நாள்:09-04-2022 – தேவ செய்தி
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.
-லூக் 21:4.
நீ கொடுக்கும்போது நீ என்ன கொடுக்கிறாய் என்பதை அல்ல, உங்கள் இதயத்தைப் பார்கிறார்.
கர்த்தருடைய பொருளாதாரம் என்பது நீங்கள் கொடுக்கும் தொகையை அல்ல, ஆனால் அதற்காக நீங்கள் செய்யும் தியாகத்தைத்தான்.
ஆலயத்தின் வளாகத்தில் ஒரு பெரிய பெட்டியில் மக்கள் எல்லாரும் பார்கும்படி தங்கள் பணத்தை போட்டனர். திறந்த இடத்தில் இந்த பெட்டி இருந்ததால் மக்கள் அனைவரும் யார் எவ்வளவு பணம் போடுகிறார்கள் என்று பார்க்க முடிந்தது. அதிகமாக பணம் போடுகிறவர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈசியாக ஈர்ப்பார்கள்.
செல்வந்தர்கள் தாராளமாக காணிக்கை கொடுப்பதையும், சந்தையில் மதிப்பே இல்லாத பணத்தைப் போட்ட ஏழை விதவையும் இயேசு பார்த்தார்.
-மாற்கு 12:41-42.
மக்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை அல்ல, எப்படிகொடுத்தார்கள் என்பதைத்தான் பார்த்தர். அந்த விதவை எல்லாரையும் விட அதிகமாக போட்டாள் என்று அவர் கருதினார், ஏனென்றால் காணிக்கையாக கொடுக்கப்பட்ட பணத்தை வணிக மதிப்பால் அவர் அளக்க வில்லை, ஆனால் கொடுப்பவரின் தியாகத்தை கொண்டே அளந்தார்.
அவருடைய ராஜ்யத்தில் பணம் அல்ல, உண்மையான நம்பிக்கை கொண்டுள்ள இருதயமே அதிக மதிப்புடையது.
– மாற் 12:43-44.

கர்த்தருடைய பொருளாதாரத்தில் குறைவாக கொடுக்கும் அநேகர் அதிகமாக கொடுக்கின்றனர். எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன தியாகம் செய்கிறோம்? அதை கொடுக்க உனக்கு என்ன இழப்பு?
வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு களத்தை வாங்க அர்வானிடத்திற்கு சென்றான். அர்வானா, தாவிதுக்கு அதை இலவசமாக கொடுக்க முயன்றான் ஆனால் தாவீது, “நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல் அதை உன் கையிலே விலைகிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி அந்தக் களத்தையும், மாடுகளையும் ஐம்பது சேக்கேல் நிறை வெள்ளிக்கு கொண்டான்.” இலவசமான எதையும் நான் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்க மாட்டேன். கர்த்தருக்கு நீங்கள் கொடுப்பதற்கு என்ன செல்வாகிறது. இதைத்தான் கொண்டுதான் கர்த்தர் நம்முடைய காணிக்கையை மதிப்பிடுவார்.
கொடுப்பவரில் நம்பிக்கை வைப்பது
யாக்கோபின் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம், எல்லா நன்மைகளையும் நமக்கு கொடுப்பவர் கர்த்தரே.
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
–யாக் 1:17.
எனவே, விசுவாசத்தோடு நாம் பலியாக கொடுத்ததெல்லாம் கர்த்தரால் இரட்டிப்பாக மீட்கப்படும்.
ஜெபம்
அன்பின் தேவனே, நீர் கொடுப்பவர் என்பதை அறிந்து கிறிஸ்துவில் உள்ள சக வீரர்களின் தேவையை உணர்ந்து செயல்பட எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் விசுவாசத்தில் விதைக்கும் அனைத்தையும் பலமடங்கு திரும்பப் பெற்றிட உதவி செய்யும்.ஆமேன்
Sol. Raymond Amanna
