தானியேல் –II – தேவ செய்தி

நாள் 20-07-2022

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசாயா 9:6.

கர்த்தத்துவத்தை தன் தோள் மீது சுமந்து கர்த்தருக்கு மட்டுமே உரித்தான பெயர்களால் அழைக்கப்படும் வருங்காலக் குழந்தையைப் பற்றிய தீர்க்கதரிசனம் இது. இயேசுவைப் பற்றிய பிரசித்தமான பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் ஒன்று.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் – கிறிஸ்து வந்ததன் நோக்கம் நமக்காகத்தான். இது மேசியாவின் மனித நேயத்தை காட்டுகிறது.

ஒரு மனிதனாக குழந்தை வடிவில் அவர் வரவேண்டி இருந்தது,  அப்போதுதான் மனிதர்கள் சந்திக்கும் எல்லா சோதனைகளை அவரும் சந்தித்தபிறகும் பரிசுத்தமாக இருக்க முடியும்.

எபி 4:15 சொல்லுகிறது நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – அனாதி காலமாக கர்த்தர் நமக்கு கொடுக்க  திட்டமிட்டது அவருடைய குமாரனாகிய இயேசுவைத்தான், இயேசு அவருடைய குமாரனாகிய நித்தியமாக இருந்தார். ‘மகன்’ எனக்கூடிய வார்த்தை பிதா, குமாரன் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவை வெளிப்படுத்துகிறது. மூவொடு தேவனில் குமாரனாக அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் இருக்கிறார்.

பிலி 2:6-7 – அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பாவத்தையும் சாவையும் வெல்லுவதற்காக அவர் பிதாவின் குமாரனாக, மனித உடலில் வந்தார்.

மத் 14:33 – அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

மத் 16:16 – சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

“தோள்கள்” – அவருடைய தலைமைத்துவத்தை உறுதிபடுத்துகிறது.

அவர் இயேசு ராஜாவாக ஆட்சி செய்வார், உலகத்தின் ராஜாவாக.

இவ்வுலகத்தின் முழு அரசாட்சியும் அவருடைய தோளின் மேல் உள்ளது. கிறிஸ்துவால் ஆதரிக்கப்பட்டு, கர்த்தருடைய தெய்வீக யோசனையால் நிறுவப்பட்டிருந்தால் அது நிரந்தரமானதாக்வும், முழுமையானாரசாங்கமாகவும் இருக்கும். வெற்றி என்பது தனி மனிதனை பொறுத்தோ அல்லது கட்சியைப் பொறுத்தோ இல்லை. இந்த வசனத்தின்படி எதிர்காலத்தில் எல்லா அரசாங்கங்கள் மற்றும் ராஜ்யங்கள் மீது ஆட்சி செய்வார் என்பதை காட்டுகிறது. தானியேல் 2:44 சொல்லுகிறது, அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; சக 14:9 – அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். இந்த அரசில் குழப்பம் இருக்காது, ஏனென்றால் கிறிஸ்து சிறந்த ஆலோசகர். ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆலோசனை குழுவை வைப்பார்.  அவர் கர்த்தர், உண்மையின் ஊற்று. அவர் ஆட்சி செய்யும் போது அவரே எல்லாமுமாய் இருப்பார், அரசியில் குழப்பங்கள் ஏதும் வராது. வேதம் சொல்லுகிறது,  1கொரி 14:33 – தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; அவர் அனைத்தையும் முறைப்படி செய்யும் தேவன். அவரிடம் தங்களை ஒப்புகொடுக்கும் குழப்பமான வாழ்க்கையை அவர் ஒழுங்கமைக்கிறார். அவருக்கு செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை.  அவருடைய ராஜ்யத்தில் முரண்பாடுகள் இல்லை. அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும்  கர்த்தரிடமிருந்து  அமைதியை கொடுக்கிறார். (ரோம 1:7).

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே  பரலோகத்தில் உம்முடைய  ராஜ்யம் இருப்பதுபோல இந்த பூமியிலும் வருவதற்காகவும், உம்முடைய ராஜ்யம் எல்லா ராஜ்யங்கள் மற்றும் அரசாங்கங்கள் மீது இருப்பதற்காகவும்  நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமேன்.

SR.ANGELICA, AOJ

தானியேல் – II – தேவ செய்தி

நாள் – 01-07-2022

அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். யோவா 8:8

நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் நாம் நல்லவர்களாக இல்லா விட்டாலும் நல்லவர்கள் போலவும், ஒரு குறைகூடா இல்லாதவர்கள் போலவும்   மற்றவர்களுக்கு முன்பாக காட்டியிருக்கிறோம். நாம் எப்போதாவது வேலை கேட்டு எழுதப்பட்டிருக்கும் தவறான விண்ணப்பத்தை பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை.  இயேசு ஒலிவ மலைமீது ஏறினார். அவர் தேவாலயத்திற்கு வந்தார், எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து வந்தார்கள் அப்போது அவர்களுக்கு அவர் போதித்தார். அப்போது பரிசேயர்களும் சதுசேயர்களும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். சந்தேகத்தின் பேரில் அல்ல விபச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது அவள் அகப்பட்டாள், அப்போது போதகரே இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். இயேசு குனிந்து தரையிலே தன்னுடைய விரல்களால் எழுதினார், மேலும் கேட்காதவர் போல அமைதியாக இருந்தார்.  இயேசு எழுதினார் என்று இங்கு மட்டும் தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சொன்னார், உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர்கள் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்.

ஒவ்வொருவராக பெரியவர் முதல் சிறியவர் வரை அங்கிருந்து செல்லதுவங்கினர். இயேசு மட்டும் தனியாக இருந்தார். தலையை உயர்த்தி, உன் மீது குற்றம் சுமத்தியவர்கள் எங்கே? என்றார். அவள் பதில் சொன்னாள், ‘ஒருவரும் இல்லை” என்று. நானும் உன்னை தீர்பிடேன், அமைதியாக போ, பாவம் செய்யாதே. அவருடைய கட்டளையை விட அவரது இரக்கம் மேன்மையானது. விரும்புகிறவர்கள் மீது அவர் இரக்கம் காட்டுகிறார், யார் மீது உருக்கமாய் இருக்க விரும்புகிறாரோ அவர் மீது உருக்கமாய் இருக்கிறார். இதனால்தான் நாம் இன்று இங்கு இருக்கிறோம், ஏனென்றால் நம்முடைய அக்கிரமங்களை அவர் கண்டுகொள்ளவில்லை.

யோவா 9:6 – இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

இயேசு சென்றுகொண்டிருக்கையில், பிறவியிலிருந்தே குருடனாய் பிறந்த ஒருவனை சந்திக்கிறார். சீடர்கள் ஏன் இவன் குருடனாய் பிறந்தான் அதற்கு காரணம் யார் என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். இது அவனுடைய பாவத்தின் காரணமாகவா அல்லது பரம்பரை சாபமா என்று விவாதிக்கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றையும் தேவன் ஒதுக்கிவிடுகிறார், இது கர்த்தருடைய மகிமைக்காக என்று சொல்கிறார். தரையில் எச்சில் துப்பி கையால் அதை குழைத்து குருடனின் கண்ணின் மீது பூசினார். அவன் பார்வை பெற்றான். இயேசு கிறிஸது மட்டுமே நாம் இருக்கும் இடத்திற்கு குனிந்து மண்ணிலிருந்து நம்மை தூக்குவார். பரிசுத்த தேவன், உன்னதமான இந்த பிரபஞ்சத்தின் தேவன், நமக்காக அவருடைய கைகளை அழுக்கு படுத்துவதைப்பற்றி கவலைப் படுவதில்லை.  ஆதி 2:7 – மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார், மற்ற அனைத்தையும் உண்டாகட்டும் என்று கட்டளை மாத்திரம் கொடுத்தார். அவ்வளவாய் அவர் நம்மை அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் தவறு செய்தாலோ,  கஷ்டத்திலிருந்தாலோ, உடனே நாம் நியாயாதிபதியின் உடையை போட்டுக்கொண்டுதான் நாம் அவர்களைப்  பார்க்கிறோம். நாம் அலசி ஆராய்ந்து உடனே கற்பனைக்கேற்ற ஒரு ரிப்போர்டை நாம் தயாரித்துக்கொள்கிறோம்.  இயேசு கிறிஸ்துவின் இதயம், அவரின் கண்கள், அவரின் கைகளாக நாம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஒருவன் கர்த்தருடைய கரத்திலிருந்தால் அவனுடைய எதிர்காலம் இப்படி யிருக்கும் என்று நம்மால் யோசிக்க வேண்டும்.

அவருடைய அன்பை நம்மில் அனுபவித்தால், அவர்கள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளப்பட்டால், மற்றவற்றை இயேசு செய்வார்.   தேவன் செய்ததுபோல, நம்முடைய கைகளை மண்ணில் வைத்து அழுக்குபடிய செய்யாவிட்டால் நம்மை காயப்படுத்தும், இழந்துபோன மற்றும் மரித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே,  இந்த உலகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு உம்மைபோல மனமும், இருதயமும், கைகளும் எங்களுக்கு தரவேண்டும் என்று ஜெபிக்கிறோம், இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஆமேன்..

Sol. Lalitha Menon

தானியேல் –II –  தேவ செய்தி

நாள்: 2,ஜூலை 2022.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசா 53:5

அன்பான, இரக்கம் நிறைந்த தேவன் ஒருவர் நமக்கு உண்டு. நாம் அவரை கேட்பதற்கு முன் நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீது நம்பிக்கை வைத்து, நம்முடைய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், நீதி 3:5,6.

உலகத்தின் சிந்தைகள் சில வேளைகளில் கர்த்தரிடம் நமக்கு இருக்கும் உறவை துண்டிக்கிறது.  அதனால் நாம் சுயத்தின் மீது சாய்ந்திருக்கிறோம், மேலும் உலக பிரகாரமான பொருட்கள் நம் வாழ்வை கட்டுப்படுத்த துவங்குகின்றன. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதி 10:22.

ஒரு நாள் திடீரென மிகவும் மோசமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டேன். அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது ஆனால் பலன் ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுவதும் நான் அலர்ஜிக்கான மருந்துகளை எடுக்க வேண்டி வரும் என எனது மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் புதிய மருந்துகளை, ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறித்தினர். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எந்து தாயாரும் சகோதரியும் நம்பிக்கை இழக்கவில்லை. விடாமல் தொடர்ந்து எனக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பலனாக ஒரு நாள் நான் அதிசயமான முறையில் சுகமானேன், தினமும் மருந்து எடுக்க தேவை ஏற்பட வில்லை. அந்த வியாதி மீண்டும் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றும் ஆனால் ஓரிரு நாட்கள் மருந்து உட்கொண்டால் போதும்.

ஆனாலும் இயேசு கிறிஸ்து என் வாழ்வில் நிகழ்த்திய இந்த அற்புதத்தை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அதன்பின் என்னுடைய சகோதரியின் உந்துதலால்  நான் WB நடத்தப்படும் காலை ஆராதனையில் பங்கு கொண்டேன். இது ஒரு புது அனுபவமாக இருந்தது, என்னை முற்றிலும் மாற்றிவிட்டது.

கர்த்தர் என்னை சுகமாக்கிவிட்டார் ஆனால் நான் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் காத்திருந்தார். அதை நான் ஏற்றுக்கொண்டு முழுமையாக சுகமாக அவரை கேட்க வேண்ட்டும் என அவர் விரும்பினார்.

என்னுடைய முழுமையான விசுவாசம் மற்றும்  கர்த்தருக்கு என்னை ஒப்புகொடுத்தன் மூலம் நான் சுகமானேன். இயேசு கிறிஸ்து மீண்டும் என் வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தினார், என்னை முழுவதும் சுகமாக்கினார். திடீரென தோன்றும் அலர்ஜிகான அறிகுறிகள் முற்றிலும் நின்றுவிட்டது. இது முழுவதுமாக என்னை தாழ்த்திய ஒரு அனுபவமாக இருந்தாலும் தேவனால் நான் உயர்த்தப்பட்டேன். இன்றைய அறிவியலின் வரம்புகளை அது எனக்கு உணர்த்தியதால் நான் தாழ்த்தப்பட்டேன், என் நம்பிக்கை உயர்ந்தது.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசா 41:10.

அவர் நம்மிடம் கேட்ப்பது ஒன்று மட்டும்தான் அது அவர் மீது நாம் வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கை மற்றும் நம்மை அவரிடம் ஒப்புகொடுப்பதுதான்.

ஜெபம்

தேவனே, உம்முடைய சித்தத்திற்கு முழுமையாக எங்களை ஒப்புகொடுக்கவும் எங்களுடைய வாழ்க்கையை முழுவதும் உம்மிடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் எங்களை திடப்படுத்தும், மற்றும் உதவி செய்யும்.  ஆமேன்.

SOL.RUMNA GOMES, AOJ