தானியேல் – II 09-01-2022 – தேவ செய்தி

உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

யாத் 15:7

யாத் 15: மீது தியானம் செய்துகொண்டிருக்கையில் கர்த்தருடைய ஆவி என்னை எபே 6:11-13 படிக்க அழத்துச் சென்றார்.

நாம் மனிதர்களோடு யுத்தம் செய்யவில்லை ஆனால் என்னுடைய 13 வருட வாலிப வயதை திருடிய துரைத்தனங்களோடும், அந்தகார லோகாதிபதிகளோடும் யு/௺ௐஈத்தம் செய்கிறோம்.

நாம் கேரள மாநிலத்தில் உள்ள மார்தோமா கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன் மேலும் எனது திருமணம் ஒரு ரோமன் கத்தோலிக்கருடன் நடந்தது. கடந்த 45 ஆண்டுகளாக நான் இரட்சகரை அறியவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்புதான் கர்த்தர் என்னை அழைத்தார். ஆழமாகிய வேரூன்றிய மன்னிக்க முடியாத மற்றும் கசப்பான காடுகளில் காணாமல் போன ஆடுகளில் நானும் ஒருத்தி. என்னுடைய அறியாமையால் மாமியார் மற்றும் கணவருடைய தங்கையுடன் மனகசப்பில் இருந்து வேதனை நிறைந்த 13 வீணடித்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இயேசுவின் படை அணி (AOJ) வோடு சேர வாய்ப்பு கிடைத்தது. மன்னித்தல் மற்றும் ஒப்புறவாதல் என்னும் வகுப்பின் மூலமாக என்னுள் இருந்த அரணான மன்னியாமை மற்றும் மனகசப்பு என்னைவிட்டு நீங்கியது. 

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரி 4:4.

மீண்டும் கர்த்தர் உபாகமாம் 9:3 காணச் செய்தார்,

உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர்உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

நாம் வேலையை துவங்குவதற்குமுன் சுத்தமாக்கப்பட்டு ஒரு முன்னோடியாக மாற வேண்டும்.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். – யாத் 14:14

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி -எண் 33:52

என்னுடைய இருதய ஆலயத்தை  24×7 சுத்தம் செய்வதில் கர்த்தர் எனக்கு உதவி செய்தார். அதனால் என் வாழ்க்கையில் உள்ள எனது பெருமை, பதவி, அதிகாரம், அந்தஸ்து, சாதனைகள், சுய நீதி, பொறாமை, எரிச்சல் மன்னிக்காதன்மை  விமர்சனம் செய்வது போன்ற அனைத்து சிலைகளையும் கிருபையினால் விரட்டியடித்து அவருடைய அழைப்புக்கு நான் தகுதியானவளாக இருக்கிறேன்.

கர்த்தருடைய இளைப்பாறுதலில் உறுதியாக நிலைத்திருக்க இந்த வழிகாட்டுதல் என் இதயத்தில் உறுதியாக பதிந்தது.  (மத் 11:28-30, யாக்கோ 4:7).

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். மத் 5:35

துதியும் கனமும் இயேசு ஒருவருக்கே.

Sol. Jasmine James

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *