நாள்: 13-02-2023
" இதோ, நான் வாசலில் நின்று தட்டுகிறேன்,யாராவது என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனிடம் வந்து அவனோடும் , அவன் என்னோடும் உணவருந்துவான். "
வெளிப்படுத்தின விசேஷம் : 3 : 20
வேதாகமத்தில் மகவும் பரிச்சயமான வசனம் இது. இதில் நம்முடைய கர்த்தர் கதவுக்கு வெளியே நின்று கதவைத் தட்டுகிறார். அவர் கதவை தள்ளவும் இல்லை. திறப்பதற்காக உடைக்கவுமில்லை. அவர் உங்கள் இருதயம் என்னும் கதவை மெதுவாகத் தட்டுகிறார். நீங்கள் அவரை உள்ளே விட்டால் அவர் உங்களுடனும் நீங்கள் அவருடனும் உணவருந்துவீர்கள்.
எசாயா 45 : 1- 2
” கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து , அவன் வலது கையை பிடித்துக் கொண்டு அவனுக்குச் சொல்கிறதாவது ; நான் உனக்கு முன்னே போய் , கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.” இந்த அதிகாரத்தில் இதற்கு பின் பகுதியில் இதே இயேசு , ” நான் உனக்கு முன்பாகச் சென்று வெண்கலக் கதவுகளை உடைத்து இரும்பு தாழ்ப்பாளை முறித்து ” என்று சொல்கிறார். கர்த்தர் உங்களுடைய வீட்டில் மெதுவாகத் தட்டுகிறார், ஆனால் உங்களுடைய எதிரிகளின் கதவை , அது எந்த உலோகத்தினால் இருந்தாலும் , எந்த அளவில் இருந்தாலும் அவற்றை உங்களுக்காக உடைப்பார். அது உங்களுக்கான அவரது செயல்பாடு.
சங்கீதம் 24 : 7 சொல்கிறது
” வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் , அநாதி கதவுகளே, உயருங்கள் , மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். ” மகிமையின் ராஜா உள்ளே வரும்போது , தட்டுவதும் உடைப்பதும் வெட்டுவதும் தேவையில்லை. ஒவ்வொரு கதவும் அவருக்கு முன்பாக எழுந்து நிற்கிறது. அல்லேலூயா!!. இந்த மகிமையின் ராஜா வலிமையானவர். போரில் வல்லவர். படைகளின் ஆண்டவர்.
நியாதிபதிகள் 16 : 3
” சிம்சோன் நடுராத்திரி மட்டும் படுத்திருந்து , நடுராத்திரியில் எழுந்து , பட்டணத்து வாசல் கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் பிடித்து , தாழ்ப்பாளோடே கூடப் பெயர்த்து தன் தோளின்மேல் வைத்து , எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு சுமந்து கொண்டு போனான். ” காசாவில் சிம்சோன் விபச்சாரியுடன் தங்கியிருந்த போது பெலிஸ்தியர்களின் பிரபுக்கள் அவரைப் பிடிக்க காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவில் சிம்சோன் நகரத்தின் வாயில் , நுழைவாயில்கள் , தடைகள் எல்லாவற்றையும் அகற்றினான். இது ஈடு இணையற்றது. அவர் அதை அங்கே எறியவில்லை , ஆனால் கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்திலுள்ள காசாவிலிருந்து 36 மைல் மற்றும் 3300 அடி உயரமுள்ள ஹெப்ரோனுக்கு கொண்டு சென்றார். கர்த்தரின் வல்லமையால் மட்டுமே ஒரு மனிதனுக்கு இந்த அசாதாரண சாதனையை செய்ய உதவ முடியும். இவரே இஸ்ரவேலின் கர்த்தர். உங்களுடைய மூடிய கதவுகளை அழிக்கக்கூடிய அதிகாரத்தை அவர் உங்களுக்கு அளிக்க முடியும் . சுவர்கள் எத்தனை காலம் வேண்டுமானாலும் அங்கே இருக்கட்டும். நாம் அங்கே இருக்கிறோம். பிரிட்டானிகா. காம் கூறுகிறது , எரிக்கோவிலுள்ள குடியேற்றத்தைச் சுற்றி மிகப் பெரிய கற்சுவர்கள் குறைந்தபட்சம் 13 அடி ( 4 மீட்டர் ) உயரமும் , கண்காணிப்பு கோபுரமும் ,பெரும்பலம் கொண்ட 28 அடி உயரமுள்ள சுவரும் அதன் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்தன. அதைச் சுற்றி மனித ஊடுருவல்களைத் தடுக்க தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. அந்தச் சுவர்கள் மிகவும் பலமாக இருந்தன. இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவது சாத்தியமற்றதாகிவிட்ட நிலை அது. ஆனால் கர்த்தர் பேசினார். ஏழு ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் சென்றார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் எக்காளம் ஊதிய ஆசாரியர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள் . பின் வீரர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை பின்தொடர்ந்து சென்றனர். இது 7 வது நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் செய்யப்பட்டது , அவர்கள் 7 முறை சுவரைச் சுற்றி சுற்றி சென்றார்கள். யோசுவா அவர்களைக் சத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்படி கட்டளையிட்டார். கோட்டையாகக் கட்டப்பட்ட சுவர், இஸ்ரவேலர்களுக்கு முன்னால் ஒரு அட்டைப் பொதியாய் விழுந்தது. அவர்கள் நேராக உள்ளே சென்றனர். யோசுவா 6 ம் அதிகாரத்தில் இதைக் காணலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 3 : 7
” தாவீதின் திறவுகோலை உடையவரும் , ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவருமாயிருக்கிறவர். “
உங்கள் முன்னே கதவுகள் , சுவர்கள் , வாசல்கள் மூடப்பட்டு உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறதா?
உங்களிடம் அனைத்திற்கும் சாவிகள் உள்ளன. வெவ்வேறு கதவுகளுக்கு வெவ்வேறு சாவிகள் உள்ளன. எந்த சாவியை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதை கர்த்தருடைய வசனத்தில் ஜெபிக்கும் இடத்தில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் முதலில் நீங்கள் இயேசுவை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இயேசுதான் அதைத் திறக்கும் குறியீடு. இயேசுவின் வல்லமையான நாமத்தில் உங்களுக்கு கதவு திறக்கட்டும். ஆமென்.
Sol. லலிதா மேனன்.
