நாள்: 14-12-2022
பிசாசு அழிக்கப்பட்டுவிட்டது.
கர்த்தரின் பிள்ளைகளாக நாம் தோல்வியிலிருந்து வெற்றிக்கோ அல்லது சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கோ நகரவில்லை. ஆனால் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு நகர்ந்தோம்.
ரோமர் 1 : 17 ” விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. “

எனவே நமது வெற்றியின் தொடக்கப்புள்ளி கிறிஸ்துவின் வெற்றியாகும்.
1 கொரிந்தியர் 15 : 57 ” நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். “
சந்தேகம் , தோல்வி, விரக்தி , இயலாமை, நம்பிக்கையின்மை போன்ற எண்ணங்களுடன் நாம் வெற்றியான வாழ்க்கையை முன்னெடுக்க முடியாது. நாம் நீண்ட நாட்கள் பிசாசினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. ஏனென்றால் அவனுக்கு அரச குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை தோல்வி அடையச் செய்வதற்குரிய வல்லமையோ அதிகாரமோ கிடையாது. அவன் கர்த்தருடைய பிள்ளைகளை மட்டுமே ஏமாற்ற முடியும்.
மரண பயத்திலிருந்து விடுபடுதல்.
நாம் மரண பயத்திலிருந்து மட்டுமல்ல சாத்தானிடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். இயேசு , மாமிசத்தில் வந்து , சாவுக்கு அதிகாரம் உடையவனை அழிப்பதற்காக , மரண சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்து நமக்காக மரித்தார். அதாவது சாத்தானை அதிகாரம் இல்லாதவனாக ஆக்கினார். அவனை முடக்கினார். அவனை ஒன்றுமில்லாதவனாக பூஜ்யத்திற்கு தள்ளினார். இப்போது அவனால் மனிதனுடைய ஆவியையும் ஆத்துமாவையும் அழிக்க முடியாது.
1 கொரிந்தியர் 15 : 55″ மரணமே! உன் கூர் எங்கே ? பாதாளமே ! உன் ஜெயம் எங்கே ?
இயேசு , சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்வதற்கு அவனை விலக்கினார். அவனது செங்கோலையும் அதிகாரத்தையும் பறித்து , பூமி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தவும் ஆட்சி செய்யவும் அதை மனிதனிடம் கொடுத்தார்.
ஆதியாகமம் 1 : 26 ” பின்பு தேவன் : தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். “
சங்கீதம் 8 : 4 – 6 ” மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் , மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் ? நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்படுத்தினீர். “
எபிரேயர் 2 : 8 ” சகலத்தையும் அவனுக்குக் கீழ்படுத்தினார் என்கிற விஷயத்தில் அவனுக்கு கீழ்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை. “
ஆனால் சாத்தானின் பொய்களால் ஆதாமும் ஏவாளும் ஏமாற்றப்பட்டனர்.
* அவர்கள் கர்த்தரின் மறைப்பையும் இழந்தனர்.அவர்கள் ஆட்சி செய்யும்
அதிகாரத்தை இழந்தனர்.கர்த்தருடைய கிரீடம் அவர்கள் தலையிலிருந்து விழுந்தது.அவர்கள் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் வந்தனர். இப்போது , கர்த்தருடைய படைப்புகளையும் மனிதனையும் அவனால் ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்தான். ஆனால் அவர்களுக்கு, இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுக்கக்கூடிய “கிருபை என்று அழைக்கப்படும். ஒன்று கர்த்தரிடம் இருந்தது என்பதை சாத்தான் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அன்பும் இரக்கமும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் :13 : 8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவும் அதை வணங்குவார்கள் .” உலகம் உண்டானதிலிருந்து கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி.
*ரோமர் 4 : 25 ” அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும் , நாம் நீதிமான்களாக ஆக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். “
மனிதனுடைய வீழ்ச்சிக்கு கர்த்தர் விலைமதிப்பற்ற கிரயத்தை செலுத்தினார். ஏன் ? அவருடைய மகன்களும் மகள்களும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய அழகை , தங்களுடைய கீழ்படிதல் மற்றும் அன்பின் வழியாக பிரதிபலிக்க வேண்டும், திரும்பவும் பூமியில் கர்த்தருடைய ராஜ்யம் நிறுவப்படவேண்டும் என்ற ஆசையை நிறைவைற்றவே இந்த கிரயத்தை செலுத்தினார். ஆமென்.
சாட்சி
குணப்படுத்தவும், பாதுகாக்கவும் , நமக்கு எதிரான சாத்தானின் அனைத்து குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தவும், நமக்கு எதிராக எழுதப்பட்ட குறியீட்டை ரத்து செய்யவும் , தீயசக்திகளின் வல்லமைகளையும் அதிகாரங்களையும் நிராயுதபாணிகளாக்கவும் , நம்மை கழுவவும் , நமது மனசாட்சியை பனிபோல வெண்மையாக்கவும், இயேசுவின் ரத்தத்திற்கு அற்புதமான வல்லமை உண்டு.
எனவே இயேசுவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் நமது ஜெபங்கள் எல்லாம் பதிலளிக்கப்படுகின்றன. பலவிதமான நோய்களிலிருந்து மக்கள் குணமாக்கப்படுகின்றனர்.
ஜெபம்
தந்தையே, சிலுவையில் நீர் எங்களுக்காக என்ன சாதித்தீரோ அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். பாவத்திலிருந்தும் , நோயிலிருந்தும் , நித்திய தண்டனையிலிருந்தும் எங்களை மீட்க நீர் சிந்திய விலைமதிப்பற்ற உமது ரத்தத்திற்காகவும் நன்றி செலுத்துகிறோம். ஆமென்.
Sol. நொரீன்
