தானியேல் – II

நாள்:24-03-2022 – தேவ செய்தி

அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு:. லூக் 21:8

வஞ்சிக்கப்படாதபடிக்கு(உண்மை அல்லாததில் நம்பிக்கை வைப்பது) எச்சரிக்கையாய் இருங்கள் என இயேசு சொன்னார்,

ஆதியாகமம் புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில் ஏவாளையும், ஆதாமையும் மிகவும் தந்திரமாக ஏமாற்றிய வஞ்சகனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது, அது சர்ப்பம் என்ன சொன்னாலும் அதை நம்ப வைத்தது.

மனிதனை நேசித்த தேவன், அவனுக்கு நன்மையுடன் நிறைவான வாழ்வைக் காண விரும்பினார்.

  1. நிறைய மரங்களை உருவாக்கினார் – நல்ல உணவிற்காக
  2. அவனுக்கு ஏற்ற ஒரு உதவியாளரை கொண்டுவந்தார்.

இதற்கிடையில் அவர்களை ஏமாற்றி கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக அவர்களை நடக்க வைத்தது, அதுவே அவர்களை கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து தங்களை மறைத்துக் கொள்ளவும் வழிவகுத்தது. இதற்கு பலனாக அவர்களுக்கு கிடைத்தது என்ன? வெட்கம், பயம், மரணம், ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டது.

இப்பொழுதும் கூட நேரம் சமீபமாய் இருக்கிறது, யாராலும் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் என்று நம் ஆண்டவராகிய இயேசு நம்மை எச்சரிக்கிறார்.

நம்மை ஏமாற்றும் சாத்தானையும், ஏமாற்ற அவன் பயன்படுத்தும் யுத்திகளையும் நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம்.

மனஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். நீதி 19:21

இன்றைய உலகில்  நம்மை ஏமாற்ற வருபவன் கர்த்தரின் சித்தம் மற்றும் திட்டங்களுக்கு எதிராக ஆனால் நம்முடைய கண்களுக்கு பிரியமாகவும், நம்மை ஞானியாக மாற்ற வல்லமையுள்ளதைப் போல தோன்றும் அநேக எண்ணங்கள் மற்றும் யுத்திகளுடன், வருவான்.

மோசே தேர்ந்தெடுத்தார்,

எபி 11:25 - அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
நீதி 31:30 - சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
  1. பாவத்தின் இன்பங்கள் விரைவானது
  2. வசீகரம் மற்றும் அழகு – வஞ்சகம் மற்றும் வீண்

பர்ப்பதற்கு அழகாக தோன்றும் மேலும் அவைகள் ஞானமுள்ள திட்டங்கள் என்றுகூட தோன்றலாம் ஆனால் கர்த்தருடைய திட்டங்களே ஞானமுள்ளவை, நிலைத்து நிற்கும், எனவே அவருக்கு பயந்து, அவருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து நடப்பதே நித்திய வாழ்வை கொண்டுவரும், நாம் சாத்தானின் சொல்லை கேட்டால் நித்திய ஜீவனிலிருந்து துரத்தப்படுவோம் மேலும் கர்த்தரோடு வாழும் ஒரு அழகான வாழ்வை நாம் இழந்துவிடுவோம்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய திட்டங்கள் மேன்மையானவை, எங்களுடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை. வஞ்சகனை தோற்கடிக்க எங்களுக்கு உமது கிருபையின் மூலம் உதவும். உம்மோடு உறவில் என்றும் இருக்க எங்களுக்கு உதவி செய்யும், ஆமேன்.

             Sol. Pinta Eunice, AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *