தானியேல் – II

நாள்:11-05-2022 – தேவ செய்தி

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

த் 7:7

இந்த வசனம் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. ஆன்மீக ஆசீர்வாதங்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரிடம் கேட்க வேண்டும். ஒரு முதலாளியிடம் கேட்பதை போல அல்ல ஒரு தகப்பனிடம் குழந்தை கேட்பதை போல கேட்க வேண்டும்.

இந்த உலகில் இருக்கும் நம்முடைய தகப்பன் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. ஆனால் நம்முடைய தேவன் நாம் நினைப்பதற்கு வேண்டுவதற்கும், அதிகமாய் செய்ய வல்லவராய் இருக்கின்றர். தைரியமாகவும், விசுவாசத்தோடும், நன்றியோடும், சிறிதும் சந்தேகம் இல்லாமல் நாம் அவரை கேட்க வேண்டும்.

நம்முடைய தேவைக்காக கேட்க வேண்டும், அவருடைய விவேகத்தை நாட வேண்டும், சந்தர்ப்பங்களை தேட வேண்டும். நன்றியோடு, அவருடைய வார்த்தையின் படி, அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு அவரை நாம் கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தினால் நாம் கேட்க வேண்டும். நாம் அவருடைய மகிமைக்காக உழைக்கும் போது பிதா நம்மில் மகிழ்ச்சி அடைகிறார்.

நாம் விடாமுயற்சியுடன் கேட்க வேண்டும் தட்ட வேண்டும். தம்மை நேசிப்பவர்களுக்கு பரிபூரணமான மற்றும் நல்லதைக் கொடுக்க தேவன் தயாராக இருக்கிறார். கண்கள் காணாததையும், காதுகள் கேட்காததையும் நம் எண்ணங்களில் தோன்றாததையும் அவர் நமக்கு கொடுக்க வல்லவராய் இருக்கிறார்.

ழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

1கொரி 2:9

நாம் கேட்காததினால் நம்மிடம் இல்லை. அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவும் ஆன தேவன் அனைத்தையும் அறிந்தவர். நமக்கு என்ன தேவை என அவருக்கு தெரியும். நாம் அவரிடம் கேட்க வேண்டும்.

மத் 7:11

 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

யாகோ 4:2-3.

சாட்சி

ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு காலை ஆராதனையில் நான் முதன்முதலாக பங்கேற்றேன். ஒவ்வொரு நாளும் இந்த காலை ஆராதனையில் பங்கேற்க ஆவலாய் இருக்கிறேன். மற்ற சகோதர சகோதரிகளுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அருமையான காலை ஆராதனை, ஆராதனை பாடல்கள், விண்ணப்ப ஜெபம் மற்றும் தேவ செய்தி என அனைத்துமே என்னுடைய மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, தைரியமாக கேட்கவும், தேடவும் கதவை தட்டவும், விசுவாசத்தோடும் நன்றிநிறை உள்ளத்தோடும் சந்தேகம் இல்லாமல் எங்களுடைய தேவைகளுக்காக உம்மிடம் கேட்டு பெற்றுக்கொள்ள எங்களுக்கு கிருபை தாரும்.

ஆமேன்.

Sol.Anju

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *