவருக்கு பலம் கொடுத்தார்.
ஜெபம்
தந்தையே இரவும் பகலும் பலர் உங்களிடத்தில் வரட்டும். அவர்களை உங்கள் அன்பாலும் ஒளியாலும் நிரப்புங்கள். ஆமென்.
Sol. விக்டிமிதிலா.
