தானியேல் – II 26-01-2022 – தேவசெய்தி

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், 

(லூக் 16:10).

மத் 25:21-25 இல் வரும் தாலந்து பற்றிய உவமை மற்றும் அதில் வரும் மூன்று சேவர்களுடைய கண்ணோட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாளி முதல் சேவனகனுக்கு ஐந்து தாலந்துகளையும், இரண்டு தாலந்துகள் இரண்டாவது சேவகனுக்கும் மற்றும் ஒரு தலந்து மூன்றாவது சேவகனுக்கும் கொடுத்தார். ஐந்து தாலந்துகள் கிடைத்த சேவகன் உடனே ஒரு தொழில் துவங்கினான் தன்னிடமிருந்த ஐந்துடன் இன்னும் ஐந்து தாலந்துகளை சேர்த்தான். இரண்டாவது சேவகனும் இரண்டை நான்காக்கினான். ஒரு தாலந்தைப் பெற்றவன் ஒன்றும் செய்ய வில்லை. தன்னுடைய நேரத்தையும் அவன் வீணடித்தான். பயணத்திலிருந்து வீடுதிரும்பிய முதலாளி தன்னுடைய சேவகர்களை அழைத்தான், தான் அவர்களிடம் கொடுத்த தாலந்துகளைப் பற்றி அவர்களிடம் கேட்டான். முதலாவது மற்றும் இரண்டாவது சேவர்களின் பதிலை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான், அவர்கள் இருவரையும் பொறுப்புள்ள மேல் பதவிகளில் வைத்தான். மூன்றாவது சேவகனோ தன்னுடைய தாலந்தை ஞானமாக பயன்படுத்த வில்லை எனவே அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டான். அவன் சோம்பேரியாக இருந்ததற்காக அவனை தண்டித்தான். இந்த உவமையின்படி நேர்மையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் வாழ்வில் முன்னேறுவார்கள். நம்பகமான சேவகர்களை இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பார்.

மத் 24:45-51 – ஒரு ஞானவானை பார்க்கிறோம், லூக் 12:42-48 நாம் ஒரு விவேகமான மற்றும் உண்மையுள்ள காரியதரிசியை பார்கிறோம்.

இந்த மூன்று உவமைகள் நம்மை எப்படி பாதிக்கின்றது என்றும் மேலும் இவைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்றும் பார்ப்போம். இந்த மூன்று உவமைகளும் நம் ஆண்டவரக்கிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். இவைகள் மூலம் நமது எஜமானரான இயேசு நம் நித்திய வாழ்வு, வாழ்வில் நம்பகத்தன்மை, நேர்மை, விவேகமாக வேலைசெய்தல் போன்றவைகளைப்பற்றி பேசுகிறார்.  இந்த வாழ்வில் நாம் தோற்றுப்போனால் அழுகையும் பற்கடிப்பும்தான் முடிவில் இருக்கும்.  இவ்வுலகில் நாம் சம்பாதிக்க கூடிய அல்லது வைத்திருக்கும் எல்லா செல்வத்தையும் விட நித்திய வாழ்வு மிகவும் மதிப்புமிக்கது என்பதை உண்ர்கிறேன்.

நாம் இரகசிய வருகைக்கு தயாராக இருக்கிறோமா? இல்லையென்றால் நம் வாழ்வில் தேவையான திருத்தங்களைச் செய்வோம்.

நான் ஒரு தொழில் செய்துகொண்டிருந்தேன். லாபம் ஈட்டுவதற்கு நிலையான சட்டமோ விதிமுறைகளோ கிடையாது. அந்த நேரத்தில் என்னுடைய லாப பங்கை மிகக் குறைந்த விகிதத்தில் சேகரித்தேன். சில நேரங்களில் என்னையே நான் ஒரு பெரிய முட்டாள் என்று நினைத்துக்கொள்வேன். அதனால்தான் என் துறையில் இருந்த மற்றவரகளைப்போல என்னால் அதிக லாப்ம் எடுக்க முடியவில்லை. எனது வாடிக்கையாளர்களிடமிருந்து லாபம் எடுப்பதில் நான் நேர்மையாக இருந்தேன். இப்படி கொள்கைகளை பின்பற்றி வாழ தூண்டியது எது என்று நினைத்து ஆச்சரியபடுகிறேன். நான் செய்துவரும் தொழில், 1980 இல் ஒரு இலாபகரமான தொழிலாகும். நான் அங்கீகரிக்கப்பட்ட பயண நிறுவனமான IATA ஐ நடத்திக்கொண்டிருந்தேன். சர்வதேச உரிமம் பெற்ற ஏஜென்சிகள் மட்டுமே டிக்கட்டுகளை வழங்க முடியும். அந்த நேரத்தில் உலகில் உள்ள அனைத்து விமான நிறுவனங்ளுக்கும் டிக்கெட்டுகளை வழங்க IATA நபர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டனர். என்னுடைய 65ஆவது வயதில் , 2017 இல் என்னுடைய தொழிலை  நல்ல விலைக்கு விற்றேன். இதை ஏன் என்னால் செய்ய முடிந்தது என்றால் நான் கர்த்தருடைய வேலையில் இருக்க ஆசைப்பட்டேன். 2018 மற்றும் 2019 இல் கேரளாவில் வெள்ளம் வந்தது. 2019 முடிவில் கொரோனா தொடங்கியது. இதனால் இந்தியாவிலும் உலகிலும் சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிகம் முற்றிலும் முடங்கியது. 2900 IATA ஏஜென்டுகள் இந்தியாவிலும் அதில் 275 ஏஜென்டுகள் கேரளாவில் மட்டுமே உள்ளனர். இவர்கள் எல்லாரிலும் நஷ்டம் இல்லாமல் தப்பியது நான்மட்டுமே. நான் சிறியவற்றில் நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருந்த காரணத்தால் கர்த்தர் என்னை பாதுகாத்தார். நான் ஒரே ஒரு ஊழியருடன் எனது அலுவலகத்தை கேரளத்தில் துவங்கினேன். பின்னர் வெவ்வேறு நகரங்களில் 21 ஊழியர்களுடன் மூன்று அலுவலகங்களை உருவாக்கினேன்.

2018 ஆம் ஆண்டில் வர இருந்த மோசமான நிலையை 2017 இல் என்னால் யூகிக்க முடியவில்லை.  ஆனாலும் மற்றவர்கள் துன்பப்படும் பெரிய இழப்பை நான் அனுபவிக்க முடியாதவாறு கர்த்தர் என்னைக் காப்பாற்றினார், என்று நான் இப்போது முழுமையாக ந்ம்புகிறேன். கர்த்தர் எப்படி தன் குழந்தைகளை நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை நான் கண்டு வியக்கிறேன். அல்லேலூயா! ஆமேன்!

Sol John Philip          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *