நாள்: 27-03-2022 – தேவ செய்தி
எஸ்றா 5:1
-அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
பாபிலோனிலிருந்து கைதிகள் தங்களுடைய நாட்டிற்கு திரும்பியபோது, இஸ்ரவேலர்கள் சீரிய நாட்டின் ராஜாவினுடைய அனுமதி மற்றும் கட்டளைப் பெற்று கர்த்தருடைய தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தனர். ஆனால் எதிரிகள் இதை ராஜா தரியுவிடம் தெரிவிக்க, அவனோ ஒரு கட்டளையின் மூலம் தேவாலய பணியை நிறுத்திவிட்டான்.
எஸ்ரா 4:24 – அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.
மீண்டும் இந்த வேலை துவங்கிய விதம் மிகவும் ஸ்வராஸ்யமானது.
இரண்டு தீர்க்கதரிசிகள் ஆகாய் மற்று சகரியா இஸ்ரவேலின் தேவனின் நாமத்தில் யூதர்களுக்கு விசேஷமாக தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
தீர்க்கதரிசிகள் தீர்க்க தரிசனம் சொன்னப்பின் மக்கள் ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு உதவினர்.
எதிரிகள் ஆலய கட்டுமான பணியை நிறுத்த வந்தனர், ஆனாலும் தீர்க்கதரிசனம் வேலை செய்தது. தங்களுடைய ஞானத்தையும், விவேகத்தையும் பயன்படுத்தி எப்படி பதில் சொன்னார்கள் என்பது இந்த வசனத்தில் காணமுடிகிற்து.
அவர்கள் அரசருக்கு பதில் சொன்னார்கள், …..”அந்நாள் முதல் இது வரைக்கும் அதுகட்டப்பட்டு வருகிறது அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.”
ராஜா இதனை ஆராய்ந்தான், உண்மை என கண்டுபிடித்தான், வேலையை தொடர்ந்து செய்ய கட்டளையிட்டான்.
பழைய ஏற்பாட்டில் சில தீர்க்கதரிசிகளையே நாம் காண்கிறோம், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர்தான் இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
அப்போஸ் 2:17,18 – கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
சபையின் இன்றைய சூழ்நிலையின் மேல் நாம் தீர்க்கதரிசனம் உரைப்போமாக,
இயேசுகிறிஸ்துவின் உண்மையான சபை இந்த பூமியில் கட்டப்படுவதாக, நரகத்தின் சக்திகள் இதன்மேல் வெற்றிகொள்ளாமல் போவதாக,
விசுவாசிகள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருப்பார்களாக,
கர்த்தரை குறித்த பயம் விசுவாசிகள் மேல் வருவதாக, அவர்களால் அநேக அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் செய்யப்படுவதாக,
எல்லா விசுவாசிகளும் ஒற்றுமையாய் இருந்து அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்களாக,
தங்களுடைய சொத்துக்களை விற்று, தேவையில் இருக்க கூடியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதை விசுவாசிகள் வழக்கமாக கொள்வார்களாக.
விசுவாசிகள் ஒருமனப்பட்டு, ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் சென்று தங்கள் உணவை மகிழ்ச்சியுடனும், தாழ்மையான இருதயத்தோடும் பகிர்ந்து கொள்வார்களாக,
அவர்கள் கர்த்தரை துதித்து எல்லா மக்களின் நல்லெண்ணத்தையும் பெறுவார்களாக,
இரட்சிக்கப்படுபவர்களை கர்த்தர் நாள்தோறும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். (அப்போ 2:42-47)
அனைத்து விசுவாசிகளும் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாய் இருந்து, ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளின் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவிப்பார்களாக.
விசுவாசிகள் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க சாட்சிகளாய் தொடர்ந்து இருப்பார்களாக, கர்த்தருடைய பூரண கிருபை அவர்கள் மீது இருப்பதாக. அப் 4:32,33.
கர்த்தர் தன்னுடைய உண்மையான சபையை நம்முடைய தேசத்திலும், உலகம் முழுவதிலும் கட்டுவாராக. அணி சபை வீரர்களைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை கட்டப்படுவதாக.
Sr. Leema Rose AOJ
