தானியேல் – II

நாள்: 08-04-2022 – தேவ செய்தி

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

-எபி 1:3

“சர்வத்தையும் தம்முடைய வல்லமியுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்” – என்ற வசனத்தின் மீது  நம்முடைய கவனத்தை திருப்புவோம்.

கர்த்தருடைய முழுமையான பிரதிபலிப்பான இயேசு   தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலம் இந்த உலகை தாங்குகிறார். அவருடைய வார்த்தைகள் உலகத்தையே தாங்ககூடிய வல்லமையுள்ளதாய் இருக்குமேயானால் இவ்வுலகில் எதைப்பற்றியும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இந்த பெரிய அற்புதமான தேவன், நம்மை பாவம் மற்றும் அதன் தண்டனையிலிருந்து விடுவிக்க, நமக்காக பலியாக இந்த பூமியில் இறங்கி வந்தார். அவருடைய ஒரு வார்த்தையின் மூலம் இந்த உலகம் உருவாக்கப்பட்டது. ஆதி 1-2:1.

மத் 28:18 – அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்கு 16:17-18 – அவருடைய நாமத்தில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப் படுகிறது. நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது  அவரிடமிருந்த அதே வல்லமையும் அதிகாரமும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த வல்லமையை பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு கொடுக்கிறார்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவா 1:14

கர்த்தருடைய வார்த்தை உண்மையில் இயேசுதான். எனவேதான் நாம் கட்டிட சபைக்கு செல்லும்போதோ, சில பாடல் பாடும்போது, மற்றும் சில காரியங்களை செய்யும் போது எதிரியாகிய சாத்தான் நடுங்குவது இல்லை.  வார்த்தையின் ஆழத்திற்கு போகும்போதுதான் அவன் பயப்படுகிறான். தேவ வார்த்தையில் வல்லமை உண்டு என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான்.  (1கொரி 1:18). எதிரிக்கு தெரியும்  சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவா 8:32.

அவருடைய வார்த்தை உங்களை பாவத்திலிருந்து விடுதலையாக்கும், முற்றிலும் உங்களை மாற்றும், உங்கள் வாழ்வை மாற்றிபோடும்.  சம்மட்டியைபோலவும், நெருப்பைப் போலவும் பாறைகளை உடைத்து நொருக்கும்.  உங்கள் பாதையில் வரும் ஒவ்வொரு தடைகளையும் அது நொருக்கிபோடும். பேசப்பட்ட அந்த வார்த்தைதான் மரித்த லாசருவை உயிரொடு எழுப்பியது. அது வெறுமனே திரும்பாது. (ஏசா 55:10-11).  வார்த்தை சுகமாக்கும், விடுதலையாக்கும், அசுத்த ஆவிகளை எடுத்துபோடும்.  அதனால்தான் நூற்றுவ தலைவன் சொன்னான், ஒரு வார்த்தை சொல்லும் என்னுடைய சேவகன் குணமாவான் என்று. (மத் 8:8).

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

மத் 22:29.

எனவே, கர்த்தருடைய வார்த்தையால் இந்த பிரபஞ்சத்தை நிலைநிறுத்த முடிந்தால், இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள், அல்லேலூயா!

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, எங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் உம்முடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசுவுக்கு நன்றி.  எங்கள் வாழ்விலன் அந்தகார வல்லமையையும்,  எங்கள் வாழ்வை அழிக்க நினைக்கும் எதிரியின் ஒவ்வொரு திட்டங்களையும் நொருக்கிபோடும்  அக்கினையைப் போலும், கன்மலையை நொருக்கும் சம்மட்டியைப் போல் இருக்கும் உமது வார்த்தைக்காக நன்றி. இதை படிக்கும் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வார்த்தையில் வளர்வார்களாக, வல்லமையில் நடப்பார்களாக, அவர்களுடைய வாழ்வில் மகிமையின் மேல் மகிமை அடைவார்கள்ளாக, இயேசுவின் இணையற்ற நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.

Sol.Lalitha Menon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *