தானியேல் – II
23-02-2022 – தேவ செய்தி

அதைக் கண்ட யாவரும் இவர் பாவியான மனுஷன் இடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்

லுக்கா 19:7

இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தது பாவிகளை இரட்சிக்கவே என வேத வசனம் கூறுகிறது.


1Timothy 1:15

யூதர்களைப் பொறுத்தவரை அவர்களை பார்க்கப்போகும் மேசியா வானவர் ராஜாவாக தன்னை ரோமர்கள் இருந்து பிடியிலிருந்து மீட்பார் எனவும் மாம்ச பிரகாரமாக நம்பினர்.


இன்னும் சொல்லப்போனால் யோவான் ஸ்நானகன் கூட இயேசுவை அவ்வாறாகவே கருதினார்.
Mat 11:3

தேவனுடைய ஆவி உடையவர்களே தேவனின் திட்டத்தை புரிந்துகொள்ள முடியும் என வசனம் கூறுகிறது.


Rome 8:5

இன்று தேவனுடைய பிள்ளைகள் திட்டத்தையும் அவருடைய எண்ணத்தையும் அறிந்து கொள்ளாமல் செயல்படுகிறது.


தேவனுடைய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம் இருப்பதனாலேயே இன்னும் தேவனுடைய வார்த்தை அனேக இடங்களில் பிரஸ்தாபிக்க படவில்லை.
நான் இயேசுவின் படையணி மூலமாக தேவன் வெளிப்படுத்தின் பிரகாரமாய்
குடி போதை மறுவாழ்வு மையத்தில் (Redemption Recovery Care) ல் ஒரு பயிற்சியை தொடங்க வேண்டும் என வெளிப்படுத்தினார்.


அநேகர் இதை எதிர்த்தனர் ஏனெனில் வேதத்தின் அத்தியாயங்கள் அவரால் புரிந்துகொள்ள முடியாது ,அனேக படிப்பறிவில்லாதவர்கள் , அவர்களின் மன நிலைமை தொடர்ந்து வகுப்புகளை கேட்பதற்கும் வேதத்தின் ஆழமான சத்தியங்களை அறிந்து கொள்வதற்கும் ஏற்றதாகவே இராது என கூறி அப்பயிற்சி நடத்துவதில் பயனில்லை எனக் கூறி.

இருப்பினும் தேவனுடைய திட்டத்தின் பிரகாரமாய் நான் அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.
தேவன் அற்புதமாக அதில் செயல்பட்டார் அனேகர் மனம் திரும்பினர் இந்த வகுப்புகள் காலை ஐந்தரை மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும்.


ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை உள்ள எல்லா காரியங்களும் அதில் கற்றுக் கொடுக்கப்படும் தேவனை அறியாத அனேகர் அப்பாவ பழக்கத்திலிருந்து வெளிவந்தன. மேலும் அநேக மற்றவர்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களாக மாறினர்.

John 4:1-14 வசனத்தில் நாம் வாசித்த பிரகாசமாய் இயேசு கிறிஸ்து பாரம்பரிய ஒரு கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் அவர் திட்டத்தின் பிரகாரம் அவர் சந்தித்த அந்த சமாரியா ஸ்திரீ அனேகன் ஒதுக்கி வைக்கப்பட்டு தள்ளப்பட்ட நிலைமையில் இருந்தவள் மூலமாக கிராமம் ரசிக்கப்பட்டது. தேவன் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மனித மூளைக்கு எட்டாத அவர்கள். தேவனுடைய ஆவி உடையவர்களே தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்ள முடியும்.


இக் கடைசி காலத்தில் அநேகர் ஒதுக்கப்பட்டு தள்ளப்பட்டவர்கள் மூலமாகவே
தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்
.

Sol. Paul Vasanthan AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *