நாள் – 01-07-2022
அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். யோவா 8:8

நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் நாம் நல்லவர்களாக இல்லா விட்டாலும் நல்லவர்கள் போலவும், ஒரு குறைகூடா இல்லாதவர்கள் போலவும் மற்றவர்களுக்கு முன்பாக காட்டியிருக்கிறோம். நாம் எப்போதாவது வேலை கேட்டு எழுதப்பட்டிருக்கும் தவறான விண்ணப்பத்தை பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை. இயேசு ஒலிவ மலைமீது ஏறினார். அவர் தேவாலயத்திற்கு வந்தார், எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து வந்தார்கள் அப்போது அவர்களுக்கு அவர் போதித்தார். அப்போது பரிசேயர்களும் சதுசேயர்களும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். சந்தேகத்தின் பேரில் அல்ல விபச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது அவள் அகப்பட்டாள், அப்போது போதகரே இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். இயேசு குனிந்து தரையிலே தன்னுடைய விரல்களால் எழுதினார், மேலும் கேட்காதவர் போல அமைதியாக இருந்தார். இயேசு எழுதினார் என்று இங்கு மட்டும் தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சொன்னார், உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர்கள் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்.
ஒவ்வொருவராக பெரியவர் முதல் சிறியவர் வரை அங்கிருந்து செல்லதுவங்கினர். இயேசு மட்டும் தனியாக இருந்தார். தலையை உயர்த்தி, உன் மீது குற்றம் சுமத்தியவர்கள் எங்கே? என்றார். அவள் பதில் சொன்னாள், ‘ஒருவரும் இல்லை” என்று. நானும் உன்னை தீர்பிடேன், அமைதியாக போ, பாவம் செய்யாதே. அவருடைய கட்டளையை விட அவரது இரக்கம் மேன்மையானது. விரும்புகிறவர்கள் மீது அவர் இரக்கம் காட்டுகிறார், யார் மீது உருக்கமாய் இருக்க விரும்புகிறாரோ அவர் மீது உருக்கமாய் இருக்கிறார். இதனால்தான் நாம் இன்று இங்கு இருக்கிறோம், ஏனென்றால் நம்முடைய அக்கிரமங்களை அவர் கண்டுகொள்ளவில்லை.
யோவா 9:6 – இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
இயேசு சென்றுகொண்டிருக்கையில், பிறவியிலிருந்தே குருடனாய் பிறந்த ஒருவனை சந்திக்கிறார். சீடர்கள் ஏன் இவன் குருடனாய் பிறந்தான் அதற்கு காரணம் யார் என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். இது அவனுடைய பாவத்தின் காரணமாகவா அல்லது பரம்பரை சாபமா என்று விவாதிக்கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றையும் தேவன் ஒதுக்கிவிடுகிறார், இது கர்த்தருடைய மகிமைக்காக என்று சொல்கிறார். தரையில் எச்சில் துப்பி கையால் அதை குழைத்து குருடனின் கண்ணின் மீது பூசினார். அவன் பார்வை பெற்றான். இயேசு கிறிஸது மட்டுமே நாம் இருக்கும் இடத்திற்கு குனிந்து மண்ணிலிருந்து நம்மை தூக்குவார். பரிசுத்த தேவன், உன்னதமான இந்த பிரபஞ்சத்தின் தேவன், நமக்காக அவருடைய கைகளை அழுக்கு படுத்துவதைப்பற்றி கவலைப் படுவதில்லை. ஆதி 2:7 – மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார், மற்ற அனைத்தையும் உண்டாகட்டும் என்று கட்டளை மாத்திரம் கொடுத்தார். அவ்வளவாய் அவர் நம்மை அன்பு செய்கிறார்.
மற்றவர்கள் தவறு செய்தாலோ, கஷ்டத்திலிருந்தாலோ, உடனே நாம் நியாயாதிபதியின் உடையை போட்டுக்கொண்டுதான் நாம் அவர்களைப் பார்க்கிறோம். நாம் அலசி ஆராய்ந்து உடனே கற்பனைக்கேற்ற ஒரு ரிப்போர்டை நாம் தயாரித்துக்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் இதயம், அவரின் கண்கள், அவரின் கைகளாக நாம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஒருவன் கர்த்தருடைய கரத்திலிருந்தால் அவனுடைய எதிர்காலம் இப்படி யிருக்கும் என்று நம்மால் யோசிக்க வேண்டும்.
அவருடைய அன்பை நம்மில் அனுபவித்தால், அவர்கள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளப்பட்டால், மற்றவற்றை இயேசு செய்வார். தேவன் செய்ததுபோல, நம்முடைய கைகளை மண்ணில் வைத்து அழுக்குபடிய செய்யாவிட்டால் நம்மை காயப்படுத்தும், இழந்துபோன மற்றும் மரித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே, இந்த உலகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு உம்மைபோல மனமும், இருதயமும், கைகளும் எங்களுக்கு தரவேண்டும் என்று ஜெபிக்கிறோம், இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஆமேன்..
–Sol. Lalitha Menon
