தானியேல் – II 20-01-2022 – தேவ செய்தி

,அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை;

 (ஏசாயா 9:7)

இவ்வுலகில் ஒரு அரசை நிறுவ இயேசு கிறிஸ்து வந்தார். அவர் காலத்தில் வாழ்ந்த  லூசிஃப்ரை தவிர வேறுயாரும் இதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரிய வில்லை. ஏனென்றால் மனிதர்கள் தங்களுடைய உண்மை நிலையிலிருந்து விழுந்த பிறகு அதன் மதிப்பையோ, பொருளையோ புரிந்துகொள்ள வில்லை. ஆனால் கர்த்தருடன் இருந்த லூசிபர் கர்த்தரின் மகத்துவத்தையும், குண நலன்களையும் அறிந்திருந்தான், அவனுடைய அபார ஞானத்தில் இயேசுவை சோத்தித்து, இயேசுதான் தன் தலையை நசுக்கி பூமியில் தன் ராஜ்யத்தை நிறுவ வந்த ராஜா என்று கண்டுபிடித்தான். இயேசு அதை நிறைவேற்றினார். அவர் பூமியில் ஆதாம் மற்றும் அவரது சந்ததியினரின் ஆதிக்கத்தை மீடெடுத்தார், மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆள்வதற்கான தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவினார்.

தன்னுடைய ராஜ்ஜியத்தை இந்த பூமியில் நிறுவ விரும்பும் எந்த அரசனும் முதலில் செல்வம், சொத்துக்கள், பொன், அரண்மனைகள் , இராணுவப் படைகள் போன்றவற்றைக் குவித்து தன்னை வலிமையாக்குவான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்த துவங்குவான்.

ஆனால் இயேசுவின் இராஜ்யம் முற்றிலும் மாறானது.

அது மனிதர்களுடைய இருதயங்களில் நிறுவப்படுகிறது.  அவர் மனிதனை சாத்தானின் பொய், வஞ்சகத்திலிருந்து காப்பாற்றுகிறார், அவர்களுடைய மனதில் சாத்தானால் கட்டப்பட்ட அரண்களை உடைத்தெறிந்து அவர்களை இருளிலிருந்து விடுவிக்கிறார். சத்தியத்தை அறிய அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பயம், தடைகள், கவலைகள், ஏமாற்றங்கள், நிராகரிப்புகள் அனைத்தும் மறைந்துபோயிற்று, இப்போது இந்த பூமியை அரசாள்பவர்களாக தங்களை கருதுகிறார்கள். அவர்கள் பூமி, வானம் மற்றும் கடல் ஆகியவற்றை ஆளத்தொடங்குகிறார்கள். (ஆதி 1:28).

இயேசுவினுடைய அரசின் தலைநகர் மக்களின் இருதயமே. ஒரு நபர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படியவும் தனது வாழ்க்கையை ஒழுங்கமைக்க தன்னை ஒப்புகொடுப்பதன் மூலமும் அவருக்கு விடுதலை கிடைக்கும். மனிதனால் உறுவாக்கப்பட்ட பாரம்பரியம், (பாரம்பரிய சபைகள்) மதம், ஜாதி, இனம் அனைத்து நுகத்தடிகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது.  அவர்கள் ஒரு புதிய  ஒழுங்கு ஒரு புதிய உலகில் நுழைந்து புதிய இயல்பு மற்றும் பண்புகளுடன் புதிய சிருஷ்டியாக மாறுகிறார்கள்.  இது தொற்றக்கூடியது. இதயத்திலிருந்து இதயத்திற்கு, ஒரு வாழ்வில் இருந்து இன்னொறு வாழ்விற்கு தொற்றுகிறது. இதை அனுபவித்தவர்களால் இதைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்கவே முடியாது.

இதுபோல இயேசுவின் அரசை மனித இருதயங்களில் நிறுவுவதற்கான பணி 2022 ஆண்டுகளுக்கு முன்பு பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட பெந்தகோஸ்தே நாளன்றே துவங்கிவிட்டது. அது எருசலேமிலிருந்து அந்தியோக்கியா, ரோமாபுரி, கிரிஸு போன்ற பல நாடுகளில் இன்றும் உலகமுழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. லூசிபர் இதை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்தான் ஆனால் எங்கெல்லாம் அவன் முயன்றானோ அங்கெல்லாம் அது இன்னும் அதி வேகமாக பரவியது.  இது நபருக்கு நபர், வீட்டிற்கு வீடு, குடும்பத்திற்கு குடும்பம், நகரத்திற்கு நகரம் நாட்டிற்கு நாடு போன்றவாறு பரவுகிறது. இது எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிற குறைவதில்லை.

இது நிதி, கலாச்சார, மத சமூக மற்றும் அரசியல் தடைகள் அனைத்தையும் கடந்து செல்கிறது.

இயேசுவின் அரசாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவர்களில் முதன்மையானவர்கள் ரோமை பேரரசு அன்று இந்த முழு பூமியை உள்ளடக்கிய ஆட்சி அவர்களுடையதாகும்.   கி.பி 3ஆம் நூற்றாண்டில் ரோம பேரரசு பரிதாபமாக வீழ்ச்சி அடைந்து இயேசுவின் அரசுக்கு வழி வகுத்தது. ரோம பேரரசு இயேசுவை தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த அதிகரிப்பின் இரகசியம் என்ன?

இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தின் குடிமகனாக இருப்பவர் இருதயத்தில் அமைதி ஆட்சி செய்கிறது. ஜெயன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஒரு பையனின் வாழ்க்கை மிகவும் கவலைகிடமாய் இருந்தது. தன்னுடைய தாயோடு அவன்  தனியாக வாழ்ந்து வந்தான், அவனுடைய தாயும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப்போனாள்.  தாயைபிரிந்த அவன் மன அழுத்தத்ற்கு  தள்ளப்பட்டான். ஆறு மாதங்கள் கழிந்தபின் ஒரு நாள் காலையில் அவனுக்கு கடுமையான மாரடைப்பு வந்தது மருத்துவர் அவனுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே கொடுத்தார். சிகிச்சை துவங்குவதற்க்கு முன்பாக அவனே அனைத்து கோப்புகளிலும் கையொப்பம் இட்டான். நாங்கள் அவனை சந்தித்த வேளையில் அவனால் தூங்க முடியவில்லை, சத்தமாக பேசமுடியவில்லை, கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்தான், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிக்க இயலவில்லை. நாங்கள் அவன் மீது மிகவும் பரிதாபப் பட்டோம், அவனை எங்களோடு தங்க சம்மதித்தோம். நாங்கள் அவனுக்காக ஜெபித்தோம். எட்டு நாட்களுக்கு பிறகு அவன் பேசினான், “நான் இப்போது நன்றாக இருக்கிறேன், உடல் சுகத்தைவிட  இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன், என்னால் நன்றாக தூங்க முடிகிறது, எனது கவலைகள் எல்லாம் என்னைவிட்டு நீங்கிவிட்டது.”

இது எவ்வாறு நடந்தது என்றால் இயேசு அவனுடைய இருதயத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டார். இயேசுவின் அரசாங்கத்தின் வளர்ச்சிக்கும் அதனுடன் சேர்ந்துவரும் சமாதானத்திற்கும் முடிவே இராது. இந்த அரசு முழு பூமியையும் நிறப்பும்போதும், அனைத்து மக்களையும் (கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்) இந்த இந்த அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும்போது பரலோகமே கீழே பூமிக்கு இறங்கிவரும் மேலும் புதிய வானமும் புதிய பூமியும் நிறுவப்படும். ஆம் அவருடைய அரசுக்கு முடிவே இராது. அது எப்போதுமே பெருகிக்கொண்டே இருக்கும்.

இதுதான் நம்முடைய அழைப்பு. ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் மக்களுடைய இருதயங்களில் இயேசுவின் அரசை கொண்டுவருவது. ஒவ்வொருவரும் சாத்தானின் பொய் மற்றும் வஞ்சகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இயேசு கொடுக்கும் சமாதானத்தை அனுபவிக்க வேண்டும்.

Sr. Angelica AOJ   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *