இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
ஏசா 12:2.

கர்த்தரே நம்முடைய இரட்சிப்பு என்கிறார், ஏசாயா தீர்க்கதரிசி. இரட்சிப்பு என்பது கர்த்தர் என்கிறார் ஏசாயா. தன்னுடைய வாழ்வில் அநேக இன்னல்களை அவர் மேற்கொண்டார் ஆனால் அவர் திட மனதுடன் இருந்தார்.
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
சங் 18:2.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஏசாய 40:31.
ஏசாயா 40:21 ல் சொன்னபடி – நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
புயல் காற்றும், தீவிரமான மழை வந்தாலும் கழுகு இதைப் போன்ற தடைகளை தோற்கடிக்கும். ஒருவன் தன்னை யகோவா தேவனில் தன்னை நிலை நிறுத்திக்கொள்பவர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்துவார். யோபு தன்னுடைய வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தபோது அவனது மனைவி கர்த்தரை நிராகரிக்கும்படி அவனிடம் கேட்கிறாள். அதற்கு பதிலாக, அவள் ஒரு முட்டாள், ஒரு முட்டாளைப் போல பதில் அளிக்கிறாள் என்று யோபு கூறினார்.
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;
யோபு 13:15.
வாழ்வில் என்ன இன்னல்கள் நேர்ந்தாலும், நான் அவரை நிராகரிக்க மாட்டேன் என்று அவர் சொன்னார். கர்த்தருடைய இரட்சிப்பிற்காக நான் காத்திருப்பேன் என்று யோபு சொன்னார்.
கர்த்தர் இஸ்ரவேலர்களை செங்கடலை கடக்கச் செய்தபோது மோசேவும், மிரியாமும் கர்த்தரை புகழ்ந்து பாடியது
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன்,
(யாத் 15:2);

சிவந்த சமுத்திரம் அவர்களுக்கு முன்பக இருந்தது அதே வேளையில் எகிப்தின் சேனை அவர்களுக்கு பின்னால் இருந்தது. கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினார். ஒரு சூராவளி காற்றை கர்த்தர் உருவாக்கினார், அதன் மூலம் கடல் நீர் பின் வாங்கியது, இஸ்ரவேலர்கள் நடப்பதற்கு காய்ந்த தரை உண்டானது. இந்த காய்ந்த வழியே அவர்கள் இஸ்ரவேலர்கள் கடந்து சென்றனர். அவர்கள் பிந்தொடர்ந்து வந்த எகிப்தியரின் சேனை மூழ்கடிக்கப்பட்டது, அதில் இருந்த அனைவரும் கடலால் விழுங்கப்பட்டனர். கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை பாதுகாத்தார்.
யாத் 14:20-30.
சாட்சி
எனக்கு பிரியமானவர் கர்த்தரோடு இருக்க நவம்பர் 8 ஆம் தேதி 2018. என்னுடைய இரண்டு மகன்களும் வேலையின் நிமித்தம் வெகுதொலைவில் வாழ்ந்து வந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டபின் எங்களுடைய குடும்பங்களை விட்டு இங்குதான் குடிவந்தோம். எங்களுடைய ஓய்வுக்குப் பிறகு கர்த்தரை முழுநேரம் சேவிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய பாரம்பரிய குடும்பத்தில் எங்களை வெட்கப்பட கர்த்தர் விடவில்லை. ஏசா 12:2, சங் 18:2.
2019 ஆம் ஆண்டு நான் இயேசுவின் படை அணியில் சேர்ந்தேன், இது என் குடும்பத்திற்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. இது என் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும் இருந்தது. என்னுடைய குழுவில் பல காரியங்களை குறித்து பேசவும் புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும் இது எனக்கு உதவியது.
ஜெபம்
அப்பா பிதாவே, வாழ்வில் நீர் எனக்கு கொடுத்த அமைதி, துயரத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக இருப்பதாக, ஆமேன்.
Sol.Shylaja Satheesan
