அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்
(லூக் 17:5).
ரோம 1:17 – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் மேலும் எபி 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்றும் வாசிக்கிறோம். ரோம 12:3 ன் படி, அவனவனுக்கு பகிர்ந்ததளித்த விசுவாசத்தின்படி நாம் அதை பாதுகாக்கலாம், இழக்கலாம் அல்லது அதிகப்படுத்தலாம். நம்முடைய விசுவாசத்தை அதிகப்படுத்த நாம் சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது.
நம் அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் அற்புதங்களை பட்டியலிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக, நமது நம்பிக்கையை சோதனை செய்ய வரும் எந்த அச்சுறுத்தலையும் சமாளிப்பதற்கு போதுமான அவருடைய சர்வ வல்லமையை நாம் நினைவுபடுத்திக்கொள்ள முடியும்.
நான் 1989 இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, என் வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்திருந்தேன். என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள ஒரு நல்ல கர்த்தருடைய மனிதனுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு பிறந்தான் தெரிந்தது என் கணவர் கர்த்தரில் நம்பிக்கையில்லாதவர் ,என்றும் கர்த்தரைப் பற்றிய காரியங்களில் எந்த ஈர்ப்பும் இல்லையென்றும் அறிந்தேன். என்னுடைய உள்ளம் உடைந்தது ஆனால் கர்த்தர் தன்னுடைய வார்த்தையினால் என்னை பெலப்படுத்தினார், மேலும் கைவிடாமல் விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு கூறினார்.
நான் ஒருபோதும் என்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தவில்லை, மாறாக பாசமுள்ள மற்றும் புரிந்துகொள்ளும் மனைவியாக இருக்க முயற்சித்தேன், எல்லா நேரங்களிலும் கணவருடைய இரட்சிப்புக்காக ஜெபித்து விசுவாசித்தேன். 25 ஆண்டுகளுக்கு பின் கர்த்தர் அவரை தொட்டார் மேலும் அவருடைய வாழ்வு முற்றிலும் மாறிவிட்டது. இப்பொழுது நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக் கர்த்தருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம். என் விசுவாசத்தை தக்கவைத்துக்கொள்ள தேவன் எனக்கு உதவினார் மேலும் அவருடைய வார்த்தைக்கு மதிப்பளித்தார்.
நம்முடைய சூழ்நிலையை நாம் பார்க்கும்போது நமது விசுவாசம் நம்மை தோல்வி அடையச் செய்யலாம. இயேசுவின் மீது தன்னுடைய பார்வை இருந்த வரையில் பேதுரு கடல் மீது நடந்தார். ஆனால் ஒருமுறை கடல் கொந்தளிப்பைப் பார்த்தபோது அவன் மூழ்க ஆரம்பித்தான். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நம் விசுவாசத்தை தக்க வைத்துக்கொள்ள கர்த்தர் நம்க்கு எல்லாவற்றையும் செய்வார் என்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.
கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அது நிச்சயம் நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்கும். கர்த்தருடைய வசனத்தை நாம் தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும் முடிந்தால் சில வசனங்களை மனப்படம் கூட செய்துவைத்துக்கொள்ளலாம். நம்முடைய விசுவாசத்தை நிறப்ப வேதம் ஒரு பெரிய ஆதாரம்.
ஆவியிலும் உண்மையிலும் கர்த்தரை துதித்து ஆராதிப்பது ஒரு உறுதியான, தடுமாறாத விசுவாசத்தை கட்ட உதவும். நாம் விசுவசிக்கும் போது கர்த்தருடைய மகிமையை காண்போம். நமது நம்பிக்கை நிச்சயமாக உலகை வெல்லும்.
ஜெபம்: எங்களுடைய விசுவாசத்தை துவக்குபவரும், அதை முடிவுக்கு கொண்டுவருபவருமான எங்கள் அன்பின் பரலோக பிதாவே, உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம், உம்மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உமது வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த காலத்தில் நீர் எங்களுக்குச் செய்த மாபெரும் அறிபுதங்களை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு நம்பிக்கையில் வலுவாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், பிதாவே. ஆமேன்.
Sol. Jeslyn Jeyakumar
