நாள் 06-04-2022 – தேவ செய்தி
வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .
யோவா 1:1

வேததின் மூலம் நாம் தெரிந்துகொள்வது, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, இங்கு “ வார்த்தை” என்பது இயேசுவை குறிக்கிறது. இந்த வார்த்தைதான் கர்த்தருடைய செய்தியை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியது.
மூன்று குணங்களை, தேவனுடைய வார்த்தையாகிய இயேசுவுக்கு யோவான் பயன்படுத்துகிறார்.
- பிதாவோடு வார்த்தையின் உறவு
அ). ஆதியிலிருந்து இயேசு சர்வவல்லமையுள்ள தேவனோடு இருந்தார், “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
–கொலோ 1:15.
ஆ) இயேசு (வார்த்தை தேவனோடு இருந்தது, அவருடைய இயற்க்கை மற்றும் குணம் (வல்லமை) பிதாவைப்போல் இருந்தது. பரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது,
அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
–மாற்கு 1:11.
2.உலகத்தோடு வார்த்தையின் உறவு:
கர்த்தர் உலகை இயேசு கிறிஸ்துவின் மூலம் உருவாக்கினார் மேலும் அதை காத்தும் வருகிறார். “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:16)
3.மானித இனம் மற்றும் வார்த்தையின் உறவு:
வார்த்தை மனிதனானார், ஆவியில் தேவன் மனிதனானார், மனித இயல்பு பாவமே செய்யாமல் பாவத்தை மேற்கொண்டது. “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;
அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.”
மத் 1:23.
வார்த்தை இன்றும் தேவனோடு இருக்கிறார் மேலும் அவரோடே எப்பொழுதும் இருப்பார் ஏனென்றால் வார்த்தையின் மூலமாகத்தான் நமக்கு வாழ்வு கிடைத்தது, என்பது மேற்கண்ட வசனங்கள் தெளிவாக சொல்லுகின்றன, பரலோக ஆசிர்வாதங்களுக்காக கர்த்தரிடம் கேட்போம் அவர் நம்மை அந்தகாரத்திலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்.

ஜெபம்
கிழக்கு உத்திரபிரதேசத்திற்கான பாரத்தை கர்த்தாவே நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிறீர், உம்மைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல நீர் எங்களோடு இருப்பீராக. பரலோக வல்லமை மற்றும் சக்தியினால் எங்களை நிறப்பும். ஆமேன்.
Sol.Sudha AOJ
