நாள் – 28-03-2022 – தேவ செய்தி
ரோமி 4:17 - அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
அபிரகாம் பிள்ளை இல்லாதவன் ஆனால் பல தேசங்களுக்கு தகப்பன் எனப்பட்டான். தன்னுடைய அழைத்தலில் அபிரகாம் உறுதியாய் இருந்தான். அவன் யார் மீது அவனது விசுவாசம் இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். மரித்தோரை உயிர்பித்து இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் அவர். இதை நம்முடைய மனித அறிவினால் புரிந்துகொள்ள இயலாது.
ஆபிரகாம் செய்த முதல் வேலை விசுவசித்தது, சூழ்நிலை அவனுக்கு எதிராகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும்போதும் விசுவசிப்பது மிக கடினமானதாகும்.
ஆதி 17:5 – இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
இல்லாத ஒன்றை கர்த்தர் அழைத்தார்.தேசங்களுக்கு தகப்பன் நான் என்று ஆபிரகாம் தன்னைப் பற்றி சொல்லும் போது மக்கள் ஏளனம் செய்திருப்பார்கள். இது முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் கர்த்தர் எப்போதும் இப்படித்தான் செயல்படுவார். அவர் பார்க்கிறார், பேசுகிறார் அது நடக்கிறது. அபிரகாமுக்கு இது தெரியும். பூமி உருவம் இல்லாமல், வெற்றிடமாக இருந்தபோது கர்த்தர் வானத்தையும் பூமியையும் அதிலிருந்து உருவாக்கினார்.
ஆதி 1:3 – தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
கர்த்தருடைய உருவாக்கும் திறமை வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது.
நீதி 18:21 – மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
ரோம 4:18 – உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
நாங்கள் ஷெக்கீனா வகுப்புகளில் கல்ந்துகொண்டிருக்கும்போது ஒரு பாஸ்டர் எனது இளைய மகனை கனடா தேசத்திற்கு அனுப்புவதற்கான வழிகளை துவங்க வேண்டும் எனவும், கர்த்தர் அவனை அங்கு பயன்படுத்துவார் எனவும் அவர் சொன்னார். அப்பொழுது எனக்கு வேலை இல்லை. இப்படி செய்வது தண்ணீர்மீது நடப்பது போன்றதாய் இருந்தது, ஜெபத்தோடு நாங்கள் முதல் படியை எடுத்து வைத்தோம். அநேக சவால்களை சந்திக்க நேர்ந்தது ஆனாலும் கர்த்தருடைய கிருபையை நாங்கள் பார்த்தோம். மாணவர் விசாவிற்கு தாக்கல் செய்வதற்கு கட்டாயமாக GIC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் செலுத்த நேர்ந்தது. வங்கி கடைசி நிமிடத்தில் அனுப்பியது. கனேடியன் வங்கி GIC சான்றிதழை வழங்க 5 நாட்கள் ஆகும் ஆனால் அதே நாளில் கல்லூரியிலிருந்து 3 நாட்களுக்குள் வீசா தாக்கல் செய்யப்பட வில்லையென்றால் அசோக் வுடைய சீட்டு பரிபோகும் என்றனர். இது நிச்சயமாக சாத்தியமே இல்லை. மாணவர் ஆலோசகர் எங்கள் அட்மிஷனை ஒத்திவைக்கும்படி கேட்டார், இல்லாதவைகளை இருக்கிறதுபோல அழைக்கிறவர் நம் தேவன் என பரிசுத்த ஆவியானவர் என் காதில் சொன்னார். கனேடியன் வங்கி அதிகாரியை அழைத்து பிரச்சனையைப் பற்றி சொன்ன போது இது முடியாது என்று எங்களுக்கு சொன்னார். நான் ரோம 4:17 பிரகடணம் செய்தேன். கர்த்தருடைய கிருபையால் கனேடியன் அதிகாரிகளின் கண்களில் எங்களுக்கு தயவு கிடைத்தது. வங்கி GIC சான்றிதழை 10/03/2022 மாலை 3மணி ஆவியானவர் உறுதி அளித்ததுபோல அனுப்பி வைத்தனர். வீசா தாக்கல் செய்யவும் எங்களுக்கு போதிய நேரம் கிடைத்தது. மாணவர் ஆலோசகர் இதை கேட்டு பிரமித்தார், இதுபோன்ற ஒரு அதிசயம் இதுவரை நடக்கவில்லை, வரலாறு படைத்துவிட்டீர்கள் என்று சொன்னார்.
அன்பின் பரலோக பிதாவே, இதை வாசிப்பவர்கள் அனைவரும் உம்முடைய வார்த்தையால் தொடப்படுவார்களாக, அற்புதங்கள் செய்யும் தேவன் நீர் ஒருவரே என்ற உண்மை அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் கலப்பதாக, அவர்களுடைய விசுவாசத்தை பெருகச்செய்யும் தேவனே, மக்கள் தங்களுடைய சூழ்நிலைகளையோ அல்லது உலகத்திலே பதிலை தேடாமல், உம்முடைய வார்த்தையையே பார்ப்பார்களாக. எல்லாவற்றிலும் நீரே போதுமானவராக இருப்பீராக. இதை எல்லாம் இணையில்லா எங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமேன். ,
Sol.Lalitha Menon
