அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்
(லூக் 19:4).
இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு சகேயு மிகவும் ஆசைப்பட்டான். “தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள்” என்று இயேசு சொன்னார். ஆவலுடன், ஏக்கத்துடன், மன்றாடுதல், விசுவாசம், மரக்கிளையிலிருந்து கீழே இயேசு கிறிஸ்துவின் பார்வையை சந்தித்தல் போன்வற்றை நாம் காட்சிப்படுத்தி பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்து தாமாகவே சகேயுவின் வீட்டிற்கு செல்கிறார் அங்கு அவனுடைய இதயத்தை திறந்து இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறான். கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கு எவனுக்கு சித்தம் இருக்கிறதோ, அவன் கிறிஸ்துவை அறிவான்.
யாரை இயேசு அழைக்கிறாரோ அவர்கள் தங்களை தாழ்த்தி அவரிடம் வர வேண்டும். சகேயு எல்லாருக்கும் முன்பாக தன்னை தாழ்த்தி காட்டினார். உண்மையில் அவர் மனம் மாறினார் மேலும் இயேசுவை ஏற்றுக்கொண்டார். ஒரு பரிசேயனாக தன்னுடைய வேலையின் நிமித்தம் நீதிமானாக்கப்படுவோம் என்று அவன் எதிர்பார்க்க வில்லை. ஆனால் வேலையும் நம்பிக்கையுமே அவனை நீதிமானாக்கியது. இது உண்மையான விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும் காட்டுகிறது. இப்பொழுது அவன் சந்தோஷமாக இருக்கிறான் மேலும் பாவத்தை விட்டு விலகி கர்த்தர் பக்கம் திரும்பினான். இரட்சிப்போடு கிறிஸ்து அவனுடைய வீட்டிற்குச் சென்றார், நாம் இயேசுவை அனுபவிக்க உண்மையான முழுமையான முயற்சி எடுக்கும்போது அதற்கு தக்க பரிசு அவர் கொடுக்கிறார் என்பதை சகேயுவின் இந்த கதைமூலம் அறிகிறோம். சுவிசேஷமான நற்செய்திக்காக சகேயு ஆர்வமாக இருந்ததால் அவனுடைய வாழ்வில் இந்த மாற்றம் ஏற்ப்பட்டது. தன்னுடைய மனந்திரும்புதலின் மூலம் அவன் ஒரு புதியா வாழ்விற்கு தயாராகி இருந்தான். நம்முடைய வாழ்வின் அநேக காரியங்கள் நம்மை பின்னோக்கி இழுக்கின்றன உதாரணமாக நம்முடைய அணுகுமுறை, பெருமை, கோபம், மனச்சோர்வு, பொறாமை, கவலைகள் மற்றும் பல. இவைகள் நாம் கர்த்தரிடம் செல்வதை தடை செய்கிறது. ஆனால் லூக் 19:4 சொல்லுகிறது, அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, இயேசுவை பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
நாம் குறையற்றவர்கள் அல்ல என்பது நமக்குத்தெரியும். ஆனால்,
நாம் இயேசுவிடம் நெருங்கி வரும்போது அவரும் நமக்கு நெருக்கமாக வருகிறார்.
சகேயுவின் வாழ்வைப்போலவே என்னுடைய வாழ்வும் உலகபிரகாரமான காரியங்களில் சிக்கி தவித்தது. சிறையிருப்பிலிருந்தும், பிணைப்புகளின் சங்கிலிகலிருந்தும் என்னால் விடுபடமுடியவில்லை. ஆனால் இயேசுவின் பிரசன்னத்தால் தொடபட்டதுமுதல் எவையெல்லாம் நான் அவரிடம் செல்வதை தடுத்ததோ அவை அனைத்தையும் உதறிபோட்டேன். அவருடைய பிரசன்னம் என்னுடைய பாவங்களை அறிக்கையிடச் செய்தது, நான் விடுதலை அடைந்தேன்.
நம்மை வெறுத்து கர்த்தருக்கு கீழ்படிய நாம் முயற்சி செய்ய வேண்டும். யாத் 19:20 – மக்கள் விரைவாக தங்களை பரிசுத்தப்படுத்தினார்கள் மேலும் கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினார் தன்னுடைய மக்களை சந்திப்பதர்காக. இயேசுவை நான் சந்தித்தபின் என்னுடைய வாழ்வு முற்றிலுமாக மாறிவிட்டது.
பிதாவே, என்னுடைய பாவத்தை சிலுவையில் சுமப்பதற்கு உம்முடைய குமாரனை அனுப்பியதற்காக நான் நன்றி கூறுகிறேன். இது என்னைப்போல பாவிகளின் இரட்சிப்புக்கு வழி திறந்துள்ளது. ஏனென்றால் ஒரு காலத்தில் நான் தொலைந்து போனேன் ஆனால் இப்போது என்னால் பார்க்க முடிகிறது. எவ்வாறு இயேசுவை தன் வீட்டில் வரவேற்றதர்காக சகேயுவின் வாழ்க்கை மாறியது மேலும் இரட்சிப்புப் அவன் வீட்டில் வந்ததோ அதேபோல ஒவ்வொரு மனிதனும் இயேசுவை தங்களுடைய இருதயங்களில் வரவேற்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
ஆமேன்.
SOL.CLARA BENEDICT AOJ
