தானியேல் – II

நாள் :07-04-2022 – தேவ செய்தி

வழக்கத்தால் சலிப்பு? தாமதங்களால் விரக்தியா? நம்பிக்கை இழந்து விட்டீர்களா?

கொள்கை:

இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் அவருடைய இலக்கும், நம்முடைய வாழ்வு மற்றும் இலக்கு என்ற புரிதலில் நாம் வளர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் .

-2கொரி 4:18

அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்.

-அப்போ 5:41

பவுலின் துன்பங்கள் அவர் அப்போஸ்தலராய் இருப்பதை திடப்படுத்தியது. 2கொரி 11:24-27 – “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.”

அநேக வருடங்களாக அவர்பட்ட எல்லா கஷ்டங்களும், துன்பங்களும் இந்த நான்கு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் கூட தான் சொல்லபோகும் செய்தி அநேகரால் புறக்கணிக்கப்படுமே அல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிந்தும் பவுல் தன்னுடைய தேவ அழைத்தலில் விட முயற்சியுடன், உழைப்பிலும், கஷ்டத்திலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் ஊர் ஊராய் சென்று நற்செய்தியை போதித்தார்.  தனக்கு சிறப்பாக எதையும் எதிர்பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அவர் போதித்தார். ஆனால் அவர் ஆண்டுதோறும், மைலுக்கு மைல், கிராமத்திற்கு கிராமம், அடிக்குபின் அடி வாங்கியப்பின்னும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்தார். ஆம், வெற்றி வழிகளில் கிடைத்தது; சிலுவையின் வல்லமையை நாம் நிராகரிக்க முடியாது. அதேவேளையில் அதன் வலி, வேதனையையும் நிராகரிக்க முடியாது.

20 ஆம் நூற்றாண்டின் பெரிய வியாதிகளில் ஒன்று பொருமையின்மை. நாம் எதை செய்தாலும் அதில் உடனடி வெற்றியை எதிர்பார்கிறோம். நம்முடைய முயற்சி வெற்றி அடையவில்லையெனில் உடனே வேறு ஒன்றிற்கு மாறிவிடுகிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறைகள் நம்மை உற்சாகம் இழக்க வைக்கலாம், தாமதங்கள் நம்மை விரக்தி அடையச்செய்யலாம்.

பவுல் தெசலோனிக்கேயருக்கான நிரூபத்தில் சொல்லுகிறார்,

சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.

-1தெச 2:9.

ஆயினும் கூட பவுல் தனது அழைப்பில் விடாமுயற்சியுடன் இருந்தார், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்றார் (சில சமயங்களில் விருப்பமின்றி) என்ன நடந்தாலும், யார் கைவிட்டாலும் நற்செய்தி அறிவிப்பதை அவர் கைவிடவே இல்லை.

நம்முடைய தேவ அழைத்தலுக்கு பவுலுடைய அப்போஸ்தலத்துவத்தை நேரடியான மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பவுல் ஒவ்வொரு மலையாக கடந்துசெல்வது, உறுதியுடன் கஷ்டமான பாதைகளில் பயணிப்பது,  தன்னுடைய ஓட்டம் முடியும்வரை என்ன நடந்தாலும் ஊர் ஊராய் சென்று நற்செய்தியை அறிவிப்பது என இவைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் ஊக்கத்தை பெறலாம்.

சிந்தனை:

தாங்கள் சந்தித்த உலகபிரகாரமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பரலோகத்திற்கான கண்ணோட்டத்தை வளர்ப்பதன் ரகசியத்தை பவுல், பேதுரு மேலும் மற்ற சீடர்கள் கற்றுக்கொண்டனர். கிறிஸ்துவுக்குள் தாங்கள் யார், எங்கு செல்கிறோம் என்பதை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டதால், துன்புறுத்தப் பட்டாலும், அடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் அந்த சூழ்நிலைக்கு மேல் வாழ முடிந்தது மேலும் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்தது. அதனால்தான் தான் ஜெயிலில் இருந்த போது கூட பவுலால் இப்படி எழுத முடிந்தது, நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்கே, மரித்தாலும் இயேசுவுக்கே.

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

-2 கொரி 4:18.

Sol. Gerard Fernandes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *