தானியேல் – II 18-01-2022 – தேவ செய்தி

உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.

லூக் 16:26

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தை  பற்றி தியானித்துக் கொண்டிருக்கையில் இரண்டு காரியங்கள் தெளிவாக தெரிந்தது. முதலாவது “இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும்,” இரண்டாவது,   அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் நரகத்தில் இருப்பவர்கள் பரத்திற்கு வர விரும்புவார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரத்தில் இருப்பவர்கள் நரகதிற்கு செல்ல விரும்புவது ஏன்? இந்த வசனத்தின்படி யாராலும் கடந்துச் செல்ல முடியாது. ஆனால் பரத்திலிருந்து நரகத்திற்குச் செல்ல ஏன் விரும்புவார்கள் என்று சிந்திப்போம். இவ்வுலகில் பல்வேறு சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவித்தப் பிறகு இப்போது சர்வவல்லமையுள்ள தேவனின் முன்னிலையில் பரலோகத்தில் மகிமையான செல்வங்களுடனும் இருப்பவர் ஏன் நரகத்திற்கு செல்ல விரும்ப வேண்டும்? இது உண்மையென்றால் நிச்சயமாக நித்திய வாழ்வை இழந்த தன்னுடைய உறவினர்களை காப்பாற்றுவதற்காகத்தான் இருக்கும். ஆனால் இவ்வாறு செய்ய நினைப்பது சாத்தியம் அல்ல.

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, (எபி 9:27).

என்னுடைய குடும்ப ஆல்பங்களைப் பார்ப்பது வழக்கம், இந்த உலகை விட்டுச் சென்ற குடும்ப உறுப்பினர்களை பார்த்து, இவர்களுக்கு இரட்சிப்பு கிடைத்ததா என்றும், அவர்கள் எவ்வாறு கர்த்தரை எதிர்கொண்டிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அநேக நண்பர்களும் நமது குடும்பத்தினரும் இரட்சிப்பை பெறவில்லை ஆனாலும் நமக்கு மத்தியில்தான் சாப்பிட்டுக்கொண்டும், குடித்துக்கொண்டும், பயணம் செய்து கொண்டும் இருக்கிறார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவருடைய கிருபையின் மூலம் இரட்சிக்கப்பட்ட நமக்கு மட்டுமே அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும்.

வேதம் சொல்லுகிறது, “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். (பிரசங்கி 7:2)

என்னுடைய தூரத்து உறவினர்கள், சில நண்பர்களின் மரணத்தை  கடந்த சில நாட்களாக நான் பார்த்தேன். ஆனால் இவர்களில் பெரும்பாலான நபர்கள் ஆண்டவராகிய இயேசுவை எதிர்கொள்ள தயாராகவே இல்லை.

ஆனால்  எபிரேயர் 10:22 இல் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.”

இரட்சிப்பு இல்லாமலும், இயேசுவோடு உடன்படிக்கை ஏற்படுத்தாமலும் அவர்கள் நித்திய வாழ்வை இழந்து விடுவார்கள்.  கர்த்தரை அறியாதவர்களை நாம் சந்திக்கும் போதும், அவர்களோடு உண்ணும்போதும், பயணம் செய்யும் போதும் ஒவ்வொரு ஆத்துமாவின் மீதும் கர்த்தருக்கு இருக்கும் பாரம் நமக்கும் வரவேண்டும். இப்படியாய் கர்த்தர் உங்கள் மூலம் அவர்களை காப்பாற்றுவாராக.

ஜெபம்: பரலோக பிதாவே உமக்கு இருக்கும் ஆத்தும பாரத்தை எங்கள் இருதயத்தில் ஊற்றுவீராக. இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களைப் பற்றி நாங்கள் கவலைபடவும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் படி எப்போதும் செயல்படவும், நீர் கொடுக்கும் இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொள்ளும்படியாயும் நாங்கள் ஜெபிக்கின்றோம். ஆமேன்.

Sol.Leo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *