தானியேல் – II 22-01-2022 – தேவ செய்தி

அதற்குஅவன்: அவர்கள்மோசேக்கும்தீர்க்கதரிசிகளுக்கும்செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்துஒருவன்எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்றுசொன்னான்என்றார்.

(லூக் 16:31)

லாசர் மற்றும் ஐசுவரியவான் உவமை மூலம் நியாயபிரமாணம், தீர்க்கதரிசிகள் மற்றும் பரலோக ராஜ்யத்தைப் பற்றி பேசுகையில் இந்த வார்த்தைகளை இயேசு பரிசேயர்களிடமும் அவருடைய சீடர்களிடமும் கூறுகிறார். இந்த வசனங்களின் மூலமாக ஏழை மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று அநேகர் நம்மிடம் சொல்ல நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் இயேசு இன்னொறு முக்கியமான ஒரு கருத்தை முன்வைக்கிறார், ஒருவன், நியாயபிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளின் மூலமாக கர்த்தருடைய வார்த்தையை கேட்டும் நம்ப வில்லை என்றால் மேன்மையான அற்புதங்கள், அடையாளங்கள்  மற்றும் சாட்சிகள் வீணாக போகும்.

அற்புதங்களை கண்டு மக்கள் அவர் மீது விசுவாசம் வைத்தார்கள், (யோவா 2:23). ஆனால் அவரை குறித்து தீர்க்கதரிசிகள் சொன்ன வாக்கைப்பற்றி அவர் பேசுகையில் அவருடைய அற்புதங்களை கண்டு அவரை பின்பற்றிய சீடர்களில் பலர் அவரை விட்டு பின்வாங்கி போனார்கள் (யோவா 6:60,66). நோயிலிருந்து குணமாக வேண்டும், விடுதலை பெற வேண்டும், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம், குடும்பம், தேசம் இவைகளைக்கு விடைதேடி அலைபவர்களுக்கு வெளிப்படையான அடையாளங்கள் கிடைக்காவிட்டாலோ அல்லது அவர்கள் நினைத்ததற்கு எதிராக நடந்தாலோ அவர்கள் விசுவாசத்தில் பின்வாங்கி போகிறார்கள்.  இன்னும் சிலர் அநேக அற்புதங்கள் அடையாளங்களை கண்டாலும் நம்பிக்கையில்லாமலும், கர்த்தருடைய வசனத்தை விசுவசிக்காமலும் இருக்கிறார்கள். ரோமர் 10:17 இல் கர்த்தருடைய வார்த்தையை கேட்பது இரட்சிப்புக்கான சத்தியத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்குகிறது என்றும் மேலும் இதில் ஒரு அடையாளத்தின் பங்கு இருக்கலாம் இல்லாமலும் போகலாம் என்றும் பார்கிறோம்.

என்னுடைய மாமாவின் மறைவுக்குப் பிறகு  என் அத்தை மிகவும் தனிமையாக இருந்தார்.  அவருடைய மகனும் மருமகளும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தது அவருக்கு இன்னும் வேதனையையும் சுமையையும் சேர்த்தது. அந்த வேளையில் அவருடைய இரண்டாவது பேரக்குழந்தை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என கேள்விபட்டு மிகவும் துடித்துப்போனாள். இயேசுவின் படை அணியின் மூலம் நடத்தப்படும் “பவுல் விடுதலைப் பள்ளி” இல் பயின்றபடி கர்த்தருடைய வார்த்தையின் மூலம் அவர் உதவி தேடினார். அதன் பலனாக அவருடைய மகனும் மருமகளும் ஒன்று சேர்ந்தனர் மேலும் பேரக்குழந்தை புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணம் பெற்றது. இந்த அடையாளங்கள் அவருடைய விசுவாசத்தை ஊக்குவித்தது ஆனால் வேத வார்த்தைதான் அவரை நம்பவைத்தது. இப்போது அவரது நோயிலும் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை என்றாலும் அறிகுறிகளை தேடுவதற்கு பதிலாக, விடுதலைதரக்கூடிய சத்தியத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்.

ஒரு அனுபவத்தின் விளைவாகவோ, ஒரு தேவதூதர் தோன்றியதன் விளைவாகவோ, மரித்தோரிலிருந்து யாராவது திரும்பிவந்ததன் விளைவாகவோ அல்லாமல் கர்த்தருடைய வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். லூக் 16:17 – வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும் வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாய் இருக்கும். கர்த்தருடைய சேனையின் வீரர்களாகிய நாம் அவருடைய வார்த்தையில் கவனம் செலுத்துவோம், மேலும் நாம் யாரோடு வேதத்தை பகிர்ந்து கொள்கிறோமோ அவர்களிடம் அக்கறையாக இருப்போம், தரிசித்து நடவாமல் விசுவசித்து நடக்க நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.

Sol. Aphirancy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *