தானியேல் – II
19-02-2022 – தேவ செய்தி

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

லூகா 19:10


சகேயுவினுடைய வீட்டில் மேற்கண்ட வசனத்தை இயேசு பேசினார். இயேசுவை சகேயு தன்னுடைய வீட்டிற்கு விருந்திற்காக அழைத்திருந்தான். இயேசுவை காண்பதற்கு அவர் பேராவலுடன் இருந்தான் மேலும் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
இயேசுவோடு சகேயு பேசிக்கொண்டிருக்கையில் அவனில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது, அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறான் மேலும் அவன் மற்றவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகவும் சட்டவிரோதமாகவும் சேர்த்த பணத்திஅ திரும்ப கொடுத்துவிட தயாராக இருக்கிறான்.


நான்கு மடங்கு நான் திருப்பி கொடுப்பேன் என்று இயேசுவுக்கு முன் அவன் வாக்குகொடுத்தான்.

தன் அவன் பாவத்திற்காக மனந்திரும்புவதும், அதற்காக பரிகாரம் செய்ய தயாராக இருப்பதும் அவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாகும்.

எவ்வாறு ஆபிரகாம் கர்த்தர் சொன்னதை முழுமையாக நம்பி தனது தந்தை மற்றும் உறவினர்களின் வீட்டை விட்டு வெளியேற தயாரானதுபோல சகேயுவும் செய்தான். கர்த்தரை நம்பி அவரை பின்பற்ற முன்வந்ததால் இயேசு அவனை அபிரகாமுன் மகன் என்று சொல்லுகிறார். இது அவனுக்கு அவனுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாகும். இயேசு இவ்வுலகிற்கு வந்த நோக்கம் இந்த மனிதனில் நிறைவேறியது. – அவர் தொலைந்தவர்களை தேடவும் அவர்களை காப்பாற்றவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார்.

அதுதான் அவருடைய ஊழியமும் கூட.
99 ஆடுகள உடன் மேய்ப்பவரிகளிடம் விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை எப்படித் தேடிச் செல்கிறார் என்பதையும் காணாமற்போன ஆட்டைக் கண்டு சந்தோஷப்படுவதைப்பற்றியும் இயேசு சொல்லுகிறார்.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக் 15:7


காணாமல் போன நாணயத்தைத் தேடும் பெண் அதைத் தேடி கண்டுபிடித்தாள். அதைக் கண்டு தன் தோழிகளுடன் மகிழ்ச்சி அடைகிறாள். காணமற்போன தன்னுடைய மகனை திரும்ப கண்டு ஒரு பெரிய விருந்தோடு அவன் வருகையை கொண்டாடுகிறார். இந்த எல்லா உவமைகளும் இயேசு இந்த உலகிற்கு வந்ததின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

(யோவா 3:17).


அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். (மத் 20:28). நம்முடைய இரட்சகர் எவ்வளவு மேன்மையானவெ. அவருடைய நாமம் மகிமைப்படுவதாக.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (லூக் 5:32).
பவுல் அப்போஸ்தலர் சொல்லுகிறார்
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1திமோ 1:15 இயேசு தன்னுடைய மகிமையான பரலோகத்தை விட்டுவிட்டு நம்முடைய இரட்சிப்புக்காக இவ்வுலகிற்கு வந்தார். நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். தேவன் அவரை மூன்றாம் நாள் எல்லாரும் காணும்படி உயிர்பித்தார். நமக்காக, அவருடைய சபைக்காக, மற்றும் அவர் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அனைவருக்காகவும் அவர் மீண்டும் வருவார். நாம் கிருபையின் யுகத்தில் இருக்கிறோம். நாம் அவரிடம் வருவோம், அவருடைய குடும்பத்தின் அங்கதினர் ஆவோம்.
ஒரு மனிதன் கர்த்தருடைய வார்த்தையாலும் பரிசுத்த ஆவியாலும் மீண்டும் பிறக்கும்போது அவனுக்குள் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவனுடைய வாழ்க்கை கண்ணோட்டம் மாறுபடுவதோடு அது அவனுடைய நடத்தையிலும் தெரிகிறது. பழைய வாழ்வில் எதையெல்லாம் மதிப்புமிக்கதாக கருதப்பட்ட அனைத்து விஷயங்களும் புதியவாழ்வில் விரும்பப்பட வில்லை. நம்மை காப்பாற்றும் இயேசு கிறிஸ்துவின் கிருபையை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருடைய சாட்சியும் இதுதான். என்னோடும் இப்படித்தான் நடந்தது. கர்த்தருடைய வார்த்தையை அதிகமான உற்சாகம் மற்றும் அன்புடன் தியானிக்க ஆரம்பித்தேன். கர்த்தர் என்னைப்பயன்படுத்தி அநேகருக்கு தம்முடைய வார்த்தையை கொடுக்கிறார். நான் இதற்காக கர்த்தருக்கு நன்றிசொல்கிறேன். அவருடைய நாமம் உயர்த்தப்படுவதாக.

அப்போ 10:36,38,40


அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

அப்போ 10:42-43


எப்பொழுது வேண்டுமானாலும் நடக்க விருக்கும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்ப்டுவதற்கு நாம் தயாராவோம்.

Sol. Salomi Kurian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *