நாள் 21-06-2022
உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன?.
ஆதி 40:7

யோசேப்பு சிறையில் இருந்தான். பானபாத்திரகாரனும், சுயம்பாகியுமாகிய இரண்டுபேரும் தண்டனை பெற்று சிறைக்கு வந்தார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து ஏன் துக்கமாய் இருக்கிறீர்கள் என்று கேட்டான். யோசேப்புதான் பொய் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆனாலும் அவன் மற்றவர்களை உற்சாகப்படுத்தினான். நமக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் நம்மைவிட அதிகமான துன்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டும்.
நமக்காக கர்த்தருடைய திட்டம் பல வேளைகளில், நாம்மைப் பற்றி சிந்திக்காமலும், சுயபச்சாதாபத்திலிருந்து நம்மை வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த இரண்டு மனிதர்களும் துக்கமாய் இருப்பதை கண்டான், மேலும் இருவரும் சொப்பணத்தை கண்டார்கள் என்பதையும் அறிந்தான். சொப்பணத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குறியதல்லவா? எனக்கு சொல்லுங்கள் , நான் அதற்காக ஜெபிப்பேன்.
யோசேப்பு அந்த இரண்டு சொப்பணங்களுக்குமான அர்த்தத்தை அறிந்தான். மூன்று கிளைகள் மற்றும் மூன்று நாட்களுக்குமான அர்த்தத்தை கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு சொன்னார்.
யோசேப்புவை தேவன் இன்னும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். தேவன் அவனை தயார் செய்து கொண்டிருந்ததின் முக்கியமான பாகம் என்னவென்றால், சுய பச்சாதபம், சுய நீதி, மேலும் எதிர்காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளுதல் போன்றவற்றிலிருந்து அவனை மீட்பதாகும். தேவன் சொப்பனத்தை பானபாத்திரகாரனும், சுயம்பாகியுமாகிய இரண்டுபேருக்கும் கொடுத்தார். அவனுடைய சொப்பனத்தை யோசேப்பு சரியாக சொன்னார். “நீ மீண்டும் உன்னுடைய பழைய இடத்தை பெறுவாய்.’ ஆனால் நீ நன்றாக இருக்கும்போது என்னை நினைத்துப்பார், என் மீதும் இரக்கம் காட்டும். என்னைப் பற்றி பாரவோனுக்குச் சொல். என்னை இந்த இடத்திலிருந்து வெளியே கொண்டுவா. ஆதி 40:15 – நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்..
பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பு சொன்னது போலவே தன்னுடைய பழைய பதவியை பெற்றான், ஆனால் அவன் யோசேப்புவைப் பற்றி மறந்தும் போனான். இன்னும் இரண்டு வருடங்கள் யோசேப்பு சிறையில் இருந்தான்.
யொசேப்புவை தயார் செய்ததுபோல கர்த்தர் நம்மையும் தயார் செய்கிறார். அவர் சொல்லுகின்ற இடத்திற்கு நாம் வர வேண்டுமெ என்று பார்க்கிறார்.
என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்,
1 கொரி 4:4-5
யோசேப்பை குறித்து தேவன் வைத்திர்ந்த வேலைக்கு அவன் முற்றிலும் யாதொரு எதிர்ப்பு செய்கிறவனாக இல்லாமலும், சுய பச்சாதாபம் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் மேலும் இரண்டு ஆண்டுகள் அவன் சிறையிருப்பில் இருந்தான். இரண்டு ஆண்டின் முடிவிலே பாரவோன் மன்னனுக்கு சொப்பனம் வந்தது. அது தான் கர்த்தருடைய நேரத்தில் யோசேப்ப்புக்கு தேவன் வைத்திருந்த மாறுதலுக்கான நேரம்.
ஜெபம்
பிதாவே எல்லாவற்றிலும் எங்களுடைய புத்தி அல்லது திறமையை அல்ல மாறாக உம்மை சார்ந்திருக்க கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே.
ஆமேன்.
Sol.Gerard
